என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10th exam"

    • அன்புத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
    • உற்சாகத்தோடும், துணிவுடனும் தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம்.

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தன. பிளஸ்-1 தேர்வு 5-ந் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது.

    இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (28-ந் தேதி) தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். ஏப்ரல் 15-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

    இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அன்புத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    மேலும், உற்சாகத்தோடும், துணிவுடனும் தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மத்திய புழல் சிறையில் 64 கைதிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்.
    • மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கி 20-ந் தேதி முடிவடைகிறது.

    அதன்படி இன்று (6-ந் தேதி) தமிழ், 10-ந் தேதி ஆங்கிலம், 13-ந் தேதி கணிதம், 17-ந் தேதி அறிவியல், 20-ந் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது .

    மொத்தம் 188 தேர்வு மையங்களில் நடைபெறும் 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 25 ஆயிரத்து 531 மாணவர்களும் 24 ஆயிரத்து 682 மாணவிகளும் என மொத்தம் 50 ஆயிரத்து 213 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதில் 24, 506 ஆண்களும் 23 ஆயிரத்து 819 பெண்களும் மற்றும் 48,325 பேர் எழுதுகின்றனர்.

    தனித் தேர்வாளர்கள் 23 ஆயிரத்து 78 பேர், நரம்பியல் குறைபாடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் 270 பேர், மத்திய புழல் சிறையில் 64 கைதிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்.

    இந்த பொதுத் தேர்வில் 2059 அறை கண்காணிப்பாளர் மற்றும் 239 பறக்கும் படையினர் பணி ஈடுபட்டு வருகின்றனர்.

    மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், தேர்வு மையங்களில் செல்போன், கணினி போன்ற டிஜிட்டல் வாட்ச், பெல்ட், ஷூ அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டு மாணவர்கள் சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்கு உள்ளே அனுமதித்தனர்.

    • படிக்கும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஜெயலட்சுமிக்கு ஆறுதல் கூறினர்.
    • தந்தை இறந்த சோகத்திலும் அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் மாணவி தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், பெரியமேட்டுப் பாளையம் 1-வது தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது57). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பவானி.

    இவர்களது மகள்கள் பொற்செல்வி, ஜெயலட்சமி. இவர்களில் பொற்செல்வி தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். ஜெயலட்சமி காலடிப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார்.

    மூர்த்தி தனது மகள் ஜெயலட்சுமியிடம், படித்தால்தான் வாழ்க்கை யில் முன்னேற முடியும், எந்த சூழ்நிலையிலும் படிப்பை விடக்கூடாது என்று அடிக்கடி கூறி வந்தார். தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இன்று கடைசி தேர்வு என்பதால் ஜெயலட்சுமி தேர்வுக்கு தயாராகி வந்தார்.

    இந்நிலையில் மூர்த்திக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் அவர் இறந்து போனார். இதனால் கடைசி தேர்வு எழுத தயாரான ஜெயலட்சுமி நிலைகுலைந்தார். தந்தை இறந்த துக்கத்தில் எப்படி தேர்வு எழுத செல்வது என்று கலங்கினார்.

    எனினும் தந்தையின் கல்வி ஆசையை நிறைவேற்றும் வகையில் இன்று காலை ஜெயலட்சுமி துக்கத்திலும் கடைசி தேர்வை எழுத பள்ளிக்கு சென்றார். இதுபற்றி அறிந்ததும் அவருடன் படிக்கும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஜெயலட்சுமிக்கு ஆறுதல் கூறினர். பின்னர் ஜெயலட்சுமி தனது கடைசி பரீட்சையை எழுதினார்.

    இதுபற்றி அவர் கூறும்போது, எனது தந்தை எப்போதும் படிப்பில் கவனம் செலுத்தும்படி கூறுவார். அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் தேர்வு எழுதினேன் என்றார். இன்று மாலை மூர்த்தியின் இறுதி சடங்கு நடைபெறு கிறது. தந்தை இறந்த சோகத்திலும் அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் மாணவி தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்விக்கான உதவிகளை அரசு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
    • தாய் கஸ்தூரி கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்தார்.

