தமிழ்நாடு (Tamil Nadu)

கரூர் மனோகரா கார்னர் பகுதியில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தி.மு.க.வினர்

செந்தில்பாலாஜிக்கு ஜாமின்: கரூரில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Published On 2024-09-26 06:31 GMT   |   Update On 2024-09-26 06:31 GMT
  • செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் மனோகரா கார்னர் பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
  • 15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவதால் கரூரில் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கரூர்:

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கியதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கோர்ட்டு தீர்ப்பு வெளியானதும் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் மனோகரா கார்னர் பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர். பின்னர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

 

கரூரில் திரண்ட தி.மு.க.வினரை காணலாம்.

15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவதால் கரூரில் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அமைச்சராக எந்த தடையும் இல்லை என்று செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கூறியிருப்பதால் அவரை மீண்டும் அமைச்சர் ஆக்கவேண்டும் என்றும் தொண்டர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

Tags:    

Similar News