தமிழ்நாடு (Tamil Nadu)

பாளையில் ஒண்டிவீரன் சிலைக்கு அரசு சார்பில் கனிமொழி எம்.பி. மரியாதை

Published On 2023-08-20 07:04 GMT   |   Update On 2023-08-20 07:04 GMT
  • விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் இன்று.
  • ஒண்டிவீரன் சிலைக்கு அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நெல்லை:

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளை நீதிமன்றம் எதிரில் உள்ள மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் கார்த்திகேயன், எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், ஞானதிரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் மாலைராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், பேச்சி பாண்டியன், மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News