என் மலர்
நீங்கள் தேடியது "பாலியல் பலாத்காரம்"
- போக்சோவில் தொழிலாளி கைது
- சிறையில் அடைத்தனர்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடியை அடுத்த உதயேந்திரம் பகு தியை சேர்ந்தவர் ராஜா (வயது 44). கூலித்தொழிலாளி. இவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மனந லம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய் ததாக கூறப்படுகிறது. உடனடியாக சிறுமியை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு ராஜாவின் வீட் டிற்கு சென்றனர்.
அப்போது அங்குராஜா இல்லாத தால், ராஜாவின் மனைவியை வெளியே அனுப்பிவிட்டு, அப்பகுதி மக்கள் ராஜாவின் வீட் டுக்கு பூட்டு போட்டனர்.
பின்னர் சம்பவம் குறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார். அளித்துள்ளனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார், தலைமறைவான ராஜாவை பிடித்து போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு தன் சொந்த மகளையே பாலியல் துன்புறுத்தல் செய்து போக்சோ சட்டத் தின் கீழ் கைது செய்து சிறையில்அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரு வாரங்களுக்கு முன், திருமணம் செய்யலாம் என்று கூறி, சிறுமியை அழைத்து சென்று உறவினர் வீட்டில் தங்க வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
- புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட குணாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் குணால் (வயது 22). இவர் அலங்கியத்தை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பழகி வந்தார்.இரு வாரங்களுக்கு முன், திருமணம் செய்யலாம் என்று கூறி, சிறுமியை அழைத்து சென்று உறவினர் வீட்டில் தங்க வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் புகார் செய்தனர்.புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட குணாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ஜெயராமன் திருமணம் செய்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
- செவிலியரை கடலூருக்கு அழைத்து வந்த ஜெயராமன் திடீரென்று பிடிக்கவில்லை என்று கூறினார்.
கடலூர்:
கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ஜெயராமன் (வயது 22). என்ஜினியர். இவரும் 23 வயது செவிலியரும் கடந்த சில ஆண்டுகளாக பழகி வந்தனர். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து ஜெயராமன் திருமணம் செய்து கொள்வதாக செவிலியர் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த 1 மாதத்திற்கு முன்பு பரங்கிப்பேட்டை புதுப்பேட்டை பகுதிக்கு அழைத்து சென்று ஜெயராமன் திருமணம் செய்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று செவிலியரை கடலூருக்கு அழைத்து வந்த ஜெயராமன் திடீரென்று பிடிக்கவில்லை என்று கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செவிலியர்பெண் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், ஜெயராமன் தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு உடந்தையாக அவரது தந்தை சுந்தரமூர்த்தி, தாய் ராஜேஸ்வரி, மகள் ஜெய ஸ்ரீ ஆகியோர் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் பேரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் பெண் செவிலியரை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருப்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
- பனியன் தொழிலாளியான ரியாஸ் அகமது என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார்.
திருப்பூர் :
திருப்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். மாநகராட்சி பள்ளியில்,பிளஸ் 2 படித்து வருகிறார். இவரிடம் முதலிபாளையத்தை சேர்ந்த பனியன் தொழிலாளியானரியாஸ் அகமது(வயது 23) என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார்.
இந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது ரியாஸ் அகமது, சிறுமியை மேட்டுப்பாளையத்துக்குஅழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. சிறுமியை மீட்ட போலீசார்,ரியாஸ் அகமதுவை 'போக்சோ' வழக்கில் கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், சிறையில் அடைத்தனர்.
- காட்டுமன்னார்கோயில் தாத்தா வட்டம் பகுதியை சேர்ந்த செங்கதிர் (வயது 32) என்பவரும் அதே வீட்டிற்கு சென்று தங்கினார்.
- இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சடைந்து பாட்டியிடம் தெரிவித்தனர்.
கடலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேல்மூங்கிலடி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கினார். அப்போது இந்தப் பெண்ணின் மாமா முறையான சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோயில் தாத்தா வட்டம் பகுதியை சேர்ந்த செங்கதிர் (வயது 32) என்பவரும் அதே வீட்டிற்கு சென்று தங்கினார். இந்நிலையில் வீட்டில் பாட்டி இல்லாத நேரத்தில் தனியாக அந்தப் பெண் இருந்ததே நோட்டமிட்ட செங்கதிர் அந்த பெண்ணிடம் சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சடைந்து பாட்டியிடம் தெரிவித்தனர். இது குறித்து பாட்டி சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து செங்கதிரை கைது செய்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவமணி பலமுறை இளமை பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
- 16 வயதில் கர்ப்பமானதால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண். அதே பகுதியை சேர்ந்த சிவமணி (வயது 24) கூலித்தொழிலாளி. இவர் இளம் பெண்ணிடம் சென்று ஆசை வார்த்தை கூறி அவரை ஏமாற்றி கடந்த மார்ச் 16-ம் தேதி பண்ருட்டி திருவதிகை கோவிலில் சிவமணி இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதன் பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த இளம் பெண்ணை சிவமணி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து சிவமணி அந்த பெண்ணை சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிவமணி பலமுறை இளமை பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண்ணை சிவமணி சிகிச்சைக்காக சென்னையிலிருந்து கடலூருக்கு அனுப்பி வைத்துள்ளார். சிவமணி வராததால் சந்தேகம் அடைந்த இளம்பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். மேலும் ஆஸ்பத்திரியில் 16 வயது இளம்பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தனர்.
