தமிழ்நாடு (Tamil Nadu)

காஞ்சிபுரத்தில் நாளை மின்தடை

Published On 2023-01-06 06:32 GMT   |   Update On 2023-01-06 06:32 GMT
  • ஓரிக்கை 110/33-11 கே.வி துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள் செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசாபேட்டை ஆகிய பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மின் செயற்பொறியாளர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஓரிக்கை 110/33-11 கே.வி துணை மின்நிலையத்தில் நாளை (7-ந் தேதி சனிக்கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான, வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள் காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனாம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டுர் பகுதி,

திருக்காலிமேடு, டோல்கேட், விஷார், மாமல்லன் நகர், காந்திரோடு, ஐயம்பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள் செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசாபேட்டை ஆகிய பகுதிகளில் நாளை (7-ந் தேதி) சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News