என் மலர்
நீங்கள் தேடியது "Atishi"
- நட்சத்திர வேட்பாளர்கள் பலர் தோல்வியை தழுவினர்.
- காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வது மற்றும் ஆட்சியமைப்பது தொடர்பான பணிகளில் பா.ஜ.க. மேலிடம் பரபர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியதை அடுத்து டெல்லி முதல்வர் அதிஷி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று காலை டெல்லி ஆளுநர் மாளிகைக்கு சென்ற முதல்வர் அதிஷி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்துள்ளார்.
ராஜினாமா கடிதத்தை வழங்கிய பிறகு ஆளுநர் மாளிகையில் இருந்து அதிஷி புறப்பட்டு சென்றார். இதைத் தொடர்ந்து டெல்லி சட்டசபை கலைக்கப்பட்டுவதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்செனா கூறியுள்ளார். இது நேற்று (பிப்ரவரி 8) முதல் அமலுக்கு வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜ.க. மொத்தம் 48 இடங்களில் வெற்றி பெற்றது.
நடைபெற்று முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர்கள் பலர் தோல்வியை தழுவினர்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
#WATCH | AAP leader Atishi leaves from Raj Niwas after submitting her resignation as Delhi CM
— ANI (@ANI) February 9, 2025
BJP emerged victorious in #DelhiAssemblyElection2025 yesterday after winning 48 out of 70 seats https://t.co/kWEioE5dXE pic.twitter.com/5If23VQMlq
- பாஜக-வின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போர் தொடரும். தேர்தல் முடிவு ஆம் ஆத்மிக்கு பின்னடைவுதான்.
- ஆனால் டெல்லி மற்றும் நாட்டுக்கு மக்களுக்கான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்.
கடந்த 5-ந்தேதி நடைபெற்ற டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே பாஜக முன்னிலை பெற்றது. சுமார் 48 இடங்களை கைப்பற்றி 27 வருடத்திற்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது.
கடந்த இரண்டு தேர்தல்களில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, இந்த தேர்தலில் மிகப்பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துள்ளது. 2015-ல் 67 இடங்களிலும், 2020-ல் 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர். முதலமைச்சராக இருக்கும் அதிஷி பெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் டெல்லி மாநில தேர்தல் முடிவு குறித்து அதிஷி கூறியதாவது:-
எங்களுடன் உறுதியாக நின்ற டெல்லி மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். பாஜக-வின் சர்வாதிகாரம் மற்றும் குண்டர்கள் ராஜ்ஜியம் ஆகிவற்றிற்கு எதிரான போர் தொடரும். தேர்தல் முடிவு ஆம் ஆத்மிக்கு பின்னடைவுதான். ஆனால், டெல்லி மற்றும் நாட்டுக்கு மக்களுக்கான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்.
என் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி. என்னுடைய அணிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு எங்களுடைய கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்தனர். என்னுடைய தொகுதியில் நான் வெற்றி பெற்றுள்ளேன். இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல. இது போராட்டத்திற்கான நேரம். பாஜக-வின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் தொடரும்.
இவ்வாறு அதிஷி தெரிவித்தார்.
அதிஷ் கல்காஜி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ரமேஷ் விதுரியும், காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும் போட்டியிட்டனர்.
- ரமேஷ் பிதுரி 48478 வாக்குகளை பெற்றார்
- காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா வெறும் 4367 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது. புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலாவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஜங்புராவில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.
இந்நிலையில் ஆம் ஆத்மிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முதல்வர் அதிஷி வெற்றி பெற்றுள்ளார்.
எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை விட 3580 வாக்குகள் முன்னிலையில் 52058 வாக்குகளுடன் அதிஷி வெற்றி பெற்றுள்ளார். ரமேஷ் பிதுரி 48478 வாக்குகளை பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா வெறும் 4367 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
- பாஜக 46 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 24 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது
- அரவிந்த் கெஜ்ரிவால், அதிஷி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு இன்னைக்கி தொடங்கியதில் இருந்தே பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
தற்போதுவரை பாஜக 46 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 24 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் அதிஷி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக எம்.பி. யோகேந்திர சந்தோலியா, "பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கெஜ்ரிவால் எல்லா மாடல்களிலும் சரிந்துள்ளார். கெஜ்ரிவால் திகார் சிறைக்கு செல்வது உறுதி. அவர் முதல்வர் ஆக விரும்பினார் ஆனால் இனி அவர் எம்.எல்.ஏ.வாக கூட இருக்கப் போவதில்லை. பாஜக மேலிடத்தால் தேர்ந்தெடுக்கப்படும் எந்தக் கட்சித் தொண்டனும் டெல்லியின் அடுத்த முதல்வர் ஆவார்" என்று அவர் தெரிவித்தார்.
- பாஜக 41 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 29 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
- அரவிந்த் கெஜ்ரிவால் ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்தனர்.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு இன்னைக்கி தொடங்கியதில் இருந்தே பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
தற்போதுவரை பாஜக 42 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 28 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி முதல்வர் அதிஷி ஆகியோர் ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்தனர். பின்னர் அடுத்தகட்ட வாக்கு எண்ணிக்கையில் அரவிந்த கெஜ்ரிவால் மற்றும் அதிஷி ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்
- ஆதரவாளர்கள் 50 முதல் 70 பேர், 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்றனர்
- பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியும் அவரது குடும்பத்தினரும் வெளிப்படையாக விதிமுறைகளை மீறி வருகின்றனர்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலில் 10 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்துள்ள நிலையில் டெல்லி போலீஸ், விதிமீறல்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் கல்காஜி தொகுதியில் போட்டியிடும் டெல்லி முதல்வர் அதிஷி மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
டெல்லியில் நேற்று நேற்று இரவு கோவிந்தபுரி பகுதியில் முதல்வர் அதிஷியும் அவரது ஆதரவாளர்கள் 50 முதல் 70 பேர், 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் காணப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கலைந்து செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்திய போதிலும், ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் காவலர்களை தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அதிஷி மீதும், காவல்துறையினரைத் தாக்கியதாக ஆம் ஆத்மியினர் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
@ceodelhioffice, @ECISVEEP @dmsoutheastdelhi, @CPDelhi, @AtishiAAP On 04/02/25, at 00:59 hrs, a gathering was reported at Baba Fateh Singh Marg, Govindpuri. HC Kaushal Pal responded & began videography. AAP members Ashmit & Sagar Mehta obstructed & assaulted him. pic.twitter.com/DxNYscIrlW
— DCP South East Delhi (@DCPSEastDelhi) February 4, 2025
இதுகுறித்து பேசிய அதிஷி, பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியும் அவரது குடும்பத்தினரும் வெளிப்படையாக விதிமுறைகளை மீறி வருகின்றனர்.
அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தேன், ஆனால் என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமாரை குறிப்பிட்டு, அவர் எந்தளவுக்கு தேர்தல் செயல்முறையை கெடுப்பார் என்பதை நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று அதிஷி காட்டமாக தெரிவித்துள்ளார்.
- பஞ்சாப் போலீஸ் கெஜ்ரிவாலுக்கு பாதுகாப்பு வழங்கி வந்தது.
- கெஜ்ரிவாலுக்கு வழங்கிய பாதுகாப்பை பஞ்சாப் போலீஸ் திரும்பப் பெற்றது.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார்.
கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் மாநில போலீசார் வழங்கும் பாதுகாப்பை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் டெல்லி போலீசார் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, கெஜ்ரிவாலுக்கு வழங்கி வந்த பாதுகாப்பை பஞ்சாப் மாநில போலீஸ் திரும்பப் பெற்றது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இசட்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. விமானி, பாதுகாப்பு அணிகள், நெருங்கிய பாதுகாப்பு ஸ்டாப் உள்பட 63 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் மத்திய ஆயுத போலீஸ் படையினர் 15 பேரும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் போலீசார் அளித்த பாதுகாப்பை வாபஸ் பெற்றதற்கு முதல் மந்திரி அதிஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிஷி கூறுகையில், பஞ்சாப் போலீசார் அளித்த பாதுகாப்பை வாபஸ் பெற்றதன் மூலம் அமித்ஷாவும் பிரதமர் மோடியும் கெஜ்ரிவால் வாழ்வில் விளையாடுகிறார்களா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
- தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பேரின் பெயரை அதிஷி குறிப்பிட்டார்.
