தமிழ்நாடு

வடலிவிளை உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள்- அடிக்கல் நாட்டினார் விஜய் வசந்த் எம்.பி.

Published On 2023-09-12 16:30 IST   |   Update On 2023-09-12 16:30:00 IST
  • பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் தேவை என்ற பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
  • காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி:

நாகர்கோவில் வடலிவிளை உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் தேவை என்ற பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்த ரூ. 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார், மண்டல தலைவர், அப்பகுதி கவுன்சிலர், பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News