மேலும் 16 வயதில் கர்ப்பமானதால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வள்ளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் குழந்தை திருமண தடை சட்டம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த சிவமணியை வலை வீசி தேடி வருகின்றனர்.
- பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடூமையை கூறி கதறி அழுதுள்ளாள்.
- பெற்றோர் மாட்டுங்கா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர்.
மும்பை :
மும்பை மாட்டுங்கா பகுதியில் மாநகராட்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. எனவே சிறுமியின் தாய் அவளிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். அப்போது சிறுமி அதிர்ச்சி தகவலை வெளியிட்டாள்.
கடந்த திங்கட்கிழமை சிறுமியுடன் படிக்கும் மாணவ-மாணவிகள் ஆண்டு விழா நடன நிகழ்ச்சி ஒத்திகைக்காக வெளியே சென்று இருந்தனர். வகுப்பறையில் இந்த மாணவி தனியாக இருந்து உள்ளாள். இந்த சந்தர்ப்பத்தில் சிறுமியுடன் 8-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் அங்கு வந்து உள்ளனர்.
அந்த மாணவர்கள் 2 பேரும் வகுப்பறையில் தனியாக இருந்த மாணவியிடம் அத்துமீறினர். மேலும் அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் சம்பவம் குறித்து வெளியே சொன்னால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக்கூறி மிரட்டி சென்றுள்ளனர்.
இதனால் பயந்துபோன சிறுமி நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளாள். உடல்நல பாதிப்பை தொடர்ந்து பெற்றோர் கேட்டபோது தான், தனக்கு நேர்ந்த கொடூமையை கூறி கதறி அழுதுள்ளாள்.
தங்களது மகள் கூறிய தகவல் பெற்றோரின் தலையில் இடியாக விழுந்தது. அவர்கள் நொறுங்கி போனார்கள்.
பின்னர் அவர்கள் பாதிக்கப்பட்ட தங்களது மகளுடன் மாட்டுங்கா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியை பலாத்காரம் செய்த 2 மாணவர்கள் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கூட்டு பலாத்காரம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு டோங்கிரியில் உள்ள காப்பகத்தில் அடைக்கப்பட்டனர்.
மும்பையில் பள்ளி வகுப்பறையிலேயே மாணவி ஒருவர், உடன் படிக்கும் மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
- லிதுவேனியா நாட்டை சேர்ந்த பெண் சிகிச்சை மையத்தில் இருந்து வெளியே சென்றபின் காணவில்லை.
- கோவளம் கடற்கரையை அடுத்த மாங்குரோவ் காட்டு பகுதியில் அழுகிய நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடற்கரையில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் லிதுவேனியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
அந்த பெண் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 14-ந் தேதி சிகிச்சை மையத்தில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவரை காணவில்லை. ஒரு மாதத்திற்கு மேல் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து அந்த பெண்ணின் சகோதரி கேரள போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து லிதுவேனிய பெண்ணை தேடிவந்தனர். இந்த நிலையில் அவரது உடல் கோவளம் கடற்கரையை அடுத்த மாங்குரோவ் காட்டு பகுதியில் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை வெளிநாட்டு பெண்ணின் சகோதரி அடையாளம் காட்டினார்.
பின்னர் போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து வெளிநாட்டு பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்தது யார்? என விசாரணை நடத்தினர்.இதில் அந்த பகுதியை சேர்ந்த உதயன் (வயது 27), உமேஷ் (31) ஆகியோரை பிடித்தனர்.
இவர்களில் ஒருவர் சுற்றுலா வழிகாட்டியாக உள்ளார். இன்னொருவர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இருவரும் வெளிநாட்டு பெண்ணை சம்பவ தினத்தன்று மாங்குரோவ் காட்டுக்கு கடத்தி சென்று போதை மருந்து கொடுத்துள்ளனர். பின்னர் அவரை வலுகட்டாயமாக கற்பழித்து உள்ளனர். அப்போது நடந்த தகராறில் இருவரும் அந்த பெண்ணை அடித்து கொன்றுவிட்டு உடலை மரத்தில் தொங்க விட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு திருவனந்தபுரம் முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் கைதான உதயன், உமேஷ் இருவரையும் குற்றவாளிகள் என கோர்ட்டு அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை விபரத்தை இன்று அறிவிப்பதாக கூறி இருந்தது. அதன்படி இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பு கூறினார்.
