என் மலர்
நீங்கள் தேடியது "3 arrested"
- கஞ்சா விற்பனை செய்வதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 3 பேரையும் கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சூலூர்:
கருமத்தம்பட்டி அருகே கணியூர் வேட்டைக்காரன் குட்டை பகுதியில் மர்ம நபர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொ ண்டனர். அப்போது வேட்டைக்காரன் குட்டை பகுதியில் ஆதவன் மில் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பன்மாலை கண்கார், திகம்பர் கண்கார், தீபக் பிரதான் என தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்த போது அதில் 500 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து 3 பேரையும் கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சசிவிகுமார் கருவம்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
- நாய் உதவியுடன கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், சாய் லட்சுமி நகரை சேர்ந்தவர் சிவி குமார். இவர் கருவம்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லதா மயிலம் அடுத்த விழுக்கம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது 2 குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்ட நிலையில் இவர்களும் தங்களது பணிகளுக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய பொழுது வீட்டின் உள்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்பு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டிலிருந்த 36 சவரன் நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
தகவல் அறிந்த போலீஸ்சூப்பிரணடு ஸ்ரீநாதா மற்றும் திண்டிவனம் ஏ.எஸ். பி அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்க்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை மேற்புறமாக திருப்பி வைத்துவிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்கையும் அந்த மர்ம நபர்கள் திருடி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர். பின்பு இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இரண்டு தனிப்படைகளை அமைத்து கைரேகை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் மாவட்டக் போலீஸ் சூப்பிரண்டு சூபபிரண்ஸ்ரீ நாதா உத்தரவின் பேரிலும் ,திண்டிவனம் ஏ எஸ் பி அபிஷேக்குப்தா மேற்ப்பார்வையிலும் இயங்கிவந்த தனிப்படையினர் திண்டிவனம் முத்துகிருஷ்ணன் முதலி தெருவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வசித்து வந்து தற்போது சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வருகின்ற கனகராஜ் (33), சென்னை தனிஷ் லான் மோகன் (44), சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த மணி என்கிற பாட்டில் மணிகண்டன்(31) ஆகியோரைகைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திண்டிவனம் சாய் லட்சுமி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகை திருடியதும் , திண்டிவனத்தில் பல்வேறு வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.இவர்களிடம் இருந்து நகை பணம் ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடம் இருந்து 22 பவுன் நகைகள் மீட்டக்கப்பட்டன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. குற்றவாளிகளை பிடிக்க ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிர ரோந்து சுற்றி வந்தனர்.
சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது 2 பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும் போலீஸ் நிலை யத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.
அவர்க ளிடம் விசாரணை நடத்திய போது பொன்னையாபுரம் எம்.ஜி.ஆர். நகர் பாண்டி மகன் தங்கராஜ் (வயது 33), கருமலையான் மகன் செல்லமுத்து (24) என தெரியவந்தது. இவர்கள் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் வீடு புகுந்து நகை திருடியுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த 14 பவுன் நகைகள் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
பரமக்குடி அருகே நயினார்கோ விலை அடுத்துள்ள மும்முடி சாத்தானை சேர்ந்த ரோஜா என்பவரது வீட்டில் கடந்த வாரம் 8 பவுன் நகை, வெள்ளி கொலுசு திருடு போனது. இது தொடர்பாக நயினார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் வீடு புகுந்து திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீ சார் அந்த பெண்ணை கைது செய்து 8 பவுன் நகையை மீட்டனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் மோட்டாம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த்(30), கார்த்திகேயன்(42) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் குச்சி காட்டில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ஆண்டி(25) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- தலையில் அண்டாவை கவிழ்த்து மளிகை கடையில் திருடிய கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
- முகத்தை மறைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
செஞ்சி, டிச.3-
