search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annie Raja"

    • வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்கிறார்.
    • பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் முடிவு வெளியானதில் இருந்து 14 நாட்களுக்குள் இரண்டில் ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும். அதன்படி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேவேளையில் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ராகுல் காந்தியிடம் தோல்வியடைந்த ஆனி ராஜா, காங்கிரஸ் கட்சி அவர்களுடன் மிகப்பெரிய எதிர் யார் என்பது முடிவு செய்வது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆனி ராஜா கூறியதாவது:-

    பிரியங்கா காந்தியை வயநாடு தொகுதியில் நிறுத்தியது காங்கிரஸ் கட்சியின் முடிவு. அவர்களுடைய முடிவிற்கு நாங்கள் மரியாதை அளிக்கிறோம். பெண் வேட்பாளரை அறிவித்தது நல்ல விசயம். ஏராளமான பெண்கள் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். அனைத்து கட்சிகளும் இது குறித்து கருதுவது அவசியம்.

    பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவதை நான் வரவேற்கிறேன். ஆனால், நான் ராகுல் காந்தியிடம் எழுப்பிய அதே கேள்வியை மரியாதை நிமித்தமாக பிரியங்காக காந்தியிடம் கேட்கிறேன். உங்களுடைய மற்றும் உங்கள் கட்சியுடைய மிகப்பெரிய எதிரி யார்?. வகுப்புவாத-பாசிசப் படைகளா? அல்லது இடது சாரிகளா? என்று கேட்கிறேன்.

    இவ்வாறு ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.

    • வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியிட இருக்கிறார்.
    • காங்கிரஸ் பெண் ஒருவரை நிறுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது- ஆனி ராஜா

    கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டபோது, கம்யூனிஸ்டு கட்சி தலைவர் ராஜாவின் மனைவி ஆனி ராஜா அங்கு போட்டியிட இருக்கிறார். இதனால் ராகுல் காந்தி போட்டியிடக் கூடாது என வெளிப்படையாக விமர்சனம் வைக்கப்பட்டது.

    ஆனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். அதேவேளையில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து அங்கேயும் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் ஒரு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் இன்று இரவு வயநாடு தொகுதியை ராஜினாமா செய்ய இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார். அதேவேளையில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்தது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி ரேபரேலி எம்.பி. பதவியை தக்கவைத்துக் கொள்ளும் அவரது முடிவை வரவேற்பதாக ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆனி ராஜா கூறியதாவது:-

    தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ராகுல் காந்தியை போன்ற முக்கியமான தலைவர்கள் இந்தி பேசும் முக்கியமான மாநிலத்தில் பணியாற்றுவது முக்கியமானது. ஆகவே அவர் எடுத்த இந்த முடிவில் தவறு இல்லை. நான் இதை வரவேற்கிறேன்.

    இடைத்தேர்தலில் பெண் ஒருவரை நிறுத்துவதாக கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த முறையை விட தற்போது பெண்கள் சதவீதம் மக்களவை எம்.பி. எண்ணிக்கையில் குறைவாக உள்ளது. ஆகவே, அதிகமான பெண்கள் வருவதை விரும்புகிறேன்.

    இவ்வாறு ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.

    பிரியங்கா காந்தி பொது வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என்ற கேள்விக்கு, கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி, இடது சாரி கூட்டணி தனித்தனியாக போட்டியிடுவதாக இந்தியா கூட்டணியில் முடிவு செய்யப்பட்டது. இதில் ஏதாவது மாற்றம் என்றால் அது இந்தியா கூட்டணியை உருவாக்கிய, அதில் உள்ள கட்சிகளால் மட்டுமே முடியும்.

    • வேட்பாளர்கள் அனைவரும் தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • புகார் தொடர்பான வீடியோ காட்சியையும் கொடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.பி.யான ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுரேந்திரன் ஆகியோரும் களமிறங்கி உள்ளனர். அந்த தொகுதியில் அவர்கள் உள்பட 9 பேர் போட்டியிடுகிறார்கள்.

