search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Criminal Procedure Code"

    • புதிய சட்டங்கள் நடைமுறைக்கு கடினமானவை.
    • 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்.

    சென்னை:

    இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச்சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்கள் மத்திய அரசு நிறைவேற்றி, கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

    இந்த சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் போராட்டம் நடந்து வருகிறது. சென்னை ஐகோர்ட்டிலும் வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் தி.மு.க., வக்கீல்கள் இன்று காலையில் இந்த 3 புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    தி.மு.க., ராஜ்ய சபா எம்.பி.யும் மூத்த வக்கீலுமான என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க. வக்கீல்கள் கலந்துக் கொண்டனர். அப்போது, இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று வக்கீல்கள் கோஷம் போட்டனர்.

    அப்போது என்.ஆர்.இளங்கோ கூறுகையில், "பாராளுமன்றத்தில் எவ்வித விவாதங்களும் இல்லாமல், இந்த 3 சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    இந்த சட்டங்கள் நடைமுறைக்கு கடினமானவை. நீதி பரிபாலனத்திற்கு இந்த சட்டம் மிகவும் எதிரான வையாக உள்ளது. எனவே, இந்த சட்டங்களை அரசு திரும்ப பெறவேண்டும். இதை வலியுறுத்தி நாளை (சனிக்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தி.மு.க. சட்டத்துறை சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்'' என்று கூறினார்.

    இந்த நிலையில், இந்த போராட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் இன்று காலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    பின்னர், இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி வருகிற 8-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    பின்னர், இதுகுறித்து ஜி.மோகன கிருஷ்ணன் கூறும்போது, `3 சட்டங்களும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதனால், இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்'' என்றார்.

    • புதிய கிரிமினல் சட்டத்தில் பதியப்பட்ட முதல் வழக்கு அது கிடையாது
    • நேற்று ஒரே நாளில் டெல்லியில் மட்டுமே புதிய குற்றவியல் சட்டங்களின்கீழ் 300 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

    இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் நேற்று முதல் அவை அமலுக்கு வந்துள்ளன.

     

    பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் கீழ் முதல் வழக்கு டெல்லியில் உள்ள தள்ளுவண்டிக் கடைக்காரர் மீது பாய்ந்தது. டெல்லி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள சாலையில் தள்ளு வண்டியில் வைத்து தண்ணீர் பாட்டில்கள், பீடி,சிகரெட்டுகள் விற்றுக்கொண்டிருந்தார்.

    அவரது வண்டி சாலையில் செல்பவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி அவர் மீது தனது உடைமையைக் கொண்டு பொதுமக்களுக்கு பாதிப்பு விளைவித்த குற்றத்துக்காக புதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 285 இந்த கீழ் தள்ளுவண்டிக்கடைக்காரர் மீது தற்போது எப்.ஐ.ஆர் பதியப்பட்டது என்று தகவல் வெளியானது.

    இந்நிலையில் அவரை மன்னித்து அவர் மீதான வழக்கு நீக்கப்பட்டுள்ளது என்றும் எனவே புதிய கிரிமினல் சட்டத்தில் பதியப்பட்ட முதல் வழக்கு அது  கிடையாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

     

    மேலும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின்கீழ் முதல் வழக்கு மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் மோட்டார் சைக்கிள் திருட்டு குற்றத்துக்காக ஒருவர் மீது பதியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    பாரதிய நியாய சன்ஹிதா [பி.என்.எஸ்] சட்டத்தின்கீழ் முதல் வழக்காக ஹைதராபாத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம்   ஒ ஓட்டியதாக இரண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று ஒரே நாளில் டெல்லியில் மட்டுமே புதிய குற்றவியல் சட்டங்களின்கீழ் 300 வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தள்ளு வண்டியில் வைத்து தண்ணீர் பாட்டில்கள், பீடி,சிகரெட்டுகள் விற்றுக்கொண்டிருந்தார்.
    • பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 285 இந்த கீழ் தள்ளுவண்டிக்கடைக்காரர் மீது தற்போது எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது.

     

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

    இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் இன்று முதல் அவை அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் கீழ் முதல் வழக்கு டெல்லியில் உள்ள தள்ளுவண்டிக் கடைக்காரர் மீது பாய்ந்துள்ளது.

    நேற்று இரவு டெல்லி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள சாலையில் தள்ளு வண்டியில் வைத்து தண்ணீர் பாட்டில்கள், பீடி,சிகரெட்டுகள் விற்றுக்கொண்டிருந்தார். அவரது வண்டி சாலையில் செல்பவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி அங்கிருந்து அகலும்படி ரோந்து பணியில் இருந்த காவல் அதிகாரி கூறியுள்ளார்.

    ஆனால் தள்ளு வண்டிகைக்காரர் அங்கிருந்து அகண்டு செல்லாத நிலையில் அவர் மீது தனது உடைமையைக் கொண்டு பொதுமக்களுக்கு பாதிப்பு விளைவித்த குற்றத்துக்காக புதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 285 இந்த கீழ் தள்ளுவண்டிக்கடைக்காரர் மீது தற்போது எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது. இந்த குற்றத்துக்கு அதிகபடச்சமாக ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தத்க்கது. 

     

    • 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • சரியான நேரத்தில் விரைவான மற்றும் பிழையற்ற நீதியை வழங்கும்.

    ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றான புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இச்சட்டங்கள் அமலாக்கத்துக்கு தேவையான பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், `இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிவாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    சரியான நேரத்தில் விரைவான மற்றும் பிழையற்ற நீதியை வழங்கும் இந்த புதிய சட்டங்கள் வரும் 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்' என்றார்.

    ×