செய்திகள்

காங்கோ நாட்டில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 50 பேர் பலி

Published On 2018-12-25 14:28 GMT   |   Update On 2018-12-25 14:28 GMT
காங்கோ குடியரசு நாட்டில் லாரியுடன் பஸ் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். #CongoBusCrash
கின்ஷாசா:

மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான காங்கோ குடியரசு நாட்டில் குண்டும் குழியுமான சாலைகள் மற்றும் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் சாலை விபத்துகள் பெருகி வருகின்றன.

இந்நிலையில், இந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கிசான்டு வழியாக அளவுக்கதிகமான பயணிகளுடன் வேகமாக சென்ற ஒரு பஸ் எதிரே வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், படுகாயங்களுடன் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

சிகிச்சை பெற்றுவரும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #BusCrash  #CongoBusCrash 
Tags:    

Similar News