செய்திகள்
இந்தியா சார்பில் அமைக்கப்பட்ட அரங்கை திறந்துவைத்த பியூஷ் கோயல்

எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி - இன்று கோலாகலமாக தொடங்கியது

Published On 2021-10-01 17:34 GMT   |   Update On 2021-10-01 17:34 GMT
துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியின் தொடக்க விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
துபாய்:

துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி இன்று தொடங்கியது. அடுத்த 6 மாதங்கள் தொடர்ச்சியாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. அமீரகம், இந்தியா உள்பட 192 நாடுகள் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன.

பிரத்யேக அரங்கங்கள், பல்வேறு தொழில்நுட்பங்கள், கலை, இசை மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் என சிறப்பம்சங்களுடன் தினமும் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.

இதில் இந்திய அரங்கிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரங்கில் இதுவரை தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்கள் பங்கேற்கின்றன. இந்திய அரங்கை மத்திய மந்திரி பியூஷ் கோயல் இன்று திறந்து வைத்தார்.

Tags:    

Similar News