தமிழ்நாடு

பொறியியல் கலந்தாய்வு 22-ந்தேதி தொடங்குகிறது... அமைச்சர் பொன்முடி

Published On 2024-07-15 07:11 GMT   |   Update On 2024-07-15 08:04 GMT
  • பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு செப்டம்பர் 11-ந்தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 53 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். பொறியியல் கலந்தாய்வு 22-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ந் தேதி வரை நடைபெறும். பல்வேறு பிரிவுகளாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறும்.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன.

அரசு பள்ளி மாணவர்கள் நலனில் இந்த அரசு அக்கறை கொண்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

கலந்தாய்வு முடிந்த பிறகும் பொறியியல் இடங்கள் காலியாக இருந்தால் வரண்டா அட்மிஷன் நடத்தப்படும். மாணவர்கள் கல்லூரிகளில் நேரடியாக சேர்க்கப்படுவார்கள். பொறியியல் கலந்தாய்விற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே கலந்தாய்வு நடத்தப்பட உள்ள கல்லூரிகள் எண்ணிக்கை எத்தனை, அவற்றில் உள்ள இடங்கள் எவ்வளவு? என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த ஆண்டு புதிய கல்லூரிகள் இடம் பெற்றுள்ளதா? ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் எதுவும் மூடப்பட்டதா? எந்தெந்த கல்லூரிகளில் புதிதாக பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டின் விகிதாச்சாரப்படி ஒவ்வொரு பிரிவுக்கும் எவ்வளவு இடங்கள் என்பது போன்ற முழு விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த இந்த பணி நிறைவு பெற்று இன்று மாலை தொழில்நுட்ப கல்வி ஆணையரிடம் வழங்கப்படும்.

சீட் மேட்ரிஸ் விவரம் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை இணைய தளத்தில் வெளியிடப்படும்.

Tags:    

Similar News