டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: நாளை நடக்கும் முதல் சுற்றில் சுமித் நாகல் செர்பிய வீரருடன் மோதல்

Published On 2024-06-30 11:15 GMT   |   Update On 2024-06-30 11:15 GMT
  • கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை தொடங்குகிறது.
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகலுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது.

லண்டன்:

டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை தொடங்குகிறது. இந்தப் போட்டியில் யார்- யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதிபெற்ற ஒரே இந்தியரான சுமித் நாகலுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது. அவர் 53-ம் நிலை வீரர் செர்பியாவின் மியோமிர் கெச்மனோவிச்சுடன் முதல் சுற்றில் நாளை மோதுகிறார்.

நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), எஸ்தோனியா வீரர் மார்க் லாஜலை எதிர்கொள்கிறார். முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), செக் குடியரசின் தகுதி நிலை வீரர் விட் கோபிரிவாவுடன் மோதுகிறார்.

Tags:    

Similar News