தமிழ்நாடு (Tamil Nadu)

அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிக்கெட்டுகள் திருடி பயணிகளிடம் விற்ற கண்டக்டர்

Published On 2023-11-13 10:41 GMT   |   Update On 2023-11-13 10:41 GMT
  • பணிமனை ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • தமிழரசன் வழங்கிய பயணச்சீட்டு, திருடு போன பயணச்சீட்டு என தெரியவந்தது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சில மாதங்களுக்கு முன்பு தணிக்கை நடைபெற்றது. இதில் பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் பயணச்சீட்டுகள் திருட்டு போனது தெரியவந்தது. தொடர்ந்து திருட்டு போன பயணச்சீட்டுகளின் எண்களைக் கண்டறிந்து போக்குவரத்து துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 7-ந் தேதி விழுப்புரத்தில் அரசு பஸ்சில் பயணியிடம் டிக்கெட் பரிசோதகர்கள் பயணச்சீட்டை சோதனை செய்தனர். அந்த பஸ்சின் கண்டக்டர் தமிழரசன் வழங்கிய பயணச்சீட்டு, திருடு போன பயணச்சீட்டு என தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி பணிமனை மேலாளர் முருகன், கண்டக்டர் தமிழரசனிடம் விசாரணை நடத்தினார். இதில் அவர் பயணச்சீட்டுகளை திருடியதை ஒப்புக்கொண்டார். திருட்டு போன பயணச்சீட்டுகளின் மொத்தமதிப்பு ரூ.9 லட்சத்து 2 ஆயிரத்து 520 ஆகும்.

இதனை தொடர்ந்து பணிமனை மேலாளர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் கண்டக்டர் தமிழரசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்க்கும் கண்டக்டரே பயணச்சீட்டுகளை திருடி அரசு பஸ் பயணிகளிடம் வழங்கிய சம்பவம் பணிமனை ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News