தமிழ்நாடு (Tamil Nadu)

குரங்கணி அருவிக்கு சென்ற சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பிய வனத்துறையினர்.

குரங்கணி அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

Published On 2024-06-08 05:29 GMT   |   Update On 2024-06-08 05:29 GMT
  • தேனி மாவட்டம் உட்பட தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி அருகே சுமார் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குரங்கணி மலை கிராமம். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமம் அறிவிக்கப்படாத சுற்றுலாத்தலமாக திகழ்ந்து வருகிறது.

இங்குள்ள குரங்கணி நீரோடை, கொட்டகுடி ஆறுகளில் இருந்து வரும் நீர் மூலம் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை விடுமுறை காரணமாக குரங்கணி அருவி நீரோடை பகுதிகளில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தேனி மாவட்டம் உட்பட தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குரங்கணி அருவி, நீரோடைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்புகின்றனர். கனமழை எச்சரிக்கை காரணமாக எந்த நேரமும் அருவி நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்று நிலையில் சுற்றுலா பயணிகள் அருவி நீரோடை இறங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி விடுமுறை நாட்கள் முடிந்து வருகின்ற 10ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறப்பதன் காரணமாகவும் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்ததால் குரங்கணி மலை கிராமம் வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags:    

Similar News