தமிழ்நாடு (Tamil Nadu)

4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை- சென்னை வானிலை ஆய்வு மையம்

Published On 2024-07-12 07:50 GMT   |   Update On 2024-07-12 09:19 GMT
  • அடுத்து வரக்கூடிய 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • அடுத்த 5 கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்காக மஞ்சள் எச்சரிக்கை விட பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பகல் நேர வெப்பநிலை சற்றே அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வலைகுடா பகுதிகளில் 55 கி.மீ வரை காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த 5 கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Tags:    

Similar News