search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ந்தேதி முதல் அமல்
    X

    புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ந்தேதி முதல் அமல்

    • 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • சரியான நேரத்தில் விரைவான மற்றும் பிழையற்ற நீதியை வழங்கும்.

    ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றான புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இச்சட்டங்கள் அமலாக்கத்துக்கு தேவையான பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், `இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிவாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    சரியான நேரத்தில் விரைவான மற்றும் பிழையற்ற நீதியை வழங்கும் இந்த புதிய சட்டங்கள் வரும் 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்' என்றார்.

    Next Story
    ×