உலகம்

கோப்பை வென்ற இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல்- சூறாவளியால் விமான நிலையம் மூடல்

Published On 2024-07-01 05:33 GMT   |   Update On 2024-07-01 05:33 GMT
  • தென் ஆப்பிரிக்காவை 7 ரன்களில் வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
  • கனமழை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. பார்படோஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா அணி தென் ஆப்பிரிக்காவை 7 ரன்களில் வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

உலகக் கோப்பை முடிந்து பார்படோஸில் இருந்து இன்றிரவு இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், பார்படோஸில் கடும் சூறாவளி மற்றும் கனமழை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பார்படோஸ் விமான நிலையம் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

விமான நிலையம் மூடப்பட்டதால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக இந்தியா திரும்ப ஆயத்தமான இந்திய அணி வீரர்கள், ஊடகவியாலாளர்கள் குழு பார்படோஸில் சிக்கியுள்ளது.

Tags:    

Similar News