டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய கோகோ காப், படோசா

Published On 2024-10-03 16:36 GMT   |   Update On 2024-10-03 16:36 GMT
  • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
  • இதில் நம்பர் 4 வீராங்கனையான கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேறினார்.

பீஜிங்:

பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் நம்பர் 4 வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைன் யூலியா ஸ்டாரோடப்சேவா உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 2-6 என இழந்த கோகோ காப் அடுத்த இரு செட்களை 6-2, 6-2 என கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் பவுலா படோசா, சீனாவின் ஷாங் உடன் மோதினார். இதில் 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் கோகோ காப், படோசாவை எதிர்கொள்கிறார்.

Tags:    

Similar News