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள பிரபல மளிகை கடையில் கொள்ளை போனது. இந்த கடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக மாடி வழியே கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடன் சி.சி.டி.வி. கேமராவில் முகம் பதிவாகாமல் இருப்பதற்கு தலையில் அண்டாவை கொண்டு முகத்தை மறைத்து டார்ச் லைட் அடித்து கடையில் உள்ள பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் ராஜகோபால் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் செ ஞ்சியில்சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்த 2பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் செஞ்சி காந்தி பஜாரில் உ ள மளிகை கடையில் உள்ளே புகுந்து தலையில் அண்டாவை கொண்டு முகத்தை மறைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதுதெரிய வந்தது. இத்தி ருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட செஞ்சி சக்கராபுரம் பகுதியை சேர்ந்த உத்தரவேல் (வயது39), வெங்க டேசன் , செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கர்ணன் ஆகியயோர் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகி ன்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். மேலும் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வருவதை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு தொடர்ந்து சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், புதுநகர், சிதம்பரம் மதுவிலக்கு பிரிவு போலீசார் அந்தந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது 3பேர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதில் சிதம்பரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 27) கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இந்திரா நகர் முனுசாமி (வயது 26)கடலூர் முதுநகர் அருண்குமார் (வயது 24)ஆகிய 3பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மேலும் கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- ௩ பேர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். மேலும் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வருவதை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு தொடர்ந்து சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், புதுநகர், சிதம்பரம் மதுவிலக்கு பிரிவு போலீசார் அந்தந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது 3பேர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதில் சிதம்பரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 27) கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இந்திரா நகர் முனுசாமி (வயது 26)கடலூர் முதுநகர் அருண்குமார் (வயது 24)ஆகிய 3பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மேலும் கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- கொட்டாம்பட்டி அருகே காரில் கடத்திய 100 கிலோ குட்கா-புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
- இந்த கடத்தலில் தொடர்புடைய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகநாதன் மற்றும் போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து அதிலிருந்து 3 பேரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்ட போது அதில் 100 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் கடத்துவது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரணை நடத்தியதில் அவர்கள் கீழப்பன ங்காடியைச் சேர்ந்த பாலமுருகன் (36), நெடுங்குளம் முருகன் (42), சொக்கலிங்கபுரம் சாகுல் ஹமீது (43) என தெரியவந்தது.
3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- போலீசாரை கண்டவுடன் அங்கு நின்று கொண்டிருந்த 3 நபர்கள் தப்பிஒட முயன்றனர்.
- திண்டிவனத்தை சேர்ந்த செல்வகுமார் (22), அன்பழகன் (44) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் ஏரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக திண்டிவனம் போலீஸ் உதவி சுப்பிரண்டு அபிஷேக் குப்தாவிற்கு தகவல் வந்தது. அவரின் உத்தரவின் பேரில் ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டவுடன் அங்கு நின்று கொண்டிருந்த 3 நபர்கள் தப்பிஒட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் வந்து விசாரித்ததில் சாரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (வயது 28), திண்டிவனத்தை சேர்ந்த செல்வகுமார் (22), திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியை சேர்ந்த அன்பழகன் (44) ஆகியோர் என்பது தெரிய வந்தது இவர்கள் வைத்திருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பெண் ஜவுளி வியாபாரியை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ரூ. 57 லட்சம் வரை பணம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
மதுரை
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி நம்புனேஸ்வரி (வயது 34). இவர் ஆன்லைன் மூலம் ஜவுளி வணிகம் செய்து வருகிறார். இவர் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்ப தாவது:-
மதுரை ஆத்திகுளம் சுபம் தெருவை சேர்ந்த பாரதி சரவணன் குடும்பத்தினர் எங்களிடம் 2019-ம் ஆண்டு முதல் ஜவுளி பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வந்தனர். இதற்கான பணத்தை அவர்கள் பல ஆண்டுகளாக செலுத்த வில்லை.
