உலகம்

பாகிஸ்தானில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2023-11-16 09:22 GMT   |   Update On 2023-11-16 09:22 GMT
  • பயங்கரவாதிகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 10 மாதங்களில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 386 பேர் பலியாகி விட்டனர். இதனால் பயங்கரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று கைபர் பக்துன்குவா மாகாணம் டேங்க் மாவட்டத்தில் உள்ள கிரி மசான் சேல் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படை வீரர்களும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.

Tags:    

Similar News