search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "News"

    • நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
    • பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வெள்ளக் காடாக மாறிய கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிக முகாமில் அரசு தங்க வைத்துள்ளது.

    பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நில சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் பல இடங்களில் நீர் தேக்கம் அப்படியே இருப்பதனால். நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடலூர் மற்றும் பந்தலூரில் கடந்த 4 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து இருந்த நிலையில் இன்றும் பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை அறிவித்துள்ளார்.

    • மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,
    • இப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் பட புகழ் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்.

    மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், `கைதி', `மாஸ்டர்', `விக்ரம்' மற்றும் `லியோ' படங்களை இயக்கி குறுகிய காலத்திலேயே பிரபல இயக்குனரானார்.

    தற்போது ரஜினியின் 171 -வது படமான கூலி திரைப்படத்தை இயக்கவுள்ளார். திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. படங்கள் இயக்குவது மட்டுமல்லாமல் ஜி ஸ்குவாட் (G Squad)' தயாரிப்பு என்ற பெயரிலான சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 2023 -ல் 'பைட் கிளப்' மூலம் தயாரிப்பாளரானார்.

    அதைத்தொடர்ந்து 'பென்ஸ்' என்ற புதிய படத்தை தயாரிக்கவுள்ளார் லோகேஷ். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

    இப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் பட புகழ் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படத்தின் கூடுதல் அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தில் ஃபகத் பாசில் மற்றும் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • செல்போன் உபயோகிக்கும் நேரத்தை கணக்கெடுத்து பார்த்தால் குறைந்தது 3-4 மணிநேரமாவது ஸ்கிரீனில் கழிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.
    • ஸ்மார்ட்போன் செயலியின் தயவோடு தான் இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

    தற்போதைய இளைஞர்கள் எந்நேரமும் செல்போனில்தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஒவ்வொருத்தரின் செல்போன் உபயோகிக்கும் நேரத்தை கணக்கெடுத்து பார்த்தால் குறைந்தது 3-4 மணிநேரமாவது ஸ்கிரீனில் கழிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.

    இன்றைய இளம் பருவத்தினர், சக மனிதர்களிடம் முகம் கொடுத்து பேசுவதை விட போன் மெசெஜ் மூலம் மற்றவர்களிடம் பேசுவதை விரும்புகிறார்கள். இதனாலேயே மொபைல் செயலிகளான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக், ஸ்னாப்சாட் போன்றவை அதிகம் பிரபலமாக உள்ளன.

    ஸ்மார்ட்போன் செயலியின் தயவோடு தான் இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார்போல் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் லட்சக்கணக்கான ஆப்ஸ்கள் கிடைக்கின்றன.

    இதுபோன்று கிடைக்கும் செயலிகளை பெரும்பாலானோர் உபயோகித்து வருகின்றனர். இந்த நிலையில், மெசெஜிங் செயலியால் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

    மகாராஷட்ராவில் உள்ள தானே மாவட்டத்தில் வசித்து வந்த 16 வயது சிறுமி, அவருடைய தந்தை மொபைலில் ஸ்னாப்சாட் செயலியை தரவிறக்கம் செய்ய அனுமதிக்காததால் கோபம் அடைந்தார். இதையடுத்து சம்பவ நாளன்று குடும்பத்தில் அனைவரும் உறங்கியப்பின் அவளது பெட்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிறுமி தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொழில்நுட்ப வளர்ச்சி பல எல்லைகளை கடந்து வரும் சூழலில், அதன் மீது கொண்ட காதலால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் துயரம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


    தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனே இந்த 9152987821 எண்ணுக்கு டயல் செய்யுங்கள்.

    • சுந்தர் சி இயக்கத்தில் மே 3 ஆம் தேதி வெளியாகியது அரண்மனை 4 திரைப்படம்.
    • ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குஷ்பு சார்பில் அவ்னி சினிமாக்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

    சுந்தர் சி இயக்கத்தில் மே 3 ஆம் தேதி வெளியாகியது அரண்மனை 4 திரைப்படம். இந்த படத்தின் முதல் மூன்று பாகங்களை போன்றே இந்த படத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார். இவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குஷ்பு சார்பில் அவ்னி சினிமாக்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் பாடலான அச்சச்சோ மற்றும் அம்மன் பாடல் ஹிட்டாக அமைந்தது.

