தமிழ்நாடு (Tamil Nadu)

ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2024-08-25 07:45 GMT   |   Update On 2024-08-25 07:45 GMT
  • ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.
  • ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குவிய தொடங்கியுள்ளனர்.

ஒகேனக்கல்:

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளம் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு விடுமுறை நாட்களிலும் வார விடுமுறை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கர்நாடகா அணைகளில் இருந்து வெளியறே்றப்பட்ட தண்ணீரால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. அதனை தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக காவிரி ஆற்றில் குறைந்ததையடுத்து சின்னாறு கோத்திக்கல் பரிசல் துறையிலிருந்து பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக வந்ததால், குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது நீக்கி சுற்றுலாப் பயணிகள் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.

குளிப்பதற்காக விதிக்கப்பட்ட தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கியதால், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் நேற்று முதலே சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். மேலும், இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகள் தொடர் விடுமுறை என்பதால் இன்று ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குவிய தொடங்கியுள்ளனர்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்தும் அருவி மற்றும் ஆற்றுபகுதிகளில் குளித்தும். மீன் சமையலை உண்டும் ருசித்தும் மகிழ்ந்தனர்.

கடந்த வாரங்களில் நீர்வரத்து அதிகரித்ததின் காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்ததன் காரணமாக மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததை தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் பரிசல் ஓட்டிக்கல் மாசஜ்செய்யும் தொழிலாளர்கள் மீன் சமையல் செய்யும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

Tags:    

Similar News