search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    யார் விட்டுக் கொடுப்பது..?
    X

    யார் விட்டுக் கொடுப்பது..?

    • மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார்.
    • கணவனா? மனைவியா? பிரச்சனை அங்குதானே ஆரம்பிக்கிறது..". என்று கேட்டார்.

    ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகரிஷி பேசிக்கொண்டிருந்தார். அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய,

    விட்டுக் கொடுப்பது..

    அனுசரித்துப் போவது..

    பொறுத்துப் போவது..

    ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

    அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்.

    "யார் விட்டுக் கொடுப்பது?

    கணவனா? மனைவியா?

    பிரச்சனை அங்குதானே ஆரம்பிக்கிறது..". என்று கேட்டார்.

    அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில்,

    "யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ,

    யார்அறிவாளியோ..

    அவர்கள்தான் முதலில் விட்டுக் கொடுப்பார்கள்.

    அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள்.

    அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள்" என்றார்.

    உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் அன்பர்களே!.

    - சாய் ராமசாமி

    Next Story
    ×