search icon
என் மலர்tooltip icon

    பாலஸ்தீனம்

    • இஸ்ரேல் ஹமாஸ் போர் 4-வது நாளாக தீவிரமடைந்து வருகிறது
    • காசா டெல்லியின் பரப்பளவில் 25 சதவீதம் மட்டுமே இருக்கும்

    "ஆபரேஷன் அல்-அக்ஸா ஃப்ளட்" (Operation Al-Aqsa Flood) என்ற பெயரில் ஒரே நேரத்தில் 5000க்கும் அதிகமான ராக்கெட்டுகளை ஏவியும், தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் மூலமாகவும் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமையன்று தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பல இஸ்ரேலியர்களை ஹமாஸ் பணயக்கைதிகளாக சிறை பிடித்தது.

    ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் 4-வது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பிற்கு ஆயுதங்கள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே உள்ள 365 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட பகுதி காசா (Gaza). ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா, இந்திய தலைநகர் டெல்லியின் பரப்பளவில் 25 சதவீதம் இருக்கும். இங்கு சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

    காசாவில் இரண்டு இடங்களில் மட்டுமே எல்லையை கடக்கும் இடங்கள் உள்ளன. இரண்டு திசைகளில் இஸ்ரேலும், ஒரு திசையில் எகிப்தும், மற்றொரு திசையில் மத்திய தரைகடலும் காசாவை சூழ்ந்துள்ளது. அங்கிருந்து உள்ளேயும் வெளியேயும் மக்கள் செல்வதை இஸ்ரேல் தீவிரமாக கண்காணிக்கிறது.

    ஆனால் நிலம், நீர் மற்றும் வான்வழியை மட்டுமே இஸ்ரேல் கண்காணிப்பதால், அதை தாண்டி பூமிக்கடியில் சுரங்கம் அமைத்து அவ்வழியில் ராணுவ ஆயுதங்களும், தளவாடங்களும் காசாவிற்குள் கொண்டு வரப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

    ஆயுத கடத்தலில் ஈடுபடுபவர்கள் மத்திய தரை கடல் பகுதியின் கரையோரங்களில் சுரங்கங்கள் அமைத்து இஸ்ரேல் கண்காணிப்பை தாண்டி காசாவிற்கு உள்ளே கொண்டு சென்றுள்ளனர். ஈரான் நாட்டில் உருவாக்கப்பட்ட ஃபாஹர்-3 (Fajr-3) ஃபாஹர்-5 (Fajr-5) ராக்கெட்டுகள் மற்றும் எம்-302 ராக்கெட்டுகள், ஈரானிலிருந்தும் சிரியாவிலிருந்தும் இந்த சுரங்க பாதைகள் வழியே கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

    இது மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறும் போது அமெரிக்கா தான் பயன்படுத்திய ஆயுதங்களை அங்கேயே விட்டுச்சென்றது. அவை அந்நாட்டின் தலிபான் அமைப்பினரின் உதவியுடன் ஹமாஸிற்கு  இதே வழியாக வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

    • அஹ்மத் யாசின் மற்றும் அப்தெல் அஜிஸ் அல்-ரன்டிஸ்ஸி என்பவர்களால் துவங்கப்பட்டது
    • இஸ்ரேலை ஒரு நாடாக ஹமாஸ் அங்கீகரிக்க மறுத்தது

    வான்வழி தாக்குதல்களில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள, இஸ்ரேல் "இரும்பு குவிமாடம்" (Iron Dome) எனும் அதி நவீன கட்டமைப்பை உருவாக்கியிருந்தது.

    ஆனால் நேற்று காலை, பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இதனை ஊடுருவி இஸ்ரேல் மீது 5 ஆயிரத்திற்கும் அதிகமான ராக்கெட் தாக்குதல்களை நடத்தியது. இது மட்டுமின்றி வான், தரை மற்றும் கடல் வழியே தனது அமைப்பாளர்களை கொண்டு இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லையை தாண்டி இஸ்ரேலுக்குள் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது ஹமாஸ்.

    உலகெங்கும் இந்த அமைப்பின் பின்னணியை குறித்து பெரிதும் விவாதிக்கின்றனர்.

