என் மலர்tooltip icon

    இந்தியா

    • அவருக்கு மதுரையைச்சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
    • அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.

    மதுரை அலங்காநல்லூரை சேர்ந்தவர் பிரான்சிஸ்(வயது 48). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். அவருக்கு மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.

    இந்த நிலையில் பிரான்சிஸ் தனது கள்ளக்காதலி மற்றும் கள்ளக்காதலியின் மகள் ஆகியோருடன் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருப்பூர் மாஸ்கோ நகரில் வாடகைக்கு தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.

    அப்போது கள்ளக்காதலியின் 16 வயது மகளை பிரான்சிஸ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தநிலையில் அந்த சிறுமிக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவரிடம் சென்று பரிசோதித்த போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சிறுமியின் தாய் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரான்சிசை கைது செய்தனர்.

    • பள்ளி முடித்துக் கல்லூரி செல்லும் 18 வயதிலேயே 'பரம்பரைத் தொழிலைச் செய்' என்பது விஸ்கர்மா திட்டம்.
    • காலாகாலமாகக் குடும்பம் செய்துவந்த தொழிலுக்குத்தான் விஸ்வர்கமா திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

    இன்னார்க்கு இதுதான் என்ற பிரதமரின் விஷ்வகர்மா திட்டத்தை புறக்கணித்து எல்லார்க்கும் எல்லாம் என்ற கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்த வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    'இன்னார்க்கு இதுதான்' எனும் பிரதமரின் விஷ்வகர்மா திட்டத்தை நிராகரித்து, 'எல்லார்க்கும் எல்லாம்' எனும் நம் திராவிட மாடல் அரசு கலைஞர் கைவினைத்திட்டம் உருவாக்கியது ஏன்?

    * பள்ளி முடித்துக் கல்லூரி செல்லும் 18 வயதிலேயே 'பரம்பரைத் தொழிலைச் செய்' என்பது விஸ்கர்மா திட்டம். முதிர்ச்சி பெற்ற 35 வயதை எட்டியோர்தான் விண்ணப்பிக்க முடியும் என்பது நம் திட்டம்.

    * காலாகாலமாகக் குடும்பம் செய்துவந்த தொழிலுக்குத்தான் விஸ்வர்கமா திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். யாரும், விரும்பிய எந்தத் தொழிலையும் செய்யக் கலைஞர் கைவினைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

    * 18 திட்டங்களை உள்ளடக்கியது விஸ்வகர்மா, அதனை 25 திட்டங்களாக நாம் விரிவுபடுத்தியிருக்கிறோம்.

    * விஸ்வகர்மா திட்டத்தில் கடன் மட்டுமே பெற இயலும், கலைஞர் கைவினைத் திட்டத்தில் மானியத்தோடு 3 லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெறலாம்.

    மொத்தத்தில், குடும்பத் தொழிலை ஊக்குவித்து, நம் மாணவர்களின் உயர்கல்விக்குத் தடை ஏற்படுத்தும் சூழ்ச்சித் திட்டமல்ல நம்முடையது; யாரையும் ஒதுக்காத அனைவருக்குமான சமூகநீதி நோக்கிலான திட்டம்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசிய கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
    • 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்திய 3வது கட்டாய மொழி.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வரும் கல்வியாண்டில் இருந்து 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் இந்தி 3ஆவது கட்டாய மொழி என அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

    இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயம் என்பதை அனுமதிக்க மாட்டோம் என சிவ சேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    சிவசேனா கட்சியிண் தொழிலாளர்கள் பிரிவான பாரதிய கம்கார் சேனா நிகழ்ச்சியில் கலந்த கொண்டு பேசும்போது "சிவசேனாவுக்கு (UBT) இந்தி மொழி மீது எந்த வெறுப்பும் இல்லை. ஆனால் அது ஏன் கட்டாயப்படுத்தப்படுகிறது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.

    • நாயின் உரிமையாளர் ஷோபா ராணி புகார் அளித்தார்.
    • நாய் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது

    உத்தரப் பிரதேசத்தில் தனது மகனை பார்த்து குரைத்ததற்காக நாயை காரில் 3 கி.மீ தூரம் இழுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார்

    நாயின் உரிமையாளர் ஷோபா ராணி அளித்த புகாரின்படி, இந்த சம்பவம் புதன்கிழமை கிரேட்டர் நொய்டாவில் உள்ள நை பஸ்தி பகுதியில் நடந்தது. அமித் என்பவரின் 10 வயது மகன், அந்த வழியாகச் செல்லும்போது தனது செல்லப்பிராணி மீது கல்லை எறிந்தார்.

