search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    தமிழுக்கே உரிய சிறப்பு
    X

    தமிழுக்கே உரிய சிறப்பு

    • ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது.
    • தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும்!

    இந்தியைத் தாய்மொழியாக கொண்டவர்கள். தங்களது பெயரில் இந்தி என்னும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. இணைத்துக்கொள்ள முடியவும் முடியாது.

    கன்னடம்------முடியாது.

    தெலுங்கு--- முடியாது.

    மலையாளம்------முடியாது.

    ஏனைய மொழிகள்----முடியாது.

    ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது.ஆனால் தமிழில்...

    தமிழ்,

    தமிழ்ச்செல்வி,

    தமிழ்ச்செல்வன்,

    தமிழரசன்,

    தமிழ்க்கதிர்,

    தமிழ்க்கனல்,

    தமிழ்க்கிழான்,

    தமிழ்ச்சித்தன்,

    தமிழ்மணி,

    தமிழ்மாறன்,

    தமிழ்முடி,

    தமிழ்வென்றி,

    தமிழ்மல்லன்,

    தமிழ்வேலன்,

    தமிழ்த்தென்றல்,

    தமிழழகன்,

    தமிழ்த்தும்பி,

    தமிழ்த்தம்பி,

    தமிழ்த்தொண்டன்,

    தமிழ்த்தேறல்,

    தமிழ்மறை,

    தமிழ்மறையான்,

    தமிழ்நாவன்,

    தமிழ்நாடன்,

    தமிழ்நிலவன்,

    தமிழ்நெஞ்சன்,

    தமிழ்நேயன்,

    தமிழ்ப்பித்தன்,

    தமிழ்வண்ணன்,

    தமிழ்ப்புனல்,

    தமிழ்எழிலன்,

    தமிழ்நம்பி,

    தமிழ்த்தேவன்,

    தமிழ்மகன்,

    தமிழ்முதல்வன்,

    தமிழ்முகிலன்,

    தமிழ் வேந்தன்,

    தமிழ் கொடி.

    என்று தமிழோடு... தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும்!

    தமிழன் மட்டுமே, தமிழை மொழி மட்டுமல்லாது உயிராக நேசிக்கிறான்!

    பெற்றவர்களை ஏன் அம்மா அப்பா என்கிறோம் ?

    "அம்மா" "அப்பா" என்று ஏன்கூப்பிடுகிறோம்?

    எப்பவாவது எண்ணிப் பார்த்தீர்களா.?

    அந்தச் சொற்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு..?

    அந்தச் சொற்களுக்கான அர்த்தங்கள் என்ன...?

    அ- – உயிரெழுத்து.

    ம் –- மெய்யெழுத்து.

    மா –- உயிர் மெய்யெழுத்து.

    அ –- உயிரெழுத்து.

    ப் –- மெய்யெழுத்து.

    பா –- உயிர் மெய்யெழுத்து.

    தன் குழந்தைக்கு உயிரைக் கொடுப்பவர் தந்தை.

    தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் .

    இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை.

    எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.

    நமது "தமிழ்" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளன !

    - துலாக்கோல் சோம நடராசன்

    Next Story
    ×