தமிழ்நாடு
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
- இந்த மாதம் வருகிற 29-ந்தேதி தஞ்சை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
- மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் மாசிமகத்தையொட்டி நாளை (புதன்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக இந்த மாதம் வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) தஞ்சை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.