    சிறுவனை நோக்கி நாய் குரைத்ததால் அவன் விழுந்தான். இதைத் தொடர்ந்து, அமித் 4 வயது நாயை குச்சிகளால் அடித்து, தனது காரில் கட்டி 3 கி.மீ தூரம் இழுத்துச் சென்றதாக ராணி குற்றம் சாட்டினார்.

    நாய் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது என்று ராணியின் கணவர் போலீசாரிடம் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில், அமித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

    அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், நாய் தனது மகனைக் கடித்ததாகக் கூறி அமித் கூறியதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.

    • கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • ஆஸ்பத்திரியில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் சிறுமி போல் இருந்ததால் அவரது வயதை டாக்டர்கள் விசாரித்தனர்.

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

    அந்த பெண் சிறுமி போல் இருந்ததால் அவரது வயதை டாக்டர்கள் விசாரித்தனர். அப்போது அவருக்கு 16 வயது மட்டுமே ஆவது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துள்ளார். அவரும், அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 22) என்பவரும் காதலித்துள்ளனர்.

    கோபாலகிருஷ்ணன் மாணவியை திருமணம் செய்து முடிவு செய்துள்ளார். இதையடுத்து 2 பேரின் பெற்றோர் சம்மதத்துடன் அங்குள்ள கோவிலில் அவர்கள் மாலை மாற்றி திருமணம் செய்துள்ளனர். கோபாலகிருஷ்ணன் வீட்டில் மாணவி வசித்துள்ளார். அதன்பிறகும் அவர் பள்ளிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே மாணவி கர்ப்பம் ஆனதால் அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். வயிறு வலி வந்ததைத் தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் நடந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கோபால கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • பீகாரில் ஊழலை நிறுவனமாக்கியதற்காக நிதிஷ் குமார் பொறுப்பேற்க வேண்டும்.
    • முதல்வர் மாநில அரசின் நிதிகளை அவருடைய தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துகிறார்.

    பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் ஊழலை நிறுவனமாக்கிவிட்டார். அரசு நிதிகள் இந்த வருடம் இறுதியில் நடைபெற இருக்கும் தேர்தலுக்கான அரசியல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:-

    பீகாரில் ஊழலை நிறுவனமாக்கியதற்காக நிதிஷ் குமார் பொறுப்பேற்க வேண்டும். முதல்வர் மாநில அரசின் நிதிகளை அவருடைய தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துகிறார். பெண்கள் அரசுடன் தொடர்பு கொள்வதற்காக சமீபத்தில் தொடங்கப்பட்ட மகிலா சம்வாத் என்ற முன்முயற்சி திட்டம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த முன்முயற்சி திட்டத்திற்காக அமைச்சரவை 225 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மாநில அரசு இந்த பொது நிதியை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துகிறது.

    மாநில பெண்களுக்கு உறுதியான எதுவும் களத்தில் இல்லை. ஆனால் பிரசாரத்திற்காக கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது.

    டிசம்பர் 2024-ல் இருந்து கட்டுமான செயல்பாட்டிற்காக 76,622 கோடி ரூபாப் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆச்சர்யம் அளிக்கும் வகையில், முதன்முறையாக அரசு இந்த பணிகளுக்காக சர்வதேச அளவிலான டெண்டர்களை கோரியுள்ளது. உலகளாவிய டெண்டருக்கான காணரம் என்ன?.

    மேலும், தொடர்பு சாலைகள் இல்லாமல் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பல கட்டிடங்கள் தயாராக உள்ளன, ஆனால் சம்பந்தப்பட்ட துறைகள் அவற்றை கையகப்படுத்தவில்லை. (புதிய) மருத்துவமனை கட்டிடங்களில் உபகரணங்கள் அல்லது மருத்துவர்கள் இல்லை. 'ஹர் கர் நல் கா ஜல்' திட்டத்திற்காக பல கோடிகள் செலவிடப்பட்டன. ஆனால் தண்ணீர் விநியோகம் இல்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம்.