அந்த வகையில் பாரதி சரவணன் குடும்பத்தினர் ரூ. 57 லட்சம் வரை தர வேண்டியுள்ளது. நாங்கள் பணத்தை கேட்டோம். அதற்கு அவர்கள், 'அதோ தருகிறோம், இதோ தருகிறோம்' என்று கூறி அலைகழித்தனர். இந்த
நிலையில் எனது கணவர் கார்த்திகேயன் கடன் தொல்லை காரணமாக, கடந்த 9-ந் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நான், எனது தந்தை பெரியசாமி, தாய் ராஜேஸ்வரி, பெரியம்மாள் ராமலட்சுமி ஆகிய 3 பேரும் மதுரைக்கு வந்தோம்.
பாரதி சரவணன் குடும்பத்தினரை சந்தித்து ரூ. 57 லட்சத்தை கேட்டோம். அவர்கள் தர மறுத்தது மட்டுமின்றி, அவதூறாக பேசினர். இதை எனது தந்தை தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த பாரதி சரவணன், அவரது மனைவி ராஜேஸ்வரி, தங்கை மகாலட்சுமி, உறவினர் குட்டி கார்த்திக் ஆகிய 4 பேரும் எங்களை உருட்டு கட்டையால் தாக்கினர். எனவே போலீசார் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன் ஆலோசனையின் பேரில், தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி பாரதி சரவணன், அவரது மனைவி ராஜேஸ்வரி, தங்கை மகாலட்சுமி ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான உறவினர் குட்டி கார்த்திக்கை போலீ சார் தேடி வருகின்றனர்.
- ஏ.டி.எம். மையத்தில் சில மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.
- 3 பேர் மீது கொள்ளை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
கடலூர் :
வடலூர் ராகவேந்தி ரா சிட்டியில் தேசியமய மாக்கப்பட்ட இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியின் முகப்பில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையமும் இயங்கி வருகிறது. சம்பவத்தன்று ஏ.டி.எம். மையத்தில் சில மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது அங்கிருந்த அலாரம் ஒலிக்கவே மர்மநபர்கள் தப்பியோடி விட்டனர். இது குறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் வடலூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வடலூர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடலூர் ரெயில்வே கேட் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் 4 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணான பதிலை கூறியதோடு, அதிலிருந்த ஒரு நபர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து மீதமிருந்த 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் வடலூர் கணபதி நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 56), வடலூர் ஆர்.கே. நகர் ராஜேந்திரன் (34), நெய்வேலி இந்திராநகர் ராஜா (42) என்பது தெரியவந்தது. மேலும், இந்த 3 பேரும் இந்தியன் வங்கி ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் போலீசாரின் தீவிர விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீது கொள்ளை முயற்சி வழக்கு பதிவு செய்த வடலூர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கலவரத்தின் போது பள்ளி சொத்துகள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்தனர்.
- சொத்துகளை சேதப்படுத்தியதாக மேலும் 3 பேர் கைது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின் போது பள்ளி சொத்துகள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்ததோடு, போலீசார் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த கலவரத்தை தூண்டி யவர்கள் மற்றும் கலவ ரத்தில் கலந்து கொண்டு பள்ளிசொத்துகளை சேதப்படுத்தியவர்களை சிறப்பு புலனாய்வு குழுவி னர் கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இது தொடர்பாக இதுவரை 436 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலை யில் கலவரத்தின் போது பள்ளி சொத்துகளை சேதப்ப டுத்தியதாக கள்ளக் குறிச்சி அருகே லட்சியம் கிரா மத்தை சேர்ந்த மணி கண்டன் (வயது 32), இரு சக்கர வாகனங்களை சேதப்டுத்தியதாக சங்கரா புரம் தாலுகா மூரார்பா ளையம் கிராமத்தை சேர்ந்த மதுபாலன் (22), போலீஸ் வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சின்ன சேலம் தாலுகா ராயர்பா ளை யத்தை சேர்ந்த சீராளன் (28) ஆகிய 3 பேரை வீடியோ ஆதா ரங்களை வைத்து கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.