- மூன்று பேரும் பாஜகவின் பயிற்சி பெற்ற குண்டர்கள் மற்றும் குற்றவாளிகள் என்று தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக முயற்சிப்பதாக டெல்லி முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லிக்கு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று பிரசாரத்திற்கு சென்ற கெஜ்ரிவாலின் கார் மீது கம்பு மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
BJP Goons try to kill Arvind Kejriwal. Huge stones thrown at the Car of AAP National Convener.Two days ago, Security Agencies had warned of a terror attack against Arvind Kejriwal and had asked Central Govt to increase his security. BJP working with Terror Groups? pic.twitter.com/mQi4Wg3l8p
— Dr Ranjan (@AAPforNewIndia) January 18, 2025
தாக்குதல் வீடியோவை பகிர்ந்த ஆம் ஆத்மி, கெஜ்ரிவாலை எதிர்த்து புது டெல்லி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரவேஷ் வர்மாவின் குண்டர்கள் செங்கல் மற்றும் கற்களால் தாக்கியதாகவும், அதனால் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்ய முடியாதபடி காயப்படுத்த முயன்றதாகவும் குற்றம் சாட்டியது.
#WATCH | Delhi CM Atishi says "It is clear that criminals and goons were sent to kill Arvind Kejriwal. The second person involved in the attack is Rohit Tyagi, who constantly stays with Pravesh Verma and has been involved in campaigning for Pravesh Verma. He is also a criminal.… pic.twitter.com/5zF6pPpMMo
— ANI (@ANI) January 19, 2025
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அதிஷி, அவர்கள் வீசிய கற்கள் மேலே விழுந்திருந்தால் அவர் மரணித்திருப்பார்
தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பர்வேஷ் வர்மாவுடன் தொடர்புடைய மூன்று பேரின் பெயரை அதிஷி குறிப்பிட்டார். அரவிந்த் கெஜ்ரிவாலைக் கொல்ல பயிற்சி பெற்ற தேர்ந்த குற்றவாளிகள் மற்றும் குண்டர்கள் பாஜகவால் அனுப்பப்பட்டனர் என்பது தெளிவாகிறது என்று கூறினார்.
#WATCH | Delhi CM Atishi says "It is clear that criminals and goons were sent to kill Arvind Kejriwal. The second person involved in the attack is Rohit Tyagi, who constantly stays with Pravesh Verma and has been involved in campaigning for Pravesh Verma. He is also a criminal.… pic.twitter.com/5zF6pPpMMo
— ANI (@ANI) January 19, 2025
கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல் நடத்திய மூவர் ராகுல், ரோகித், சுமித் ஆகியோர் ஆவர். ராகுல் எப்போதும் பாஜக வேட்பாளர் பிரவேஷ் வர்மாவுடன் காணப்படுகிறார் மற்றும் அவரது பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுள்ளார். ராகுல் மீது 7 ஆண்டு சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் திருட்டு முயற்சி வழக்குகள் உள்ளன.
ரோகித்தும் பிரவேஷ் வர்மாவுடன் தொடர்ந்து தங்கி, அவரின் பிரச்சாரத்தில் வேலை செய்பவர். ரோகித் மீது 2011 இல் ஒரு திருட்டு வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்ளது.
கெஜ்ரிவாவின் கார் மீது கற்கள் வீசப்பட்டபோது அங்கிருந்த மூன்றாவது நபர் சுமித். அவர் மீதும் திருட்டு, கொள்ளை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
மூன்று பேரும் பாஜகவின் பயிற்சி பெற்ற குண்டர்கள் மற்றும் குற்றவாளிகள். எனவே தேர்தல் தோல்வி பீதியில், பாஜக இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலைக் கொல்ல முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது என்று அதிஷி குற்றம் சாட்டினார்.
