search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala congress"

    • கர்னல் நகரில் போடப்பட்ட ரோடுகள் மிகவும் மோசமாக உள்ளது என பல புகார்கள் வந்தன.
    • கொட்டும் மழையில் மோசமான சாலைகளில் தாரை கொட்டி சாலைகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன.

    அரியானாவில் உள்ள கர்னல் நகரில் போடப்பட்ட ரோடுகள் மிகவும் மோசமாக உள்ளது என்று இந்தாண்டு பல்வேறு புகார்கள் வந்தன.

    இந்நிலையில், கொட்டும் மழையில் கர்னல் நகரில் உள்ள மோசமான சாலைகளில் தாரை கொட்டி சாலைகள் சரிசெய்யப்பட்டு வரும் வீடியோவை கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    அந்த பதிவில், அரசு ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று யார் சொன்னது. ஹரியானாவில் உள்ள கர்னல் நகரில் போர்க்கால அடிப்படையில் மோசமான சாலைகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன. சிறப்பான வேலை நரேந்தர் ஜி" என்று கேரளா காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது.

    • கீழ் படுக்கையில் படுத்திருந்த அலிகான் மீது நடுப் படுக்கை உடைந்து விழுந்தது.
    • இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே அமைச்சரை கேரளா காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    எர்ணாகுளம் - நிஸாமுதீன் விரைவு ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில், படுக்கை விழுந்ததில் கழுத்தில் படுகாயமடைந்த கேரளாவைச் சேர்ந்த அலிகான் (62) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    கீழ் படுக்கையில் படுத்திருந்த அலிகான் மீது நடுப் படுக்கை உடைந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

    ஆனால் நடு படுக்கை உடைந்து விழவில்லை, மற்றொரு பயணி சரியாக சங்கிலி மாட்டாமல் சென்றதால், நடுப் படுக்கை வேகமாக மோதியதில் கீழ்ப் படுக்கையில் படுத்திருந்த அலிகான் காயமடைந்துள்ளார் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,

    ரெயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மோடி அரசின் கீழ் இப்படி தான் உள்ளது.

    • போதுமான ரெயில்கள் அல்லது இருக்கைகள் இல்லை.
    • நீங்கள் பாதுகாப்பாக ரெயிலில் ஏற முடியாது.
    • நீங்கள் ரெயிலில் ஏற முடிந்தால், இருக்கை இருக்காது.
    • உங்களுக்கு ரெயிலில் இருக்கை கிடைத்தாலும், ரெயில் விபத்து, 'இருக்கை விழுந்து விபத்து' போன்றவற்றில் நீங்கள் கொல்லப்படலாம்"

    என்று பதிவிட்டுள்ளது.

    • நீட் தேர்வு என்பது ஆங்கில வழி, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மட்டுமே பெரிதும் சாதகமாக இருக்கிறது.
    • ஏழை மாணவர்களின் மருத்துவ உரிமையை முற்றிலும் இந்த முறை மறுக்கிறது.

    அண்மையில் நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. நீட் தேர்வுத்தாள் லீக் ஆனது என்ற குற்றச்சாட்டிலிருந்து மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது வரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    கடந்த ஜூன் 4-ந்தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றார்கள். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 67 மாணவர்கள் எப்படி முதல் மதிப்பெண் எடுக்க முடியும் என கேள்வி எழுப்பினர்.

    அதனைத் தொடர்ந்து கூட்டி கழித்து பார்த்தாலும் எடுக்க முடியாத 718 மற்றும் 719 போன்ற மதிப்பெண்களை ஏராளமானோர் பெற்றிருந்தனர். இது தொடர்பாக மாணவர்கள் கேள்வி எழுப்பியபோதுதான், கடந்த முறை சில மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுத சுமார் 30 நிமிடங்கள் வரை காலதாமதம் ஆனது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது என தேசிய தேர்தல் முகமை (NTA) தெரிவித்தது. இதனால் மாணவர்கள் கொதித்தெழுந்தனர்.

    தமிழக முதல்வர் முக ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான திமுக நிலைப்பாட்டை இந்த முடிவு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. நுழைவுத் தேர்வு சமூக நீதி மற்றும் கூட்டாட்சிக்கு எதிரானது என்று மீண்டும் வலியுறுத்தினார்.

    இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு சொல்வது தான் சரி என்று கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,

    "நீட் தேர்வு என்பது ஆங்கில வழி, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மட்டுமே பெரிதும் சாதகமாக இருக்கும் ஒரு முறை என தமிழ்நாடு அரசு மேற்கொண்ட ஆய்வின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. உள்ளூர் நடுத்தர பள்ளிகளில் படித்து வரும் ஏழை மாணவர்களின் மருத்துவ உரிமையை முற்றிலும் இந்த முறை மறுக்கிறது. 2017-ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு எழுப்பி வரும் குரல் இதுதான். இதே போன்ற புள்ளிவிவரங்கள் மற்ற மாநிலங்களில் இருந்தும் சேகரிக்கப்பட வேண்டும்" என்று கேரள காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

    • ரெயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என கேரள காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
    • இந்தக் கோரிக்கையை ரெயில்வே அமைச்சகம் புறக்கணிப்பதாக புகார் தெரிவித்தது.