    இவ்வாறு தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

    • 2026-லும் #DravidianModel ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான்!
    • ஊழலுக்கு ஒருமுறை, தேச விரோதத்திற்கு ஒருமுறை என இருமுறை கலைக்கப்பட்டது திமுக ஆட்சி.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.

    அப்போது அவர், " தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து இந்த மண்ணைப் பாழாக்கத் துடிக்கும் பா.ஜ.க.வுக்கும், அதற்குத் துணைபோகும் இனமானம் இல்லாத அடிமைகளுக்கும் தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சவால் விடுகிறேன்…

    எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள்!

    2026-லும் #DravidianModel ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான்! என்று கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:-

    தமிழக மக்களின் Out of Control-ஆக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார்.

    அதிமுக- பாஜக கூட்டணி அமைந்த பிறகு முதலமைச்சராக ஸ்டாலின் பதற்றத்துடன் இருந்து வருகிறார். மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்தபோது அவர்களுக்கு அடிபணிந்துதானே திமுக இருந்தது.

    ஊழலுக்கு ஒருமுறை, தேச விரோதத்திற்கு ஒருமுறை என இருமுறை கலைக்கப்பட்டது திமுக ஆட்சி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜபி தரிசனத்தின் மூலம் சமந்தா, டிராகன் படப் புகழ் கயாடு லோஹர் தனித்தனியாக தரிசனம் செய்தனர்.
    • சாமி தரிசனத்திற்கு பிறகு, நடிகைகளுக்கு கோவில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா மற்றும் கயாடு லோஹர் சாமி தரிசனம் செய்தனர்.

    விஜபி தரிசனத்தின் மூலம் சமந்தா, டிராகன் படப் புகழ் கயாடு லோஹர் தனித்தனியாக தரிசனம் செய்தனர்.

    சாமி தரிசனத்திற்கு பிறகு, நடிகைகளுக்கு கோவில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.

    பின்னர், கோவிலுக்கு வெளியே வந்த நடிகைகளுடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

    • 9ஆவது முறையாக கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • பாஜகவின் பொய் கதைகளால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டோம். இதை எதிர்கொள்ள வேண்டும் என தொண்டர்களிடம் வலியுறுத்தல்.

    ஒடிசா மாநில பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக நவீன் பட்நாயக் 9ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற மாநில கவுன்சில் கூட்டத்தில் நவீன் பட்நாயக் மீண்டும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என அக்கட்சியின் தேர்தல் அதிகாரி பி.கே. டெப் தெரிவித்துள்ளார்.

    மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நவீன் பட்நாயக் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே பேசியதாவது:-

    முடிவடைந்த சட்டசபை தேர்தலில் நம்முடைய கட்சி அதிக வாக்குகள் பெற்றிருந்தாலும், குறைந்த வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தோம். இதற்கு காரணம் பாஜக-வின் பொய் கதைகளை நாம் திறமையான முறையில் எதிர்கொள்ள முடியாததுதான்.

    பிஜு ஜனதா தளம் கட்சிக்கு எதிராக பொய் கதைகளை உருவாக்கியது முக்கிய வியூகமாக இருந்தது. இதை நாம் ஆக்ரோசமாக வெளிப்படுத்த வேண்டும். முக்கியமாக சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    • இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்தனர்.
    • ஊருக்கு சென்ற காதலன் விவேக் பெற்றோர் பார்த்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்வது தெரியவந்தது.

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் விவேக் (வயது 29). இவர் 15 வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபதி நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் இது காதலாக மாறியது.  

    இதையடுத்து இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்தனர். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். இது குறித்து காதலனிடம் அந்த பெண் கூறியுள்ளார்.

    உடனே அவர் நாம் திருமணம் செய்து கொள்ளலாம்,அதற்கு முன் நான் ஊருக்கு சென்று பெற்றோரிடம் நமது காதல் விவகாரங்களை கூறி சம்மதம் பெற்று வருகிறேன் என கூறிவிட்டு சொந்த ஊருக்கு சென்றார். காதலன் வந்து திருமணம் செய்து கொள்வார் என்று காத்திருந்த அந்த பெண்ணுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    ஊருக்கு சென்றவர் திரும்பி வரவே இல்லை.செல்போன் மூலம் தொடர்பு கொண்டாலும் போனையும் எடுப்பதில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்தப்பெண் தனது காதலன் குறித்து விசாரித்த போது பெற்றோரிடம் சம்மதம் வாங்கி வருவதாக ஊருக்கு சென்ற காதலன் விவேக் பெற்றோர் பார்த்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்வது தெரியவந்தது.