மேலும் இருவரும் தலா ரூ.ஒரு லட்சத்து 65 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் அதனை பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பெண்ணின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
வெளிநாட்டு பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம் கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையை கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரி லிதுவேனியாவில் இருந்து ஆன்லைன் மூலம் பார்த்தார். இதற்காக லிதுவேனியா தூதரகம் விடுத்த கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரம் கோர்ட்டில் நடந்த விசாரணையை ஆன்லைன் மூலம் பார்க்க கோர்ட்டு அனுமதி வழங்கி இருந்தது. வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியாவில் நடக்கும் விசாரணையை ஆன்லைன் மூலம் பார்க்க அனுமதித்திருப்பது இதுவே முதல் முறை எனக்கூறப்படுகிறது.
- திருமணம் செய்வதாக கூறி 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ரவுடி கைது செய்யப்பட்டார்.
- சிறுமி வேலைக்கு செல்லும்போது பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
மதுரை
மதுரை மாட்டுத்தாவணி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்துவிட்டு அதே பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சிறுமி பின்னர் வீடு திரும்ப வில்லை. இதனால் பதட்டம் அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
அதில் தங்களது மகளை வாலிபர் ஒருவர் கடத்திச் சென்று இருப்பதாக தெரிவித்திருந்தனர். சிறுமி கடத்தல் விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் வடக்கு துணை கமிஷனர் (பொறுப்பு) ஆறுமுகசாமி மேற்பார்வையில் அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில் மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சிறுமியின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தி னர். மேலும் வீட்டில் இருந்த அவரது செல்போனும் ஆய்வு செய்யப்பட்டது.அப்போது மாயமான சிறுமி கருப்பாயூரணியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது.
அந்த செல்போன் சிக்னல் கருப்பாயூரணி பகுதியை காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சிறுமி வாலிபருடன் தங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் சிறுமியை மீட்டு வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர் கருப்பாயூரணியைச் சேர்ந்த கரண் (வயது 25) எனவும், இவர் மீது மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மாட்டுத்தாவணி பகுதியில் ரவுடியாக வலம் வந்த கரண் சிறுமி வேலைக்கு செல்லும்போது பின் தொடர்ந்து சென்றுள்ளார். நாளடைவில் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
இதனை சிறுமியின் பெற்றோர் கண்டித்து உள்ளனர். ஆனால் அதனை அவர் கண்டு கொள்ளாமல் குற்ற வழக்குகள் உள்ள கரனை காதலித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று கரண் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி வீட்டை விட்டு வெளியேறி கரனுடன் சென்றுள்ளார். வெளியூர் சென்ற இருவரும் அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து உள்ளனர். அப்போது சிறுமியை கரண் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கரணை மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.
- கொல்கத்தாவில் தலைமறைவாக இருந்த ஆண்ட்ரூஸ் கார்டுவெல்லை போலீசார் கைது செய்து விமானம் மூலம் தாம்பரம் கொண்டு வந்தனர்.
- போலீசார் ஆண்ட்ரூஸ் கார்டுவெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை:
சென்னை கோவிலம்பாக்கம் பகுதி சுசிலா நகரை சேர்ந்த 37 வயதுடைய பெண் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ந் தேதி பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் 2021-ம் ஆண்டு ஓர் மரம் நடும் விழாவில் புனித தோமையார் மலை ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ள ஆண்ட்ரூஸ் கார்டுவெல் (வயது 54) என்பவரை சந்தித்ததாகவும், அந்த நேரம் தன் தாயார் இறந்த மன அழுத்தத்தில் இருந்தபோது ஆண்ட்ரூஸ் கார்டுவெல் ஆறுதலாக பேசி தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறியதாகவும், அதே நேரத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக பேசி இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்ததாகவும் கூறி உள்ளார்.
மேலும் அவர் வயதை குறைத்து ஏமாற்றி குடும்பம் நடத்தியது தெரிய வந்ததால் அவரை விட்டு விலக முடிவெடுத்தபோது மார்பிங் செய்த தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தியபோது ஆண்ட்ரூஸ் கார்டுவெல் தலைமறைவானார்.
தலைமறைவான அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி அவர் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் அளித்த மனுவின் பேரில் பள்ளிக்கரணை துணை போலீஸ் கமிஷனர் ஜோஸ் தங்கையா மேற்பார்வையில் சங்கர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான ஆண்ட்ரூஸ் கார்டுவெல்லை தேடிவந்தனர்.