    கிருஷ்ணகிரி :

    கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதியினர். இவர்களது மகன் கீர்த்தி வர்மா. இவர் நான்கு வயதில் வீட்டின் மாடியில் விளையாடியபோது எதிர்பாராத விதமாக வீட்டை ஒட்டி சென்ற மின் கம்பியை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி கீர்த்தி வர்மா தனது இரண்டு கைகளையும் இழந்துள்ளார். மகனின் இந்த நிலையை கண்ட அருள்மூர்த்தி வீட்டை விட்டு சென்று விட்டார்.

    இதனால் எந்த ஆதரவும் இல்லாததால் கஸ்தூரி தனது இரண்டு கைகள் இல்லாத மகனுடன் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஜீனூர் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்தார். இரண்டு கைகளும் இல்லை என்றாலும் தன்னம்பிக்கையை கைவிடாத கீர்த்திவர்மா நெடுமருதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.

    இந்த நிலையில் நேற்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவன் கீர்த்திவர்மா 437 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இரண்டு கைகள் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் போராடி சாதனை படைத்த மாணவனை அவரது தாய் கஸ்தூரி மற்றும் ஆசிரியைகள் இனிப்பு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    இது குறித்து மாணவன் கீர்த்திவர்மா கூறுகையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் பெற்றுள்ளேன். இந்த மதிப்பெண் எடுக்க காரணமாக இருந்த பெற்றோர், ஆசிரிய, ஆசிரியைகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

    மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்தி வர்மாவின் சாதனையை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கீர்த்தி வர்மாவின் தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும், அந்த மாணவனுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், உயர்கல்வி படிப்பதற்கான உதவிகளையும் அரசு செய்து தரும் என உறுதி அளித்தார்.

    இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்கு செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் கீர்த்தி வர்மாவின் வெற்றிச்செய்தி என் கவனத்தை ஈர்த்தது. மாணவர் கீர்த்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

    அவரது தாயாரை தொடர்புகொண்டு பேசினேன். அவருக்கு கைகள் பொருத்திட தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் கீர்த்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்று சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.
    • தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னை :

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியானது.

    www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களுக்கு சென்று மாணவ-மாணவிகள் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    மேலும் பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9 லட்சத்து 26 ஆயிரத்து 663 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் சுமார் 9 லட்சத்து 8 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.
    • தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.55 சதவீதம் ஆகும்.

    கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.

    தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவிகள் 94.53 சதவீதமும், மாணவர்கள் 88.58 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் முந்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று வழக்கம்போல் அசத்தியுள்ளனர்.
    • 1,364 அரசுப்பள்ளி மாணவர்கள் 100-க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சென்னை:

    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களுக்கு சென்று மாணவ-மாணவிகள் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று வழக்கம்போல் அசத்தியுள்ளனர்.

    1,364 அரசுப்பள்ளி மாணவர்கள் 100-க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம் பின்வருமாறு:-

    அரசு பள்ளிகளில் 87.90 சதவீதமும், அரசு உதவிபெறும் பள்ளிகள் 91.77 சதவீதமும், சுயநிதி பள்ளிகள் 97.43 சதவீதம், பெண்கள் பள்ளியில் 93.80 சதவீதமும்,, ஆண்கள் பள்ளி 83.17 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாட வாரியாக 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் விவரம்:- தமிழ் 8 பேர், ஆங்கிலம் 415, கணிதம் 20,691, அறிவியல் 5,104, சமூ அறிவியல் 4,428.

    பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:- தமிழ் 96.85 சதவீதம், ஆங்கிலம் 99.15 சதவீதம், கணிதம் 96.75 சதவீதம், அறிவியல் 96.72 சதவீதம், சமூக அறிவியல் 95.74 சதவீதம்.

    தேர்ச்சி விகிதத்தில் முதல் 5 இடங்களை பெற்ற மாவட்டங்கள் விவரம்:-

    அரியலூர்- 97.31 சதவீதம்

    சிவகங்கை - 97.00 சதவீதம்

    ராமநாதபுரம்- 96.40 சதவீதம்

    கன்னியாகுமரி- 96.20 சதவீதம்

    திருச்சி- 95.20சதவீதம்

    • குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
    • உங்களது பாதைக்கு வழிகாட்ட நான் முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன.

    சென்னை :

    தமிழகத்தில் இன்று காலை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.55 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!

