தமிழ்நாடு (Tamil Nadu)

பாராளுமன்ற தேர்தல்- தமிழக விவசாயிகள் சங்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

Published On 2024-04-05 07:07 GMT   |   Update On 2024-04-05 07:07 GMT
  • கோவையில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தங்கினார்.
  • அகில இந்திய மீனவர் சங்கம் தலைவர் சுப்பிரமணியமும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினார்.

சேலம்:

பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கனவே பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கோவையில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தங்கினார்.

இன்று காலை எடப்பாடி பழனிசாமியை தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ. சின்னுசாமி, மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் சந்தித்து நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழக விவசாயிகள் சங்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கினர். தொடர்ந்து அவர்கள் கூறும்போது:-

விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றி தந்ததுடன் நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு முன்னெடுப்பு மேற்கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என்பதால் அவருக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.

அதேபோல் அகில இந்திய மீனவர் சங்கம் தலைவர் சுப்பிரமணியமும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினார்.

Tags:    

Similar News