தமிழ்நாடு (Tamil Nadu)

சின்னவர் கையில் உளவுத்துறை...!

Published On 2023-07-22 07:34 GMT   |   Update On 2023-07-22 07:34 GMT
  • உதயநிதியின் வளர்ச்சியை பார்த்து பிரமித்ததோடு உளவுத்துறை பணிகளிலும் தனிகவனம் செலுத்தும் படி கூறியிருக்கிறார்.
  • கிட்டத்தட்ட சின்னவர் கையில் உளவுத்துறை வந்துவிட்டதாகவே கூறுகிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு நிர்வாக ரீதியான பணிகளில் தீவிரம் செலுத்தி வந்ததோடு நிர்வாகத்தில் சில குளறுபடிகளையும் ஆய்வு செய்து உளவுத்துறையின் செயல்பாடு சரியில்லை என்று தந்தை மு.க.ஸ்டாலினிடம் பிட்டு பிட்டு வைத்துள்ளார்.

அதைகேட்டதும் உதயநிதியின் வளர்ச்சியை பார்த்து பிரமித்ததோடு உளவுத்துறை பணிகளிலும் தனிகவனம் செலுத்தும் படி கூறியிருக்கிறார். அதனால் இப்போது கிட்டத்தட்ட சின்னவர் கையில் உளவுத்துறை வந்துவிட்டதாகவே கூறுகிறார்கள். இதனால் உளவுத்துறையினரும் உஷார் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News