- டெல்லி தேர்தலில் பாஜக தோல்வியை தழுவுகிறது.
- 'ஆம் ஆத்மி கட்சி' ஒரு நேர்மையான கட்சி என்று கெஜ்ரிவால் கூறுகிறார்.
தலைநகர் டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது அதற்கான பணிகளை தொடங்கிவிட்டார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், 18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் தலா 2,100 ரூபாய் வழங்கப்படும் என்றும் டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை எனவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற வாய்ப்பிருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "டெல்லி முதல்வர் அதிஷி கைது செய்யப்படுவார் என்றும், சில ஆம் ஆத்மி தலைவர்களின் வீட்டில் ரெய்டு நடக்கும் என்றும் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தேன்.
அடுத்த சில நாட்களில் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை நடைபெறும் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி தேர்தலில் பாஜக தோல்வியை தழுவுகிறது. இந்தக் கைதுகளும் சோதனைகளும் அவர்களின் பீதியின் விளைவுதான்
இதுவரை அவர்கள் எங்களுக்கு எதிராக எதையும் கண்டுபிடிக்கவில்லை, எதிர்காலத்திலும் அவர்கள் எதையும் கண்டுபிடிக்க மாட்டார்கள். 'ஆம் ஆத்மி கட்சி' ஒரு நேர்மையான கட்சி" என்று பதிவிட்டுள்ளார்.
- சங்கிகளை அங்கீகரிப்பது மகள்களை அவமானப்படுத்துவது' என எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.
- டெல்லி முதல்வர் அதிஷி தனது அப்பாவையே மாற்றியவர் என்று ரமேஷ் பிதுரி மற்றொரு சர்ச்சை கருத்தை தெரிவித்தார்
டெல்லியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் பாஜக- ஆம் ஆத்மி காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
கல்காஜி தொகுதியில் பாஜக சார்பில் ரமேஷ் பிதுரி போட்டியிட உள்ளார். இவர் இதற்கு முன்னர் 3 முறை எம்எல்ஏ-வாகவும், 2 முறை எம்பியாகவும் இருந்துள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூட்டோடு சூடாக பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி, தனக்கு வாக்களித்தால், பிரியங்கா காந்தியின் கன்னங்களை போன்ற சாலைகளை அமைப்பேன் என்று பேசி சர்ச்சையை கிளப்பினார்.

இந்த கருத்துக்கு காங்கிரஸ் தரப்பிலும் கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது. இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இன்று [திங்கள்கிழமை] சவுத் அவென்யூவில் உள்ள ரமேஷ் பிதுரி இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது, வீட்டின் பெயர் பலகையில் கருப்பு பெயிண்ட் ஊற்றினர். கதவு மீது செருப்பை வீசி தாக்கியுள்ளனர். பெண்களுக்கு எதிரானவன் [மகிளா விரோதி] என வீட்டு வாசல் கதவில் கருப்பு பெயின்ட்டால் எழுதினர்.
டெல்லி இளைஞர் தலைவர் அக்ஷய் லக்ரா தலைமையில் நடந்த இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
பிதுரிக்கு எதிரான முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். 'shame on ரமேஷ் பிதுரி' மற்றும் 'சங்கிகளை அங்கீகரிப்பது மகள்களை அவமானப்படுத்துவது' என எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.
#WATCH | Delhi Youth Congress members protest outside the residence of BJP leader Ramesh Bidhuri over his purported statement against Congress MP Priyanka Gandhi Vadra. pic.twitter.com/OYsdKS4zjD
— ANI (@ANI) January 6, 2025
பிரியங்கா காந்தி குறித்து பிதுரி கூறியிருப்பது மிகவும் வெட்கக்கேடானது, இந்த மலிவான சிந்தனைக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், பாஜக தலைவர் மன்னிப்பு கேட்கும் வரை இளைஞர் காங்கிரஸ் இதுபோல் போராட்டம் தொடரும் என்று லக்ரா கூறினார்.
