கர்நாடக தேர்தல்- தமிழர்கள் பகுதியில் கே.எஸ்.அழகிரி 3 நாட்கள் பிரசாரம்
- தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய செல்கிறார்.
சென்னை:
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சென்றுள்ளார்கள்.
அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் கர்நாடகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தேர்தல் முடியும் வரை அவர்களை கர்நாடகத்திலேயே முகாமிட்டு இருக்கும்படியும் அகில இந்திய தலைமை உத்தரவிட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய செல்கிறார். வருகிற 5-ந்தேதி முதல் 3 நாட்கள் அவர் பிரசாரம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக நாளை பெங்களூர் புறப்பட்டு செல்கிறார்.
தமிழர்கள் பகுதியில் முகாமிட்டுள்ள நிர்வாகிகள் கூறும்போது, 'இந்த முறை தமிழர்கள் வாக்குகள் காங்கிரசுக்கு ஆதரவாக விழும் என்று தெரிவித்தனர். தொகுதிகளின் நிலவரம் பற்றி கட்சி தலைமைக்கும் அறிக்கைகள் கொடுத்து வருகிறார்கள்.