தமிழ்நாடு (Tamil Nadu)

ரூ. 4 கோடி பறிமுதல் வழக்கு- விசாரணைக்கு தடைகோரி மனு தாக்கல்

Published On 2024-05-22 00:59 GMT   |   Update On 2024-05-22 00:59 GMT
  • பாஜக தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்.
  • மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சி.சரவணன் முன்னிலையில் வருகிறது.

தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பாஜக தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எந்தக் காரணமும் இல்லாமல் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என கேசவ விநாயகம் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், எனக்கும எந்த தொடர்பும் இல்லை எனவும் கேசவ விநாயநகம் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சி.சரவணன் முன்னிலையில் வருகிறது.

Tags:    

Similar News