தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் மழையால் சுற்றுலா தொழில் பாதிப்பு

Published On 2022-09-01 07:33 GMT   |   Update On 2022-09-01 07:33 GMT
  • மாமல்லபுரத்தில் கடந்த 3 நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.
  • மழை தொடர்ந்து பெய்ததால் பயணிகள் இல்லாமல் புராதன சின்னங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் கடந்த 3 நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் என்பதால், மாலை வேளையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என சுற்றுலாத்துறை, தொல்லியல்துறை எதிர்பார்த்த நிலையில் மழை தொடர்ந்து பெய்ததால் பயணிகள் இல்லாமல் புராதன சின்னங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, கடற்கரை கோயில், ஐந்துரதம், புலிக்குகை போன்ற முக்கிய சுற்றுலா பகுதிகளில் சாலையோரம் வியாபாரம் செய்வோர், வழிகாட்டிகள், ஆட்டோ ஓட்டுநர், பாசிமனி விற்போர் மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்டனர். இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

இதனால் இன்னும் சுற்றுலா தொழில் பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News