    மாணவச் செல்வங்களே... உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்!

    குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

    மேல்நிலைக் கல்வி - தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட நான் முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    • 6885 மாணவர்கள் 8181 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 66 பேர் தேர்ச்சி அடைந்தனர்.
    • வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 82.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் 9104 மாணவர்கள் 9253 மாணவிகள் என 18,357 தேர்வு எழுதினர். இதில் 6885 மாணவர்கள் 8181 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 66 பேர் தேர்ச்சி அடைந்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 82.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மிக குறைந்த தேர்ச்சியால் வேலூர் மாவட்டம் தமிழக அளவில் கடைசி இடத்தை பிடித்தது குறிப்பிட்டத்தக்கது.

    இந்தத் தேர்வில் திருப்பத்தூர் மாநில அளவில் 31-வது இடத்தை பிடித்துள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்துக்கு முன்னதாக 37-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 86.10 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் 36-வது இடத்தைப்பிடித்துள்ளது.

    • புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 553 மாணவர்கள் பாட வாரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
    • அறிவியலில் 3 பேரும், சமூகவியலில் 4 பேர் என 22 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த மார்ச் மாதம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது.

    இதில் புதுவை, காரைக்காலை சேர்ந்த 289 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 590 மாணவர்கள், 7 ஆயிரத்து 362 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 952 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 6 ஆயிரத்து 527 மாணவர்கள், 6 ஆயிரத்து 801 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 328 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை, காரைக்காலில் அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.14 ஆகும்.

    இதில் புதுவை, காரைக்காலில் அரசு பள்ளிகளில் 2 ஆயிரத்து 924 மாணவர்கள், 3 ஆயிரத்து 99 மாணவிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 23 பேர் தேர்வு எழுதினர். இதில் 2 ஆயிரத்து 86 மாணவர்கள், 2 ஆயிரத்து 617 மாணவிகள் என மொத்தம் 4 ஆயிரத்து 703 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அரசு பள்ளிகளில் மட்டும் 78.08 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவையில் மட்டும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரத்து 267 மாணவர்கள், 2 ஆயிரத்து 430 மாணவிகள் என 4 ஆயிரத்து 697 பேர் தேர்வு எழுதினர். இதில் ஆயிரத்து 713 மாணவர்கள், 2 ஆயிரத்து 124 மாணவிகள் என மொத்தம் 3 ஆயிரத்து 837 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுவையில் அரசு பள்ளிகள் மட்டும் 81.69 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

    காரைக்காலில் 657 மாணவர்கள், 669 மாணவிகள் என மொத்தம் 1,326 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 373 மாணவர்கள், 493 மாணவிகள் என மொத்தம் 866 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    காரைக்காலில் அரசு பள்ளிகளில் 65.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 289 அரசு, தனியார் பள்ளிகள் 107 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுவையில் 90 பள்ளிகளும், காரைக்காலில் 17 பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 108 அரசு பள்ளிகளில் 8 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுவையில் 7, காரைக்காலில் ஒரு பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

    புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 553 மாணவர்கள் பாட வாரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    ஆங்கிலத்தில் 20 பேர், கணிதம் 355 பேர், அறிவியல் 77 பேர்,சமூகவியலில் 101 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் புதுவை, காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகளில் கணிதத்தில் 15 பேரும், அறிவியலில் 3 பேரும், சமூகவியலில் 4 பேர் என 22 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    • அரியலூர் மாவட்ட மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பில் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்து இருக்கிறார்கள்.
    • சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 26-ந்தேதி முதல் தொடங்கி ஏப்ரல் மாதம் 8-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவ-மாணவிகள் எழுதினா்.

    தோ்வு முடிவுகளை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டது. தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விவரம் வருமாறு:-

    10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 8 லட்சத்து 94 ஆயிரத்து 266 பேரில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.55 சதவீதமாகும்.

    கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.16 சதவீதம் இந்த தடவை அதிகம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.33 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு கூடுதலாக மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

    வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். தேர்வு எழுதிய 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 மாணவர்களில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 88.58 சதவீத மாணவர்கள் தேர்ச்சியாகும்.

