தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி- பிரேமலதா குற்றச்சாட்டு

Published On 2024-09-14 08:55 GMT   |   Update On 2024-09-14 08:55 GMT

    சென்னை:

    கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கட்சியின் 20-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது.

    இதில் தே.மு.திக. பொதுச் செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விஜயகாந்த் சிலை மற்றும் கேப்டன் கோவில் பெயர் பலகை ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

    தே.மு.தி.க. துணை செயலாளர் பார்த்தசாரதி மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். பின்னர் பிரேமலதா அளித்த பேட்டி வருமாறு:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்விலேயே முடிந்துள்ளது. அவர் மருத்துவ சிகிச்சைக்காகத்தான் சென்று வந்துள்ளார். முதலீடுகளை ஈர்த்தது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். விஜயகாந்த் இல்லாமல் நடைபெறும் ஆண்டு விழாவில் கொடியேற்றி இருப்பது வருத்தமாக உள்ளது.

    அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் யதார்த்தமாக பேசியதும் மன்னிப்பு கேட்டதும் பெரிதாக்கப்பட்டுள்ளது. இதனை தி.மு.க.வும், காங்கிரசும் சாதமாக்கியுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தே.மு.தி.க. தொடக்க விழாவையொட்டி அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த நாளில் நாம் எடுத்துக்கொண்ட கேப்டனின் கனவு மற்றும் லட்சியத்தை நிச்சயமாக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வென்றெடுப்போம் என்று சபதம் ஏற்று. இந்த நாளில் இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே, தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற தலைவரின் தாரக மந்திரம் படி எட்டுத்திக்கும் நமது முரசு வெற்றி முரசாக கொட்ட அனைவரும் ஒன்றாக இணைந்து உழைப்போம், வெற்றி பெறுவோம் என இந்த நன்னாளில் அனைவரும் உறுதிமொழி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.

    Tags:    

    Similar News