தமிழ்நாடு (Tamil Nadu)

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோருக்கு ரூ.2 லட்சம் நிதி- மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Published On 2024-07-15 07:30 GMT   |   Update On 2024-07-15 07:30 GMT
  • 2005-ம் ஆண்டு முதல் இதுவரையில் ரூ.6 கோடியே 3 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.
  • கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏழை குடும்பத்துக்கு இந்த நிதி உதவி காசோலையாக அனுப்பப்பட்டது.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் நலிந்தோருக்கு மருத்துவ உதவி நிதியாக வழங்கப்பட்டு வருகிறது. 2005-ம் ஆண்டு முதல் இதுவரையில் ரூ.6 கோடியே 3 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏழை குடும்பத்துக்கு இந்த நிதி உதவி காசோலையாக அனுப்பப்பட்டது.

Tags:    

Similar News