டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச், ஸ்வரேவ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2024-07-03 08:32 GMT   |   Update On 2024-07-03 08:32 GMT
  • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

லண்டன்

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது.

இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பிய வீரர் ஜோகோவிச், செக் குடியரசைச் சேர்ந்த விட் கோப்ரிவா உடன் மோதினார்.

இதில் ஜோகோவிச் 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ராபர்டோ கார்பலேஸ், ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வரேவ் 6-2, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ராபர்டோவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News