உலகம்

களைகட்டிய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு.. கஜகஸ்தானில் புதின்- ஜி ஜின்பிங்: முக்கியத்துவம் என்ன?

Published On 2024-07-03 08:35 GMT   |   Update On 2024-07-03 09:25 GMT
  • இந்த மாநாடு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இருக்கும் நாடுகளின் வலுவான கூட்டமைப்பை கட்டமைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.
  • இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் மாநாட்டில் பங்கேற்க கஜகஸ்தான் சென்றுள்ளார்.

கஜகஸ்தான் நாட்டின் அஸ்டானா நகரில் வைத்து இன்றும் நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடிப்பெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ரஷிய அதிபர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங் தற்போது கஜகஸ்தான் நாட்டுக்கு சென்றடைந்துள்ளனர். இந்த மாநாடு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இருக்கும் நாடுகளின் வலுவான கூட்டமைப்பை கட்டமைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.

 

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடானது கடந்த 2001 ஆம் ஆண்டு ரஷியா மற்றும் சீனாவின் முன்முயற்சியால் மத்திய ஆசிய நாடுகளின் பாதுகாப்பைக் குறித்து ஆலோசித்து உறுதிசெய்ய ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். இந்தியா, பாகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளது. மேலும் துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளும் இந்த ஷாங்காய் கூட்டமைப்பு ஆலோசனைகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறது.

இந்த வருட மாநாட்டில் கூட்டமைப்பில் உள்ள மற்றைய நாடுகளின் அதிபர்கள் தலைவர்கள் பங்கேற்கும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் மாநாட்டில் பங்கேற்க கஜகஸ்தான் சென்றுள்ளார்.

 

உக்ரைன் மீது போர் தொடுத்ததால் மேற்குலகத்தால் பெருளாதார தடைகளை எதிர்கொண்ட ரஷியா தனியாக இல்லை என்று அவர்களுக்கு காண்பிக்கும் விதமாக இந்த மாநாட்டை ரஷிய அதிபர் புதின் முன்னெடுத்துச் செல்வார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் இந்த மாநாட்டை மத்திய ஆசியாவில் சீனாவை பிரதானப்படுத்தும் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வார் என்று தெரிகிறது. 

 

Tags:    

Similar News