    மாணவிகளை பொறுத்தவரை 4 லட்சத்து 47 ஆயிரத்து 061 பேர் தேர்வு எழுதிய நிலையில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 94.54 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவர்களை விட 5.5 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 12 ஆயிரத்து 625 பள்ளிகள் நடத்தி இருந்தன. இதில் 4,105 பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 1,364 பள்ளிகள் 100-க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 87.97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 91.77 சதவீதம் பேரும், தனியார் சுயநிதி பள்ளிகளில் 97.43 சதவீத பேரும், இருபாலர்கள் படிக்கும் பள்ளிகளில் 91.93 பேரும், பெண்கள் பள்ளிகளில் 93.80 சதவீத பேரும், ஆண்கள் பள்ளிகளில் 83.17 சதவீத பேரும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

    தமிழ் பாடத்தில் 8 மாணவ-மாணவிகள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிகபட்சமாக கணிதம் பாடத்தில் 20 ஆயிரத்து 691 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 5,104 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 4,428 பேரும், ஆங்கிலத்தில் 415 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    தமிழ் மொழி பாடத்தில் 96.85 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலம் பாடத்தில் 99.15 சதவீதம் பேரும், கணிதத்தில் 96.78 சதவீத பேரும், அறிவியல் பாடத்தில் 96.72 சதவீத பேரும், சமூக அறிவியலில் 95.74 சதவீத பேரும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

    10-ம் வகுப்பு தேர்வை 13 ஆயிரத்து 510 மாற்றுத்திறனாளி மாணவர்கள் எழுதி இருந்தனர். அவர்களில் 12 ஆயிரத்து 491 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். தேர்ச்சி சதவீதம் 92.42 ஆகும்.

    தமிழகம் முழுவதும் உள்ள சிறை கைதிகளில் 260 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 228 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    10-ம் வகுப்பு தேர்வில் வழக்கமாக விருதுநகர் மாவட்டம் சாதனை படைத்து வந்தது. தற்போது அரியலூர் மாவட்ட மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பில் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்து இருக்கிறார்கள்.

    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன.

    முன்னதாக இன்று காலை 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் மாணவ, மாணவிகள் பள்ளிகளில் சமா்ப்பித்து இருந்த உறுதிமொழிப்படி வத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த கைப்பேசி எண்ணுக்கு தோ்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இணையதளங்கள் வாயிலாகவும் தோ்வு முடிவை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

    • சிறு வயதிலிருந்தே படிப்பில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன்.
    • தினசரி பாடங்களை அன்று வீட்டிற்கு சென்றதும் படித்து முடித்துவிடுவேன்.

    ரெட்டியார்சத்திரம்:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள மண்டவாடி புதூர் கிராமத்தை சேர்ந்த காவ்யாஸ்ரியா என்ற மாணவி 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    இவர் தமிழில் 99 மதிப்பெண்களும், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியில் ஆகிய 4 பாடங்களிலும் தலா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஒட்டன்சத்திரம் அக்ஷயா அகாடமி பள்ளியில் படித்த மாணவியான இவரது தந்தை கருப்புச்சாமி விவசாயி. தாய் ரஞ்சிதம் குடும்பத்தலைவியாக உள்ளார்.

    மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவியை பள்ளி தாளாளர், ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் இனிப்பு கொடுத்து வாழ்த்தினர். தனது வெற்றி குறித்து மாணவி கூறுகையில்,

    சிறு வயதிலிருந்தே படிப்பில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன். குறிப்பாக 10-ம் வகுப்பு வந்தவுடன் தொலைக்காட்சி பார்ப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டேன். தினந்தோறும் பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கவனமுடன் படித்தாலே போதும். அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்வேன்.

    தினசரி பாடங்களை அன்று வீட்டிற்கு சென்றதும் படித்து முடித்துவிடுவேன். இதனால் எந்த சிறப்பு வகுப்பிற்கும் நான் செல்லவில்லை. எனது படிப்பிற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தனர். மேலும் தாளாளர் மலர்விழி செல்வி, ஆசிரியர்கள் ஆகியோர் ஊக்கமளித்து என்னை சிறந்த மாணவியாக உருவாக்கி உள்ளனர்.

    எதிர்கால லட்சியம் என்பது ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி கலெக்டர் ஆகவேண்டும் என்பதே ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×