    இதுகுறித்து திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விவேக் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் மற்றும் சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். 

    • நம் சோசியல் மீடியா படை அது தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று சொல்கிறார்கள்.
    • virtual warriors என்று நான் உங்களை கூப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

    த.வெ.க.வின் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசிய வீடியோவை வெளியிட்டனர்.

    அந்த வீடியோவில் விஜய் பேசியதாவது:-

    ஐடி விங் நிர்வாகிகள் ஆலோனை கூட்டத்தில் ஜூம் மீட் மூலம் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். ஆனால், நெட்வொர்க் பிரச்சனையால் அது முடியாமல் போனது. அதனால், ரெக்கார்டட் மெசேஜ் அனுப்புகிறேன். இதன்மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

    நம் சோசியல் மீடியா படை அது தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று சொல்கிறார்கள். இது நாம் சொல்வதை விட மற்றவர்கள் பார்த்து தெரிந்துக் கொள்கிறார்கள்.

    இனிமேல் நீங்கள் சோசியல் மீடியா ரசிகர்கள் மட்டும் இல்லை. என்னை பொறுத்தவரைக்கும் நீங்கள் அனைவருமே கட்சியின் virtual warriors. அப்படிதான் நான் உங்களை கூப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

    நம் ஐடி விங் என்றாலே ஒழுக்கமாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு வேலைப் பாருங்கள்.

    கூடிய விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்... நன்றி...!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓட்டலில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள், ஊழியர்களை வெளியேற்றி அறை அறையாக சோதனை நடத்தினர்.
    • போலீசார் 2 ஓட்டல்களுக்கும் இரு பிரிவாக பிரிந்து சென்று சோதனை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில வாரங்களாக அரசு அலுவலகங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    கவர்னர் மாளிகை, கலெக்டர் அலுவலகம், ஜிப்மர் மருத்துவமனை, பிரெஞ்சு துாதரகம் ஆகிய அலுவலகங்களுக்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த அலுவலகங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் மூலம் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.

    சோதனையில் புரளி என தெரிய வந்தது. தொடர்ந்து வந்த மிரட்டலை அலட்சியம் செய்ய முடியாமல் போலீசார் தவித்தனர். மின் அஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை அனுப்பியது யார்? என போலீசாரால் கண்டறிய முடியவில்லை.

    இதனால் புதுவை சைபர் கிரைம் உதவியை நாடினர். அவர்கள் மத்திய சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடியுள்ளனர். இதில் மிரட்டல் விடுத்த நபரை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை போலீசார் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இதுவரை அரசு அலுவலகங்களை குறிவைத்து மிரட்டல் விடுத்து வந்த மர்ம ஆசாமி தற்போது முதலமைச்சர் வீடு மற்றும் தனியார் நட்சத்திர ஓட்டல்களுக்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு விரைந்து சென்றனர். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி வீட்டில் இல்லை.

    தொடர்ந்து அந்த வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் அங்குலம், அங்குலமாக வெடி சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

    இதுபோல் புதுவை கடற்கரை சாலையில் உள்ள புரோமனன்ட், அஜந்தா சந்திப்பில் உள்ள செண்பகா ஆகிய நட்சத்திர ஓட்டல்களுக்கும் இன்று காலை மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    இதையடுத்து போலீசார் 2 ஓட்டல்களுக்கும் இரு பிரிவாக பிரிந்து சென்று சோதனை நடத்தினர்.

    ஓட்டலில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள், ஊழியர்களை வெளியேற்றி அறை, அறையாகவும், சோதனை நடத்தினர். ரெஸ்டாரெண்ட், சமையல் அறை, பார், கார் பார்க்கிங் ஆகியவற்றில் அங்குலம், அங்குலமாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

    மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. 2 மணி நேரம் சோதனை நடத்தியும்வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இது புரளி என தெரிய வந்தது. ஒருபுறம் போலீசார் நிம்மதியடைந்தாலும், இது போல தொடர் மிரட்டலால் போலீசார் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×