இதற்கிடையே டெல்லி முதல்வர் அதிஷி தனது அப்பாவையே மாற்றியவர் என்று ரமேஷ் பிதுரி மற்றொரு சர்ச்சை கருத்தை தெரிவித்தார். இதை பற்றி பேசும்போது அதிஷி செய்தியாளர் சந்திப்பில் மனமுடைந்த அழுதார்.
- மார்லினாவாக இருந்த அதிஷி இப்போது சிங். தன் தந்தையை கூட மாற்றிவிட்டார் என்று கூறினார்.
- பாஜக தலைவர்கள் வெட்கமின்மையின் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டார்கள்
டெல்லியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் பாஜக- ஆம் ஆத்மி காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
கல்காஜி தொகுதியில் பாஜக சார்பில் ரமேஷ் பிதுரி போட்டியிட உள்ளார். இவர் இதற்கு முன்னர் 3 முறை எம்எல்ஏ-வாகவும், 2 முறை எம்பியாகவும் இருந்துள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூட்டோடு சூடாக பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி, தனக்கு வாக்களித்தால், பிரியங்கா காந்தியின் கன்னங்களை போன்ற சாலைகளை அமைப்பேன் என்று பேசி சர்ச்சையை கிளப்பினார். அந்த சர்ச்சை அடங்குவதற்குள் தற்போதுடெல்லி முதல்வர் அதிஷி தனது தந்தையையே மாற்றியவர் என்று ரமேஷ் பிதுரி பேசியுள்ளார்.
பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிதுரி, மார்லினாவாக இருந்த அதிஷி இப்போது சிங். தன் தந்தையை கூட மாற்றிவிட்டார் என்று கூறினார்.

பாஜக தலைவர்கள் வெட்கமின்மையின் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டதாக கெஜ்ரிவால் இந்த கருத்துக்கு கண்டம் தெரிவித்தார்.
இந்நிலையில் முதல்வர் அதிஷி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் மனமுடைந்து அழுதுள்ளார். தந்தையின் வயது மற்றும் உடல்நிலையை பற்றி குறிப்பிட்ட அதிஷி , பாஜகவின் "அழுக்கு அரசியலை" கடுமையாக சாடினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிஷி, ரமேஷ் பிதுரியிடம் நான் சொல்ல விரும்புகிறேன், என் தந்தை தனது வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக இருந்தார், ஏழை மற்றும் கீழ் நடுத்தர குடும்பத்தில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு அவர் கற்பித்துள்ளார், இப்போது அவருக்கு 80 வயதாகிறது, இப்போது அவர் உண்மையில் நோய்வாய்ப்பட்டுள்ளார். உதவியின்றி நடக்க கூட முடியாது என்று கூறி மனமுடைந்து கண்கலங்கினார்.
#WATCH | Delhi: On BJP leader Ramesh Bidhuri's reported objectionable statement regarding her, Delhi CM Atishi says, " I want to tell Ramesh Bidhuri, my father was a teacher throughout his life, he has taught thousands of children coming from poor and lower-middle-class families,… pic.twitter.com/ojQr3w0gVW
— ANI (@ANI) January 6, 2025
மேலும் தனது கோபத்தை வெளிப்படுத்திய அவர், தேர்தலுக்காக நீங்கள் (ரமேஷ் பிதுரி) இப்படி ஒரு கேவலமான செயலைச் செய்வீர்களா? முதியவரைத் திட்டும் நிலைக்கு அவர் வந்துவிட்டார். இந்த நாட்டு அரசியல் தலைகீழாக மாறும் என்று நான் நினைக்கவில்லை என்று தெரிவித்தார்.
அதிஷியின் பெயர்
அதிஷியின் முழு பெயர் அதிஷி மார்லெனா சிங் [Atishi Marlena Singh] என்பதாகும். மார்க்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் ஞாபகமாக மார்லேனா என்ற பெயரை பெற்றோர்கள் அவருக்கு சூட்டியுள்ளனர். 2018 இல் தனது பெயரில் உள்ள மார்லேனா வை அதஷி நீக்கியுள்ளார்.
