தமிழ்நாடு

பொள்ளாச்சி சந்தையில் ரூ.1¼ கோடிக்கு ஆடுகள் விற்பனை

Published On 2024-06-14 04:00 GMT   |   Update On 2024-06-14 04:00 GMT
  • நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
  • கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 30 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.23 ஆயிரத்துக்கே விற்பனை ஆனது.

பொள்ளாச்சி:

பக்ரீத் பண்டிகை வருகிற 17-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குர்பானி கொடுப்பதற்காக இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்கி வருகிறார்கள்.

இந்தநிலையில் புகழ்பெற்ற பொள்ளாச்சி சந்தை நேற்று கூடியது. இதில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக இருந்ததுடன், கூடுதல் விலையும் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே ஒரு பகுதியில் வாரந்தோறும் ஆடு விற்பனை நடைபெறுகிறது. இங்கு பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கோட்டூர், உடுமலை, மடத்துக்குளம், கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் கிடாக்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கிறார்கள.

இந்த மாதத்தில் கடந்த சில வாரமாக சந்தைக்கு ஆடுகள் வரத்து ஓரளவே இருந்தாலும் நேற்று நடந்த சந்தையின் போது அதிகாலை முதலே வியாபாரிகள் அதிகளவு ஆடுகளை கொண்டு வந்தனர்.

நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் பல மாதத்துக்கு பிறகு மீண்டும் சந்தை களை கட்டியது.

பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஆடுகளை வாங்க வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி கேரள வியாபாரிகளும் அதிகளவு வந்திருந்தனர். இதனால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்புடன் இருந்ததுடன் வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு விற்பனையானது. அதிலும் எடை அதிகம் உள்ள கிடாவுக்கு கிராக்கி ஏற்பட்டது.

கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 30 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.23 ஆயிரத்துக்கே விற்பனை ஆனது. ஆனால் நேற்று 28 கிலோ முதல் 30 கிலோ எடை கொண்ட செம்மறி மற்றும் வெள்ளாடு ரூ.26 ஆயிரம் வரையிலும், சுமார் 40 கிலோ எடை கொண்ட பெரிய அளவிலான கிடா கொண்ட பெரிய அளவிலான கிடா ரூ.37 ஆயிரம வரையிலும் என எப்போதும் இல்லாத வகையில் கூடுதல் விலை போனது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.1.25 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News