    1987ல் எகிப்திய இஸ்லாமிய சகோதரத்துவம் (Egyptian Muslim Brotherhood) எனும் அமைப்பை சேர்ந்த அஹ்மத் யாசின் (Ahmed Yassin) மற்றும் அப்தெல் அஜிஸ் அல்-ரன்டிஸ்ஸி (Abdel Aziz Al-Rantissi) ஆகியவர்களால் துவங்கப்பட்டது ஹமாஸ் அமைப்பு. ஹமாஸ் என்றால் "தணியாத அதீத ஆர்வம்" (zeal) என பொருள்படும்.

    இஸ்ரேல், மேற்கு கரை மற்றும் காசா முனை (Gaza Strip) பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரே நாட்டை உருவாக்குவதையே லட்சியமாக கொண்டது ஹமாஸ்.

    1990களில் பாலஸ்தீனின் முன்னாள் அதிபர் யாசர் அராஃப்த் துவக்கிய ஃபடாஹ் (Fatah) எனும் இஸ்ரேலுக்கு எதிரான அமைப்பு, 2004ல் அராஃபத்தின் மறைவிற்கு பிறகு பலமிழக்க தொடங்கியது. அதற்கு பிறகு பாலஸ்தீனத்தில் ஹமாஸிற்கு மக்கள் ஆதரவும், குறிப்பாக இளைஞர்கள் ஆதரவும் கூடியது.

    இந்த அமைப்பினருக்கு தவா (Dawah) எனும் கலாசார பிரிவும், இஜ்ஜத் தின் அல்-கஸ்ஸாம் (Izzat Din al-Qassam) எனும் ராணுவ பிரிவும் உள்ளது. ஹமாஸிற்கு ஈரான், சிரியா மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் ஆதரவும் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலும் பாலஸ்தீனத்திலும் ஹமாஸ் அமைப்பிற்கு பெரும் ஆதரவு உள்ளது. ஈரான், சிரியா, ஏமன், கத்தார் மற்றும் ஜோர்டான் உட்பட பல நாடுகள் ஆதரவளிக்கிறது.

    ஆனால், எகிப்து, மொராக்கோ மற்றும் சவுதி அரேபியா ஹமாஸை ஆதரவிக்கவில்லை. மேலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, எகிப்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க மறுத்து, ஆயுத போராட்டத்தை ஊக்குவிக்கும் ஹமாஸிற்கும், இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை மூலமாக சிக்கலை தீர்த்து கொள்ள விரும்பும் ஃபடாஹ் அமைப்பிற்குமிடையே சித்தாந்த மோதல்கள் நடைபெறுகிறது.

    2021-22க்கான பாலஸ்தீனியத்தின் உள்நாட்டு தேர்தலில் ஹமாஸ் பங்கேற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

    தங்கள் மீதான நேற்றைய தாக்குதலுக்கு பதில் தாக்குதலில் தீவிரமாக இறங்கியுள்ள இஸ்ரேல், ஹமாஸை முற்றிலுமாக ஒழித்து விட உறுதியுடன் போரிட்டு வருகிறது. நீண்டகாலமாக செயல்பட்டு வந்த இந்த பயங்கரவாத அமைப்பின் முடிவு, இந்த போரின் இறுதியில் தெரிந்து விடும்.

    • ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல்
    • போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையில் சண்டை நடைபெற்றுள்ளது

    ஆக்கிரமிப்பு வெஸ்ட் பேங்க் (மேற்கு கரை) ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில், இஸ்ரேல் ராணுவம் டிரோன் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பாலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 30 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''போராளிகள் ஆதிக்கம் செலுத்தும் ஜெனின் அகதிகள் முகாமில் தேடுதல் வேட்டையில் ராணுவம் ஈடுபட்டது. அப்போது இஸ்ரேல் பாதுகாப்புப்படையின் டிரோன்கள் அந்த பகுதியில் தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலியர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டதாக இரண்டு பாலஸ்தீனர்களை கைது செய்துள்ளனர். இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை'' என்றார்.

    பாலஸ்தீனத்தின் ரமல்லா பகுதி சுகாதாரத்துறை அமைச்சகம், மூன்று இளைஞர்கள் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயம்அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் போராளிகள் உள்ளிட்ட இரண்டு குழுக்கள் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக கடுமையான சண்டையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளன. ஆனால், சண்டை குறித்து முழு விவரத்தை தெரிவிக்க மறுத்துவிட்டது.