    வேட்பாளர்கள் அனைவரும் தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளரான ஆனி ராஜாவுக்கு நடத்தப்பட்ட பிரசாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 20-ந்தேதி கல்பேட்டை பகுதியில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் தலைமையில் ஆனி ராஜாவுக்காக பேரணி நடத்தப்பட்டது.

    அந்த பேரணியில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டதாகவும், இது தேர்தல் விதிகளை மீறிய செயல் எனவும் ஆனி ராஜா மீது தேர்தல் ஆணையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அப்போது புகார் தொடர்பான வீடியோ காட்சியையும் அவர்கள் கொடுத்துள்ளனர். இது வயநாடு தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
    • கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அதன் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் போட்டியிடுகின்றனர்.

    தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் வயநாடு தொகுதியில் தனித்தனியாக போட்டியிடுவது அந்தக் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருவதால் இந்தியா கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், வயநாடு தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ஆனி ராஜா அங்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி தொகுதியைப் புறக்கணித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் வயநாடு தொகுதிக்கு அவர் என்ன செய்தார்? அவர் ஒருமுறை கூட பாராளுமன்றத்தில் வயநாடு தொகுதியின் பெயரை உயர்த்தவில்லை.

    ராகுல் காந்தி இந்தத் தொகுதிக்கு எதுவும் செய்யாததால் வயநாடு மக்களுக்கு நான் ஒரு சிறிய காரியத்தை செய்தாலும், அது பெரிய விஷயமாக இருக்கும். தொகுதி மக்கள் மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் அணுகக்கூடிய ஒருவர் தேவை என கூறுகிறார்கள்.

    வயநாடு தொகுதியில் போக்குவரத்து பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. ரெயில்வே துறையில் பல புதிய திட்டங்கள் இருந்தும், இங்கு ரெயில் பாதையை கொண்டுவர எந்த முயற்சியும் இல்லை.

    அதேபோல் மனித-விலங்கு மோதலுக்கு தீர்வு காணவும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய சட்டத்தில் திருத்தம் தேவை. இந்த விஷயம் பற்றி பாராளுமன்றத்தில் பேசப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    • பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கூட்டணியின் குறிக்கோளை தோற்கடித்து ராகுல்காந்தியை வயநாட்டில் நிறுத்துவது பொருத்தமற்றது.
    • காங்கிரஸ் கட்சியை தவிர அனைத்து அரசியல் கட்சிகளையும் மத்திய அரசு வேட்டையாடி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த இரு கட்சிகளும் கேரளாவில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன.

    கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அதே வேளையில் இந்தியா கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகிறது. இதனால் காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பமான சூழல் நிலவுகிறது.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.பி.யான ராகுல்காந்தி போட்டியிடுகிறார். அதே வேளையில் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார்.

    வயநாடு தொகுதியில் ஆனி ராஜா போட்டியிடுவதால், ராகுல்காந்தி போட்டியிடக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்டு கேட்டுக்கொண்டது. ஆனால் அதனையும் மீறி ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அறிவித்தது.

    இது கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதாவுக்கு எதிரான போராட்டத்தை, தான் முன்னெடுப்பதாக கூறும் ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு எதிராக ஏன் போட்டியிடுகிறார்? என்று டி.ராஜா கேள்வி எழுப்பினார்.

    வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதற்கு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தபடி உள்ளனர். மேலும் தேசிய அளவில் ஒரே கூட்டணியில் உள்ள இரு கட்சிகள் ஒரே தொகுதியில் தனித்தனியாக மல்லுக்கட்டுவது மற்ற கட்சிகளின் மத்தியிலும் பேசும் பொருளாக உருவெடுத்து இருக்கிறது.

