டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு முன்னேறினர் மெத்வதேவ், சின்னர்

Published On 2024-07-04 12:19 GMT   |   Update On 2024-07-04 12:19 GMT
  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
  • மூன்றாவது சுற்று போட்டிகள் நாளை நடைபெற உள்ளன.

லண்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், பிரான்ஸ் வீரர் அலெக்சாண்டர் முல்லருடன் மோதினார்.

இதில் மெத்வதேவ் 6-7 (3-7), 7-6 (7-4), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், சக நாட்டு வீரரான மேட்டியோ பிரெட்டினியுடன் மோதினார். இதில் சின்னர் 7-6 (7-3), 7-6 (7-4), 2-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News