தமிழ்நாடு (Tamil Nadu)

பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு சசிகலா வாழ்த்து

Published On 2022-06-22 09:12 GMT   |   Update On 2022-06-22 12:34 GMT
  • மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மாணவி.
  • பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில், பராமரிக்கப்பட்டு வந்த லக்ஷ்மி என்ற 2 கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவி பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

இதனை சசிகலா இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு காப்பக நிர்வாகி கலாவதி மற்றும் வெற்றி பெற்ற மாணவி லட்சுமி ஆகியோரிடம் உரையாடினார்.

லட்சுமியிடம் பேசிய அவர் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்ததோடு விரைவில் நேரில் வந்து சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த வாழ்த்து தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக லட்சுமி என்ற மாணவி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News