search icon
என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • வெங்கடாம்பட்டி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்பட்டு வருகிறது.
      • தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படும் இந்த திட்டத்தினை பற்றி ஊராட்சி மன்ற தலைவர் கேட்டறிந்தார்.

      கடையம்:

      கடையம் வட்டாரத்திற்கு உட்பட்ட வெங்கடாம்பட்டி கிராமத்தில் தென்காசி மாவட்டம் தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி அறிவுரைப்படி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றும் சிறப்பு திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2021 -22-ம் நிதியாண்டில் புதியதாக உருவாக்கப்பட்டு 15 ஏக்கர் பரப்பு தரிசு நிலத் தொகுப்பில் அமைக்கப்பட்டு உள்ள சொட்டுநீர் பாசன அமைப்பு வயல்களை, வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஸாருகலா ரவி மற்றும் துணை தலைவர் சித்ரா பாபு ஆகியோர் பார்வையிட்டு விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.

      மேலும் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படும் இந்த திட்டத்தினை பற்றி ஊராட்சி மன்ற தலைவர் கேட்டறிந்தார். ஆய்வின்போது தரிசு நில தொகுப்பின் குழு தலைவர் அமிர்தராஜ் , வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து செயலாளர் பாரத், விவசாயி ரவி, பாபு பக்கியநாதன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் கடையம் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கோவிந்தராஜன், திருமலை குமார்ஆகியோர் ஆய்விற்கான ஏற்பாடுகளை செய்து உடனிருந்து விளக்கம் அளித்தனர்.

      • முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் வயிறார உணவு உண்பதற்காக அம்மா உணவகங்களை ஏற்படுத்தித் தந்தார்.
      • அம்மா உணவகம் அருகே கழிவுகள், மது பாட்டில்கள் கிடக்கிறது.

      நெல்லை:

      நெல்லை மாநகராட்சி யில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

      இதில் மேயர் சரவணன் தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து குறைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக் கொண்டார். துணை கமிஷனர் தாணு மூர்த்தி முன்னிலை வகித்தார்.

      நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா அறிவுறுத்தலின் பேரில் பகுதி செயலாளர் காந்தி வெங்கடாஜலம், சிந்து முருகன் ஆகியோர் தலைமையில் முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

      அ.தி.மு.க ஆட்சிக்காலத்தின் போது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் வயிறார உணவு உண்பதற்காக குறைந்த செலவில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்டவை ஏழைகளுக்கு கிடைக்க வழிவகை செய்யும் விதமாக அம்மா உணவகங்களை ஏற்படுத்தித் தந்தார்.

      தற்போது தி.மு.க. ஆட்சி காலத்தில் அந்த உணவகங்களை அவர்கள் கண்டு கொள்வதில்லை. தரமற்ற உணவுகள் வழங்குகின்றனர். பாளை மண்டலத்துக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தின் அருகே மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் வந்து செல்பவர்களின் வசதிக்காக கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது.

      இதனால் அந்த பகுதியில் உள்ள அம்மா உணவகம் அருகே மனித கழிவுகள், மது பாட்டில்கள் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் முகம் சுழிக்கின்றனர். உடனடியாக இந்த கழிப்பிடங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

      இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

      அப்போது பாளை பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், நெல்லை பகுதி துணைச் செயலாளர் மாரிசன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், நிர்வாகிகள் பாளை ரமேஷ், பாறையடி மணி, சம்சுல்தான், பக்கீர் மைதீன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

      • முகாமில் யோகா மருத்துவ சிசிச்சைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.
      • மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

      வள்ளியூர்:

      நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி தாவரவியல் துறை, அகத்தர மதிப்பீட்டு குழு மற்றும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம் தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள காமராஜ் நடு நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

      நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரி செயலர் வி.பி. ராமநாதன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் து.ராஜன், கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை பாளை யங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி பேராசி ரியர் மனோகரன் மற்றும் காமராஜ் நடுநிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் எம். ஜெபஸ்டின் ஆனந்த் ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினர்.

      முகாமில் வர்ம மருத்து வத்துறை தலைவர் முனிஸ்வரன், புற மருத்துவ துறை மருத்துவர் சுஜாதா, விரிவுரை யாளர் பிச்சையாகுமார், மருத்துவ தாவரவியல் துறை ராஷேஸ், தாவரவியல் துறை தலைவர் விஜயா, காமராஜ் நடு நிலைப்பள்ளி தலைமையாசிரி யர் லியோன்ஸ் லெட்டிசியா தங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

      முகாமில் கல்லூரி பேராசி ரியர் பாலமுருகன், அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், அலுவலக கண்கா ணிப்பாளர் பாலச்சந்திரன், பயிற்சி பயிற்றுநர் இளங்கோ ஜெகதீஸ், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சித்த மருத்துவ முகாமில் தெற்கு கள்ளி குளத்தை சார்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமில் சளி காய்ச்சல், தலைவலி, கை, கால், மூட்டுவலி, கழுத்து வலி மற்றும் வர்மம், புறமருத்துவம், யோகா மருத்துவ சிசிச்சைகள் நோயா ளிகளுக்கு வழங்கப்பட்டது.

      மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தாவரவியல் துறை உதவி பேராசிரியர் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரி நிர்வாகம், தாவரவியல் துறை மற்றும் அகத் தர மதிப்பீட்டு குழு இணைந்து செய்திருந்தனர்.

      • புரட்டாசி மாதம் என்பதால் நம்பி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
      • நம்பி கோவிலுக்கு செல்லும் பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

      களக்காடு:

      நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருமலை நம்பி கோவில் அமைந்துள்ளது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

      இந்நிலையில் திருமலை நம்பி கோவிலுக்கு செல்லும் வழிப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக வனத்துறையினர் தெரி வித்துள்ளனர். இதையடுத்து இன்று (செவ்வாய் கிழமை) ஒரு நாள் மட்டும் பக்தர்கள் நம்பி கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

      • போட்டியானது, வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.
      • நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணிகளும் இதில் கலந்துகொள்ளலாம்.

      நெல்லை:

      ஆக்கி யூனிட் ஆப் நெல்லை சார்பில் மாவட்ட ஆக்கி லீக் போட்டிகள் வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறு கிறது. போட்டியானது, வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. இதில் முதல் 2 நிலை களை பெறுபவர்களுக்கு வெற்றிக்கோப்பைகளும், பங்கேற்பாளர்களுக்கு பங்கேற்பு கேடயங்களும், அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணிகளும் இதில் கலந்துகொள்ளலாம். கலந்துகொள்ள வயது வரம்பு ஏதும் இல்லை. நுழைவு கட்டணம் இலவசம். கலந்துகொள்ள விரும்பும் அணிகள் 99403 41508, 90430 36967 என்ற வாட்ஸ் அப்பில் 20-ந்தேதிக்கு முன்னர் அணியின் பெயர்களை முன்பதிவு செய்யவேண்டும். இதற்கான விரிவான ஏற்பாடுகளை ஆக்கி யூனிட் ஆப் நெல்லை நிர்வாகிகள் சேவியர், முருகேசன், பீர் அலி, டாக்டர் மாரிக்கண்ணன், ஜான்சன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

      • புதுக்குளம், கொங்கந்தான்பாறை பஞ்சாயத்துகளில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
      • கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொண்டு பேசினார்.

      நெல்லை:

      நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பாளை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்குளம், கொங்கந்தான்பாறை பஞ்சாயத்துகளில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

      அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஏ.கே. சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொண்டு பேசினார். பாளை தெற்கு ஒன்றிய செயலாளரும், புதுக்குளம் பஞ்சாயத்து தலைவருமான முத்துக்குட்டி பாண்டியன் முன்னிலை வகித்தார்.

      இதில் ஒன்றிய அவை தலைவர் செல்ல பாண்டி யன், ஒன்றிய துணை செயலாளர் பூலான், இணை செயலாளர் ரேவதி, பொருளாளர் ரமேஷ், ஒன்றிய மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், நாராயணன், கிளை செயலாளர் வேல்முருகன், பிரம்மா, பேச்சிமுத்து, ரவிக்குமார், தேரவல்லி, காமராஜர் நகர் தசரதன், பசும்பொன் நகர் கிளை செயலாளர் வீரபுத்திரன், வீரளப்பெருஞ்செல்வி கிளை செயலாளர் நாராயணன், மணல்விளை கிளை செயலாளர் சொர்ணப்ப நாடார், மல்லக்குளம் சுப்பையா, கொங்கந்தான் பாறை கிளை செயலாளர் மரியராஜ், அம்பேத்கார் நகர் கிளை செயலாளர் பரமசிவன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

      • பேரணியில் மனோன்மணியம் சுந்தரனார் பல் கலைக்கழக உளவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
      • சாலையில் நின்றவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

      நெல்லை:

      உலக மனநல நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 10-ந்தேதி அன்று கடை பிடிக்கப்படுகிறது. உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகின்றது.

      இதனையொட்டி இன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் உலக மனநல விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

      பேரணியில் மனோன்ம ணியம் சுந்தரனார் பல் கலைக்கழக உளவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு நெல்லை பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.

      தொடர்ந்து பழைய பேட்டை, காந்திநகர் வழியாக மனோன்மணியம் சுந்த ரனார் பல்கலைக்கழகத்தை அடைந்தனர். இந்த பேரணியை நெல்லை டவுன் உதவி கமிஷனர் சுப்பையா தொடங்கி வைத்தார்.

