தமிழ்நாடு (Tamil Nadu)

திருவள்ளூர் அருகே வீட்டில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு

Published On 2022-07-16 10:02 GMT   |   Update On 2022-07-16 10:02 GMT
  • புதரில் இருந்து வந்த சுமார் 5 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு வீட்டுக்குள் புகுந்தது.
  • தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் புகுந்த பாம்பை தேடினார்கள்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த பிஞ்சிவாக்கம் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (52). கொத்தனார். அவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் வீட்டில் இருந்தார்.

அப்போது புதரில் இருந்து வந்த சுமார் 5 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு வீட்டுக்குள் புகுந்தது. இதனால் அலறியடித்தபடி வீட்டில் இருந்த அனைவரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து பேரம்பாக்கத்தில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் புகுந்த பாம்பை தேடினார்கள்.

அப்போது பாம்பு வீட்டின் ஒரு மூலையில் பாத்திரத்திற்கு இடையே ஒளிந்து கொண்டிருந்தது. அதை லாவமாக பிடித்த தீயணைப்புத் துறையினர் பத்திரமாக பூண்டி காப்பு காட்டில் விட்டனர்.

Tags:    

Similar News