தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது- அமைச்சர் துரைமுருகன்

Published On 2024-07-02 06:56 GMT   |   Update On 2024-07-02 09:24 GMT
  • தி.மு.க. அமைச்சர்கள் பல்வேறு தேர்தலில் பணியாற்றியவர்கள் என்பதால் எளிதில் வெற்றி பெறுவோம்.
  • பாலாற்றின் குறுக்கே ஆந்திர முதல்வர் தடுப்பணை கட்டுவோம் என்பார். நாங்கள் அதனை தடுப்போம்.

விக்கிரவாண்டி தொகுதியில் அமைச்சர்கள் துரை முருகன், பொன்முடி, சி.வெ.கணேசன், சேகர்பாபு ஆகியோர் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பின்னர் பேட்டி அளித்த துரைமுருகன் கூறியதாவது:-

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி, மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. அமைச்சர்கள் பல்வேறு தேர்தலில் பணியாற்றியவர்கள் என்பதால் எளிதில் வெற்றி பெறுவோம்.

பா.ம.க.வினருக்கு வன்முறையில் ஈடுபடுவது தான் வேலை. அவர்களுக்கு அதுதான் தெரியும்.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர முதல்வர் தடுப்பணை கட்டுவோம் என்பார். நாங்கள் அதனை தடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News