    திருவனந்தபுரம்:

    இந்திய மக்கள் தொகையை கணக்கில் கொண்டு ரெயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என கேரள காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் தங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதாக அக்கட்சி புகார் தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக குரல் கொடுக்க வேண்டும் என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடம் கேரள காங்கிரஸ் உதவி கேட்டிருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

    இதுதொடர்பாக, கேரள காங்கிரஸ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அதிக கட்டணம் கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் பெரும்பாலும் காலியாகவே இயங்கி வருகிறது. இந்திய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு ரெயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளது.

    மேலும் அந்தப் பதிவில், கொளுத்தும் வெயிலுக்கு நடுவே கூட்ட நெரிசலில் மக்கள் ரெயிலில் பயணிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்ட கேரள காங்கிரஸ், அந்தப் பதிவில் அமிதாப் பச்சனை டேக் செய்துள்ளது.

    அதில், மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பிரபலங்களின் கோரிக்கைகளுக்கு உடனே பதிலளிப்பார் என்பதால் சமூக காரணங்களுக்காக இந்த விவகாரம் குறித்து அமிதாப் பச்சன் டுவீட் செய்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடியை கேரள காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் புகழ்ந்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அப்துல்லா குட்டி. இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து எழுதி உள்ளார்.

    அதில், “மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றி, அவருடைய வழியில் ஆட்சி நடத்தி வருவதால் தான் நரேந்திர மோடியால் பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற முடிந்தது. மோடியின் தூய்மை இந்தியா திட்டம், இலவச எரிவாயு திட்டம் போன்றவை ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, மோடியின் வளர்ச்சி திட்டங்களால் கிடைத்தது” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

    இவருடைய இந்த பதிவு காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அப்துல்லா குட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி.யாக இருந்த போது குஜராத்தில் மோடியின் வளர்ச்சி திட்டங்களை புகழ்ந்ததால் அக்கட்சியில் இருந்து 2009-ம் ஆண்டு வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்து அவர் எம்.எல்.ஏ. ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக விலகி இருக்கும் கே.எம்.மாணி கூட்டணிக்கு ராஜ்யசபா சீட்டை காங்கிரஸ் தலைமை ஒதுக்கியுள்ளது அம்மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. #KeralaCongress
    திருவனந்தபுரம்:

    மாநிலங்களவை துணை சபாநாயகர் குரியன் உள்ளிட்ட கேரளாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மூன்று எம்.பி.க்களின் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைய உள்ளது. தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டு எம்.பி.க்களை பெற முடியும். மீதமுள்ள ஒரு எம்.பி காங்கிரஸ் கட்சி பெற முடியும். குரியனை மீண்டும் தேர்வு செய்ய முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    77 வயதாகும் குரியனை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்ப விரும்பவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் பால்ராம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளிப்படையாக கருத்து பதிவிட்டுள்ளார். 1980-ம் ஆண்டில் இருந்து எம்.பி.யாக இருக்கும் அவருக்கு ஓய்வளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மற்ற தலைவர்களில் யாருக்கேனும் ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து இரண்டாண்டுகளாக விலகி இருக்கும் முன்னாள் மந்திரி கே.எம்.மாணியின் கட்சிக்கு சீட் ஒதுக்கப்பட்டது.



    காங்கிரஸ் தலைமையின் இந்த முடிவுக்கு அம்மாநில காங்கிரஸில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அம்மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நிதி மந்திரியாக இருந்த மாணி பார் ஊழல் வழக்கில் சிக்கியது அக்கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இதனால், அவருக்கு சீட் ஒதுக்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது.

    ஆனால், கே.எம். மாணியின் கட்சி கனிசமான கிறிஸ்தவர்களின் ஓட்டு வங்கியை வைத்துள்ளதால், அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு அவரது கட்சிக்கு காங்கிரஸ் தலைமை சீட் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டதை அடுத்து கே.எம்.மாணியின் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
    செங்கனூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் தோல்வியடைந்துள்ளதை அடுத்து, மாநில தலைமை உள்ளிட்ட பலரை மாற்ற ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #KeralaCongress
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சமீபத்தில் நடந்த செங்கனூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரிடம் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். காங்கிரசுக்கு அதிக செல்வாக்கு உள்ள இந்த தொகுதியில் தோல்வியடைந்தது அக்கட்சியின் மாநில தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மாநிலங்களவை துணை சபாநாயகர் குரியன் உள்ளிட்ட மூன்று எம்.பி.க்களின் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைய உள்ளது. தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டு எம்.பி.க்களை பெற முடியும். மீதமுள்ள ஒரு எம்.பி காங்கிரஸ் கட்சி பெற முடியும். குரியனை மீண்டும் தேர்வு செய்ய முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    77 வயதாகும் குரியனை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்ப விரும்பவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் பால்ராம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளிப்படையாக கருத்து பதிவிட்டுள்ளார். 1380-ம் ஆண்டில் இருந்து எம்.பி.யாக இருக்கும் அவருக்கு ஓய்வளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், தற்போது மாநில தலைவராக இருக்கும் ஹசன் மாற்றப்பட்டு இளம் தலைவர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சோனியா காந்தியின் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருக்கும் ராகுல் காந்தி நாடு திரும்பிய உடன் புதிய தலைவர் நியமனம் இருக்கும் என தெரிகிறது.

    அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இரண்டாம் கட்ட தலைவர்களையும் மாற்ற தேசிய தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    ×