தமிழ்நாடு (Tamil Nadu)

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,773 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2023-11-04 05:33 GMT   |   Update On 2023-11-04 05:33 GMT
  • நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
  • கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 700 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 64.77 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4, 773 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 700 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று பவானி ஆற்றுக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.34 அடியும், பெரும்பள்ளம் அணியின் நீர்மட்டம் 6.23 அடியும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.74 அடியும் உள்ளது.

Tags:    

Similar News