தனது வேலையைப் பார்த்து மக்கள் தன்னை தீர்மானிக்க வேண்டும் என்றும் தனது பின்புலத்தை [கமியூனிச] வைத்து தீர்மானித்துவிடக் கூடாது என்பதற்காக பொது உபயோகத்தில் இருந்து மார்லேனவை நீக்கியதாக அதிஷி விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
- மர்லினா தனது தந்தையை மாற்றினார். இது ஆம் ஆத்மி கட்சியின் தன்மையைப் பிரதிபலிக்கிறது
- பாஜக தலைவர்கள் வெட்கமின்மையின் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார்
தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக - காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் முதல்வர் அதிஷியின் கல்காஜி தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பா நிற்கிறார். மேலும் நேற்று முன்தினம் பாஜக 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.
ரமேஷ் பிதுரி
அதன்படி கல்காஜி தொகுதியில் பாஜக சார்பில் ரமேஷ் பிதுரி போட்டியிட உள்ளார். இவர் இதற்கு முன்னர் 3 முறை எம்எல்ஏ-வாகவும், 2 முறை எம்பியாகவும் இருந்துள்ளார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூட்டோடு சூடாக பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி, தனக்கு வாக்களித்தால், பிரியங்கா காந்தியின் கன்னங்களை போன்ற சாலைகளை அமைப்பேன் என்று பேசி சர்ச்சையை கிளப்பினார். தற்போது அது அடங்குவதற்குள் டெல்லி முதல்வர் அதிஷி குறித்து பேசியுள்ளார்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிதுரி, மார்லினாவாக இருந்த அதிஷி இப்போது சிங். தன் தந்தையை கூட மாற்றிவிட்டார் என்று கூறினார்.
இந்த மர்லினா (அதிஷி) சிங் ஆனார். அவர் தனது பெயரை மாற்றிக்கொண்டார். ஊழல் நிறைந்த காங்கிரஸுடன் இணைய மாட்டேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது குழந்தைகள் மீது சத்தியம் செய்தார், ஆனால் மர்லினா தனது தந்தையை மாற்றினார். இது ஆம் ஆத்மி கட்சியின் தன்மையைப் பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
இந்நிலையில் அதிஷி மீதான தனிப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
பாஜக தலைவர்கள் வெட்கமின்மையின் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டதாக கெஜ்ரிவால் அதில் பதிவிட்டுள்ளார்.
'பாஜக தலைவர்கள் வெட்கமின்மையின் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டனர். டெல்லி முதல்வர் அதிஷி ஜியை பாஜக தலைவர்கள் தவறாகப் பேசி வருகின்றனர். பெண் முதலமைச்சரை அவமதிப்பதை டெல்லி மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இதற்கு டெல்லி பெண்கள் அனைவரும் பழிவாங்குவார்கள்' என கெஜ்ரிவால் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
बीजेपी के नेताओं ने बेशर्मी की सारी हदें पार कर दी। बीजेपी के नेता दिल्ली की मुख्यमंत्री आतिशी जी को गंदी-गंदी गालियाँ दे रहे हैं। एक महिला मुख्यमंत्री का अपमान दिल्ली की जनता सहन नहीं करेगी। दिल्ली की सभी महिलाएँ इसका बदला लेंगी। pic.twitter.com/MlajIFzU4J
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 5, 2025
அதிஷியின் பெயர்
அதிஷியின் முழு பெயர் அதிஷி மார்லெனா சிங் [Atishi Marlena Singh] என்பதாகும். மார்க்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் ஞாபகமாக மார்லேனா என்ற பெயரை பெற்றோர்கள் அவருக்கு சூட்டியுள்ளனர். 2018 இல் தனது பெயரில் உள்ள மார்லேனா வை அதஷி நீக்கியுள்ளார்.
தனது வேலையைப் பார்த்து மக்கள் தன்னை தீர்மானிக்க வேண்டும் என்றும் தனது பின்புலத்தை [கமியூனிச] வைத்து தீர்மானித்துவிடக் கூடாது என்பதற்காக பொது உபயோகத்தில் இருந்து மார்லேனவை நீக்கியதாக அதிஷி விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.