search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dictatorship"

    • 10 வருட கால சாதனை ஆட்சியால் நாங்கள் மூன்றாவது முறையாக வென்றுள்ளோம்.
    • மோடியின் உரைக்கு இடையே மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சியினர் முழக்கம்.

    மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

    அந்த உரையில், "10 வருட கால சாதனை ஆட்சியால் நாங்கள் மூன்றாவது முறையாக வென்றுள்ளோம். தொடர்ந்து மூன்றாவது முறையாக வாக்களித்து வெற்றி பெறுவது என்பது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். மதச்சார்பின்மைக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.

    இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கொள்கைகளை வகுத்து வருகிறோம். தேசத்திற்கு அவசியமான சீர்திருத்தங்களை நாங்கள் நடைமுறைப் படுத்தியுள்ளோம். அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி என்பது எங்களது முதன்மையான தாரக மந்திரம்" என்று மோடி பேசி வருகிறார்.

    மோடியின் உரைக்கு இடையே மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்தும் சர்வாதிகாரத்தை நிறுத்துங்கள் என்றும் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கு இடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

    இதற்கிடையே எதிர்க்கட்சியினர் அமைதியாக இருக்குமாறு மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கோபத்துடன் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    • பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.
    • டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று 4 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8 முறை சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஆஜராகாத நிலையில் கெஜ்ரிவால் வீட்டுக்கு சோதனை வாரண்டுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. 31ம் தேதி சிறைக்கு திரும்ப வேண்டும் என கூறியது.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று 4 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், சுப்ரீம் கோர்ட் எனக்கு 21 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. நாளை 21 நாட்கள் நிறைவடைய உள்ளது. நாளை மறுநாள் சரணடைய வேண்டும். நாளை மறுநாள் மீண்டும் திகார் சிறைக்குச் செல்வேன்.

    இந்த முறை எவ்வளவு காலம் சிறையில் அடைப்பார்கள் என தெரியவில்லை. ஆனால் என் உள்ளம் உயர்ந்தது. சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற நான் சிறைக்கு செல்கிறேன். இதற்காக நான் பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

    ×