கொல்கத்தாவில் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து விமானம் மூலம் தாம்பரம் கொண்டு வந்து சிட்லப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
- பிறந்தநாள் கொண்டாட்டத்திலிருந்த சிறுமியின் நண்பர்கள் 5 பேர் போதைபொருளை அதிக அளவில் சாப்பிட்டு போதையில் இருந்தனர்.
- சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய அவரது தோழி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சந்திராண குட்டா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பிறந்தநாளை ஆண் நண்பர்களுடன் கடந்த 4-ந் தேதி கொண்டாடினார். அப்போது அவரது காதலனும் உடன் இருந்தார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்திலிருந்த சிறுமியின் நண்பர்கள் 5 பேர் போதைபொருளை அதிக அளவில் சாப்பிட்டு போதையில் இருந்தனர்.
மேலும் அவர்கள் சிறுமியிடம் தங்களுக்கு உனது தோழி யாரையாவது இங்கே அழைத்து வர முடியுமா எனக் கேட்டுள்ளனர். அதன்படி சிறுமி வெளியே சென்றார்.
அப்போது அவரது நெருங்கிய தோழியான 16 வயது சிறுமி அவரது தாயாருக்கு மருந்து வாங்குவதற்காக அருகில் உள்ள மருந்து கடைக்கு வந்திருந்தார்.
அவரிடம் சிறுமி நைசாக பேச்சு கொடுத்தார். எனது பிறந்தநாள் விழா நடக்கிறது. உடனே வர வேண்டும் என கட்டாயப்படுத்தி அழைத்தார். இதனை அடுத்து அவர்கள் கண்டிக்கல் கேட் பகுதியில் உள்ள பிறந்தநாள் கொண்டாடிய வீட்டிற்கு சென்றனர்.
அங்கு சென்றதும் தோழியை ஆண் நண்பர்கள் இருந்த அறையில் தள்ளி விட்டு விட்டு பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி தனது காதலனுடன் மற்றொரு அறைக்கு சென்று விட்டார்.
அங்கு போதையின் உச்சத்தில் இருந்த 5 வாலிபர்களும் சேர்ந்து அறையில் தள்ளி விடப்பட்ட 16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றினர். சிறுமி மயக்க நிலையில் இருந்தபோது 5 பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர். சிறுமி கூச்சலிட்டால் வெளியே சத்தம் கேட்கக்கூடாது என்பதற்காக தங்களது அறையில் இருந்த ஒலிபெருக்கியில் சத்தமாக சினிமா பாடல் ஒலிபரப்பினர்.
சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேரும் அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டனர்.
அதிகாலை 3 மணிக்கு சிறுமிக்கு மயக்கம் தெளிந்தது. பின்னர் அவர் வீட்டிற்கு சென்று நடந்த கொடுமைகள் குறித்து தனது தாயாரிடம் கூறினார். இது குறித்து சந்திரநாக போலீசில் புகார் செய்தார். போலீசார் நடந்த சம்பவம் குறித்து சிறுமியிடம் தகவல்களை கேட்டறிந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தோழி மற்றும் பலாத்காரம் செய்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான வாலிபர்கள் 5 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய அவரது தோழி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆசைவார்த்தை கூறி காதலிப்பதாக நாடகமாடி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை பாபு ஒப்புக்கொண்டார்.
- பல பெண்களை பாபு ஏமாற்றினாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
புதுவை அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி மணவெளி தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார்.
இந்த மாணவி நேற்று முன்தினம் இரவு சிவராத்திரியை முன்னிட்டு கோவிலுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
பல்வேறு கோவில்களிலும் தேடிப்பார்த்தும் மாணவி கிடைக்காததால் பெற்றோர் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகார் அடிப்படையில் யாரேனும் மாணவியை கடத்தி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் மாணவி சுண்ணாம்பாற்று பாலத்தின் மீது இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்தார். உடனே அங்கிருந்தவர்கள் ஆற்றில் குதித்து அந்த மாணவியை மீட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தவளக்குப்பம் மற்றும் அரியாங்குப்பம் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர்.
ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட மாணவிக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு பல்வேறு தகவல் தெரிய வந்தது. அதில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதும் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் பஸ் டிக்கெட் பரிசோதகர் பாபு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பாபு மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மேலும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாணவி குழந்தைகள் நல பாதுகாப்பு குழு சார்பில் புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் அரியாங்குப்பம் சந்திப்பில் நின்றிருந்த பாபுவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் ஆசைவார்த்தை கூறி காதலிப்பதாக நாடகமாடி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை பாபு ஒப்புக்கொண்டார். மேலும் பாபுவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் பஸ்சில் பழக்கம் ஏற்பட்ட ஒரு பெண்ணை பாபு 2-வது திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
மேலும் இதுபோல் பல பெண்களை பாபு ஏமாற்றினாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.