      சைக்கிள் பேரணி நடைபெறுவதையொட்டி பேரணி செல்லும் சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் சாலையில் நின்ற வர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டி சென்றனர்.

      • முருகனின் மகனுக்கும், சிவா என்ற சிவசுப்பிரமணியனுக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.
      • ஆத்திரம் அடைந்த சிவா, முருகனை கத்தியால் குத்தினார்.

      களக்காடு:

      திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது43). விவசாயி. இவரது மகனுக்கும், ஏர்வாடி கோவில் வாசலை சேர்ந்த சிவா என்ற சிவசுப்பிரமணியனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

      சம்பவத்தன்று சிவா, முருகன் வீட்டிற்கு வந்து, அவரது மகனை அவதூறாக பேசினார்.

      இதனை முருகன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவா, முருகனை கத்தியால் குத்தினார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

      அதன்பேரில் ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிவாவை தேடி வருகின்றனர்.

      • தனிநபராக அதிக பட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்.
      • நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் மட்டுமே ஓவியங்கள் வரைய வேண்டும்.

      தென்காசி:

      தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை கருப்பொருளாகக் கொண்டு, மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், கருவியிசை மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் தென்காசி மாவட்ட அளவிலான போட்டிகள் தென்காசி ஈஸ்வரன்பிள்ளை பள்ளியில் நடைபெறவுள்ளது.

      அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 14-ந்தேதி குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், போட்டிகள் காலை 10 மணிக்கும், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் மதியம் 2 மணிக்கும் நடைபெறும். குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. தனிநபராக அதிக பட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்.

      கிராமிய நடனத்தில் கரகாட்டம், கணியான்கூத்து, காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்). மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவிய தாள்கள் மட்டுமே வழங்கப்படும்.

      அக்ரிலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் மட்டுமே ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிக பட்சம் 3 மணி நேரம் வரை அனுமதிக்கப்படுவார்கள். மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு முதல் பரிசாக ரூ.6,500, 2-ம் பரிசாக ரூ.4,500, 3-ம் பரிசாக ரூ.3,500 வழங்கப்படவுள்ளது.

      மேலும், முதல் பரிசு பெறுபவர்கள் மாநில அளவிலான கலைப்போட்டிகளில் கலந்துகொள்வார்கள். மேலும், கலை பண்பாட்டுத்துறையின் இணையதளம் www.artandculture.tn.gov.in வாயிலாக விவரங்களை பெறலாம் அல்லது கலை பண்பாட்டுத்துறையின் நெல்லை மண்டல அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை 0462-2901890 தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம்.

      இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க தென்காசி மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

      • பூத்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
      • ஆய்வின்போது பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

      சங்கரன்கோவில்:

      தென்காசி வடக்கு மாவட்டம் மானூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு பூத் கமிட்டி அமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆலோசனை குழு அமைத்து நிர்வாகிகளை சந்திப்பது, பூத்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

      அதன்பேரில் மானூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி துணை செயலாளருமான ராஜலெட்சுமி தலைமையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு நடைபெற்றது. தொடர்ந்து பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பூத் கமிட்டி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட குருக்கள்பட்டி செல்வம், இளைஞர் அணி நிர்வாகி மேல இலந்தைக்குளம் செந்தில் குமார், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர்.
      • முன்னாள் மாணவ- மாணவிகளின் குழந்தைகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

      தென்காசி:

      பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1994 முதல் 1996-ம் ஆண்டு வரை கல்வி பயின்ற முன்னாள் மாணவ- மாணவிகள் 27 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் ஆசிரியர்களான சுவாமிதாஸ், முருகவேல், மேரி , மயில் அம்மாள், தற்போதைய தலைமை ஆசிரியர் அன்னக்கிளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

      முன்னாள் மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது குடும்பத்தினரோடு கலந்து கொண்டு, பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் முன்னாள் ஆசிரியர்களுக்கு மாணவ- மாணவிகள் சார்பாக நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற வகுப்பறையை சுத்தம் செய்து வண்ணம் தீட்டி பூக்களால் அலங்கரித்தனர். முன்னாள் மாணவ- மாணவிகளின் குழந்தைகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும் விழாவிற்கு வருகை தந்த அனைவரும் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.

      • மரம் ஏறும் பொழுது கீழே விழுந்ததில் சுந்தர் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.
      • மனமுடைந்த சுந்தர் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.

      சாம்பவர்வடகரை:

      சாம்பவர்வடகரை அருகே உள்ள வேலாயுதபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது 41). விவசாயி. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மரம் ஏறும் பொழுது கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து வீட்டில் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்நிலையில் ஒரு வாரமாக மது அருந்தி வந்தார். இதன் காரணமாக கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுந்தர் உயிரிழந்தார். இதுகுறித்து சாம்பவர்வடகரை சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      ×