    முன்னதாக, இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையிலான பாதசாரிகள் பயன்படுத்தும் பாதையை இஸ்ரேல் ராணுவம் மூடியதால் 25 வயது பாலஸ்தீனர், காசா முனையில் போராட்டத்தில் ஈடுபட்டபோது இஸ்ரேல் குண்டுக்கு பலியானார்.

    மேற்கு கரையில் அடிக்கடி இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால், ஒன்றரை வருடங்களாக அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் நடந்த சமீபத்திய வன்முறை இதுவாகும்.

    • நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என இஸ்ரேல் அறிவிப்பு
    • வெடிகுண்டுகள் தவறாக கையாளப்பட்டதால் விபத்து

    பாலஸ்தீனம்- இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்துவது வழக்கம். அதேபோன்று, காசா முனையை பிடித்து வைத்திருக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்துவார்கள். இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக போராட்டக்காரர்களும் காசா முனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த இடம் ஒரு போர்க்களம் போன்று காட்சியளிக்கும்.

    கடந்த 2005-ம் ஆண்டு காசா முனையில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறியது. அந்த பகுதியில் வேலியிடப்பட்டு எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன. 2007-ல் அந்த பகுதியை ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

    இஸ்ரேல் ராணுவம் வெளியேறிய நாளை நினைவு கூறும் வகையில் போராட்டக்காரர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டனர். அவர்கள் நாட்டின் கொடியை அசைத்து, டயர்களை எரித்து போராட்டடத்தில் ஈடுபட்டனர். வேலியை தகர்க்கும் வகையில் குண்டுகளை வீச முயன்றுள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக குண்டுகள் வீசப்படுவதற்கு முன்னதாகவே வெடித்துள்ளது. இதனால் மிகப்பெரிய சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

    இந்த விபத்துக்கு முன், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் கையெறிகுண்டுகள், மற்ற வெடிபொருட்களை எல்லையை நோக்கி வீசினார்கள். ராணுவம் அவர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தினர். இதில் 25 பேர் காயம் அடைந்தனர் என ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜெனின் நகரில் உள்ள பள்ளிகள் மற்றும் பிற தங்குமிடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
    • பல முகாம்களில் வசிப்பவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பால் பவுடர் ஆகியவற்றுக்கான பற்றாக்குறை இருப்பதாக தகவல்.

    பல தசாப்தங்களாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-பாலஸ்தீனிய போரின் முக்கிய நிகழ்வாக, நேற்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில், இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள், ஜெனின் நகர அகதிகள் முகாமில் இருந்து வெளியேறியதாக பாலஸ்தீனிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சுமார் 18,000 பாலஸ்தீனியர்கள் வசிக்கும் அந்த முகாமில் இருந்து இதுவரை 3000 பேர் வெளியேறியிருக்கின்றனர் என்றும் அவர்களை ஜெனின் நகரில் உள்ள பள்ளிகள் மற்றும் பிற தங்குமிடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறியிருக்கிறார், ஜெனின் துணை ஆளுநர் கமல் அபு அல்-ரூப்.

    ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களிலேயே இல்லாத அளவிற்கு மிகத் தீவிரமான இராணுவ நடவடிக்கை என்று கூறும் விதமாக ஒரு தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியிருக்கிறது.

    நேற்று தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்தி, நூற்றுக்கணக்கான துருப்புக்களையும் பாலஸ்தீன போராளிகளை தாக்க அனுப்பியிருக்கிறது.

    இந்த தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர் என்றும், காயமடைந்தவர்களில் 20 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் செய்தித்தொடர்பாளர் ஜூலியட் டூமா, முகாமில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்தினார்.

    பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனமான யு.என்.ஆர்.டபிள்யு.ஏ. (UNRWA), பல முகாம்களில் வசிப்பவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பால் பவுடர் ஆகியவற்றுக்கான பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

    வடக்கு மேற்குக் கரை நகரமான ஜெனின் நகரின் புறநகர் பகுதிகளில் உள்ள முகாம், 1950களில் அமைக்கப்பட்டது. ஒரே இனம் சார்ந்த பெருங்குழுவினர் மோசமான சூழ்நிலைகளில் வாழ்க்கை நடத்தும் "கெட்டோ" (ghetto) போன்ற இந்த பகுதி, நீண்ட காலமாக பாலஸ்தீனியர்களுக்கு ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கான பகுதியாக அந்நாடு கருதுகிறது. ஆனால், இஸ்ரேல் அரசாங்கமோ இப்பகுதியை பயங்கரவாதம் தோன்றி வளரும் இடமாக பார்க்கிறது.

    ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் ஃபத்தாஹ் உள்ளிட்ட போராளிக் குழுக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய போராளிகள் அந்த இடத்தை தளமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.
    • லெபனான் தலைநகரில் இயங்கும் பாலஸ்தீன ஆயுதப்படையினர் இஸ்ரேல் மீது சரமாரியாக 34 ராக்கெட் குண்டுகளை வீசினர்.

    காசா:

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீன நாட்டில் காசா முனை ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் கருதுகிறது.

    சில பகுதிகள் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த பகுதியில் இஸ்ரேலிய ஆயுத படை மற்றும் பாலஸ்தீன படைகளுக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜெருசேலத்தில் உள்ள மசூதி ஒன்றில் முஸ்லீம்கள் தொழுகையின் போது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த லெபனான் தலைநகரில் இயங்கும் பாலஸ்தீன ஆயுதப்படையினர் இஸ்ரேல் மீது சரமாரியாக 34 ராக்கெட் குண்டுகளை வீசினர்.

    இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் உள்ள பாலஸ்தீன ஆயுதப்படைகள் மீது இன்று காலை வான்வெளி தாக்குதலை நடத்தியது. சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கியது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    இந்த சண்டையில் எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவல் தெரியவில்லை. இந்த நிலையில் நமது எதிரிகள் நம்மை குறைத்து மதிப்பிட வேண்டாம் என இஸ்ரேல் பிரதமர் வீடியோ மூலம் தெரிவித்து உள்ளார்.

    • பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல் பல ஆண்டுகளாக நீண்டு வருகிறது.
    • ஜெருசலேமில் யூத மத வழிபாட்டு தலம் அருகே நடந்த பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் இறந்தனர்.

    ஜெருசலேம்:

    பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல் பல ஆண்டுகளாக நீண்டு வருகிறது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்து போராடி வருகிறது. ஆனால் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாகக் கருதி ஒழித்துக்கட்ட இஸ்ரேல் முயற்சிக்கிறது. இதனால் மேற்கு கரை, காசா முனை பகுதியில் இரு தரப்பும் அடிக்கடி மோதி வருகின்றன. இதனால் இரு தரப்பிலும் தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்படுகிறது.

    இதற்கிடையே, ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். மேற்குக் கரையின் போராளிகளின் கோட்டையான ஜெனின் அகதிகள் முகாமில் நேற்று நடத்திய சோதனையின்போது இந்த வன்முறை நிகழ்ந்ததாக கூறினர்.

    இந்த மாதத்தில் மோதல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 29 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து மேற்குகரையில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசப்பட்டது. இந்த ஏவுகணைகளை இஸ்ரேலில் உள்ள ஏவுகணை தடுப்பு அமைப்பு நடு வானில் தடுத்து அழித்தது. இதனால், இஸ்ரேல், மேற்குகரை இடையே பதற்றம் அதிரித்தது.

    இந்நிலையில், இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிவி யாகொவ் பகுதியில் யூத வழிபாட்டு தலம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காரில் வந்த பயங்கரவாதி தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த இஸ்ரேலியர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.

    துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    • தீவிபத்தில் மூச்சுத்திணறி மற்றும் உடல் கருகி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டு 21 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.

    ஜெருசலேம்:

    பாலஸ்தீனத்தின் காசாவின் வடக்கே ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அடுக்குமாடி கட்டிடம் முழுவதும் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    இந்நிலையில், தீவிபத்தில் மூச்சுத்திணறி மற்றும் உடல் கருகி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 7 குழந்தைகளும் அடங்குவர். அவர்களது உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர். உயிரிழந்தவர்களின் முழு விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

    தீ விபத்து குறித்து தகவலறிந்த பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இரங்கல் தெரிவித்ததுடன், தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என தெரிவித்தார்.

    அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு 21 பேர் பலியானது அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×