    இந்நிலையில் வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவது பொருத்தமற்றது என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கோழிக்கோட்டில் ஆனி ராஜாவை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கூட்டணியின் குறிக்கோளை தோற்கடித்து ராகுல்காந்தியை வயநாட்டில் நிறுத்துவது பொருத்தமற்றது. அவர் கேரளாவில் முக்கிய அரசியல் சக்தியாக இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்த்து போராடுவதற்காக வந்துள்ளார்.

    இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், இடதுசாரி தலைவர் ஆனி ராஜாவுக்கு எதிராகவும் ராகுல்காந்தி போட்டியிடுவது என்ன நியாயம்? அவர் வயநாட்டில் பாரதிய ஜனதாவை எதிர்த்து போட்டியிடவில்லை. அவர் எங்களுக்கு எதிராகவே போட்டியிடுகிறார்.

    காங்கிரஸ் கட்சியை தவிர அனைத்து அரசியல் கட்சிகளையும் மத்திய அரசு வேட்டையாடி வருகிறது. கலால் கொள்கை தொடர்பாக டெல்லி அரசுக்கு எதிராக காங்கிரஸ் புகார் அளித்தது. இந்த நடவடிக்கை இறுதியில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையில் முடிந்தது.

    குடியுரிமை திருத்த சட்டம் போன்ற கொள்கைகளால் இந்தியாவில் மதச்சார்பின்மையை பாரதிய ஜனதா அரசு அழித்து வருகிறது. ராகுல்காந்தி இந்தியா முழுவதும் பயணம் செய்தார். ஆனால் அவர் சி.ஏ.ஏ.-வுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

    • கேரளாவை பொறுத்தவரை, இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே தான் போட்டி.
    • மூத்த தலைவர்களில் ஒருவரான பன்னியன் ரவீந்திரன் திருவனந்தபுரம் தொகுதியிலும், முன்னாள் மந்திரி சுனில் குமார் திருச்சூரிலும், சி.ஏ.அருண்குமார் மாவேலிக்கரையிலும் போட்டியிடுகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அனைத்து பிரதான கட்சிகளும், தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டன.

    கேரள மாநிலத்தில் மொத்தம் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. அவற்றில் வயநாடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 15 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் கட்சியின் வசம் உள்ளன. அந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி களமிறங்க உள்ளது.

    அதேபோல் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணியும், தனது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது இறுதி செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி நேற்று வெளியிட்டது. அதன்படி ராகுல்காந்தி எம்.பி.யாக உள்ள வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆனி ராஜா போட்டி யிடுகிறார்.

    இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆவார். அவர் மட்டுமின்றி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பன்னியன் ரவீந்திரன் திருவனந்தபுரம் தொகுதியிலும், முன்னாள் மந்திரி சுனில் குமார் திருச்சூரிலும், சி.ஏ.அருண்குமார் மாவேலிக்கரையிலும் போட்டியிடுகின்றனர்.

    வயநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது பற்றி டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா கூறியிருப்பதாவது:-

    வயநாடு தொகுதியில் போட்டியிட கொடுத்திருப்பது ஒரு பெரிய வாய்ப்பு. அந்த வாய்ப்பை கட்சி என்னிடம் ஒப்படைத்துள்ளது. இந்த முறை மக்கள் ஆதரவை நாங்கள் வெல்வோம் என்று நாங்கள் நம்புகிறோம். நான் எப்போதும் ஆதரவுடன் இருப்பேன். நான் அரசியல் வாழ்வில் குழந்தை படிகளை கற்றுக்கொண்ட இடம் வயநாடு.

    எங்களது கட்சி இவ்வளவு காலமாக இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் கீழ் கேரளாவில் 4 தொகுதியில் போட்டியிட்டது. இந்த முறையும் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கேரளாவை பொறுத்தவரை, இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே தான் போட்டி. அதில் புதிதாக எதுவும் இல்லை. அந்த நிலைமை அப்படியே உள்ளது. எதுவும் மாறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×