தமிழ்நாடு (Tamil Nadu)

தேர்தல் முடிவுக்கு பின்னர் அ.தி.மு.க. தலைமையில் மாற்றம் வருமா? டி.டி.வி. தினகரன் பதில்

Published On 2024-06-02 07:41 GMT   |   Update On 2024-06-02 07:41 GMT
  • ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
  • மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் கோவிலுக்கு செல்வதை பற்றி நான் கருத்து சொல்வது நன்றாக இருக்காது.

திருச்சி:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்தியில் 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைந்து மோடி பிரதமர் ஆவது உறுதி என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இந்த கருத்து கணிப்புகள் முடிவுகளும் அதையே சொல்கிறது. 4-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தின் உண்மை நிலவரம் தெரியவரும்.

தேர்தல் முடிவுக்கு பின்னர் அ.தி.மு.க.வின் தலைமையில் ஏதேனும் மாற்றம் வருமா? என்பது தொடர்பாக கருத்து சொல்வது நல்லதில்லை. தேர்தல் முடிவுக்கு பின்னர் அதைப்பற்றி பேசலாம்.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதற்காக தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

நான் கோவிலுக்கு செல்வது வழக்கமான ஒன்று. இந்த ஒன்றரை மாதம் அதிக வாய்ப்புகள் கிடைத்தது. அதனால் அதிகமாக கோவிலுக்கு சென்றேன். மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் கோவிலுக்கு செல்வதை பற்றி நான் கருத்து சொல்வது நன்றாக இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியில் நிர்வாகிகள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளதா என்பது பற்றிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அனைத்தும் 4-ந்தேதிக்கு பிறகு சரியாகிவிடும் என்றார்.

Tags:    

Similar News