    யோகி பாபு, கோவை சரளா மற்றும் விடிவி கணேஷ் கமெடி காட்சிகள் மக்களிடையே மிகவும் ரசிக்க கூடியவையாக் இருந்தது. அரண்மனை மற்ற பாகங்களை விட இந்த பாகத்தில் கிராபிக்ஸ் மற்றும் விஃபெக்ஸ் காட்சிகள் மிகவும் மேன்மையாக உருவாக்கப்பட்டு இருந்தது. இதெல்லாம் படத்தின் கூடுதல் பலம்.

    படம் தமிழின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மற்றும் உலகளவில் வெளியிடப்பட்டது. படம் வெளியாகி 19 முடிவடைந்த நிலையில் படம் இதுவரை உலகளவில் 100 கோடியை வசூலித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படத்தில் அரண்மனை4 வசூலில் முதல் இடத்தில் உள்ளது. தமிழ் நாடில் வெளியிடப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் வசூலை அரணமனை முறியடித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மோகன்லால் L360, லூசிஃபர் 2, எம்புரான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
    • இந்நிலையில் மோகன்லால் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இது இவர் இயக்கும் முதல் படமாகும்.

    மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால். கடந்த ஜனவரி மாதம் லிஜொ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் நடித்தார் மோகன்லால். படம் வெளிவந்து மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து மோகன்லால் L360, லூசிஃபர் 2, எம்புரான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் மோகன்லால் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்திற்கு 'பரோஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.

    குழந்தைகளைக் கவரும் விதமாக உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார். 3டி-யில் உருவாகும் இந்தப் படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது.

    வாஸ்கோட காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்தப் படம் என்கிறார்கள். இந்நிலையில், இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்களிலும் மால்களில் உள்ள திரையரங்குகளில் இன்று ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது

    சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அரண்மனை 4. இந்த படத்தின் முதல் மூன்று பாகங்களை போன்றே இந்த படத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார். இவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குஷ்பு சார்பில் அவ்னி சினிமாக்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். மே 3 { இன்று} திரையரங்குகளில் வெளியானது. நேற்று திரைப்பிரபலங்களுக்கு திரைமுன்னோட்டம் காட்சியிடப்பட்டது. அதைப் பார்த்த அனைவரும் படம் நன்றாகவுள்ளது என கருத்துக்களை பகிர்ந்தனர்.

    சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்களிலும் மால்களில் உள்ள திரையரங்குகளில் இன்று ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் பார்த்த பெரும்பாலானோர் பாசிடிவ் ரிவியுகளை சமூகவலை தளங்களில் பகிர்ந்துக் கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்களிலும் வேகமாக அரண்மனை 4 படத்திற்கு புக்கிங் பதிவாகி வருகிறது.

    சுந்தர்.சி அவரது மற்ற பாகங்களை போலவே இப்படத்தை எடுத்து இருந்தாலும். இந்த பாகத்தில் விஸ்வல் எஃபக்ட்ஸ்களும், நகைச்சுவை காட்சிகள் மற்றும் திகில் காட்சிகள் நன்றாக வொர்க் அவுட் ஆகியுள்ளது.

    சமீபத்தில் தமிழ் படங்களில் ரீரிலீஸ் படங்களே அதிகம் திரையரங்குகளில் ஓடுகிறது கில்லி படத்தின் ரீ ரிலீஸ் மக்களிடம் பெரும் ஆதரவு பெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் முன்பு அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான தீனா, பில்லா போன்ற படங்கள் கில்லியைப் போல் வரவேற்பு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மலையாள திரைப்படங்களுக்கு கிடைத்த ஆதரவு கூட சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களுக்கு கிடைக்கவில்லை.இச்சூழ்நிலையில்  தற்பொழுது அரண்மனை 4 வெளியாகியுள்ளது.

    கோடை விடுமுறைக்கு தக்க சமையத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் திரைப்படமாக இது அமைந்துள்ளது அரண்மனை 4. இப்படத்திற்கு மக்களிடையே பெருமாதரவு பெற்று வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் திரைக்கு வந்து கோடி கணக்கில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
    • அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் அமலாபால். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

    சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் திரைக்கு வந்து கோடி கணக்கில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

    படத்தில் அவர் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

    படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது அவர் நிஜத்தில் கர்ப்பிணியாக கலந்து கொண்டார்.

    அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளதாக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.

    கர்ப்பிணியாக கணவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் கர்ப்பகால உடற்பயிற்சிகள் செய்வது போலவும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மகிழ்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.

     

    கர்ப்பமடைந்து எட்டாவது மாதம் தொடங்க உள்ள நிலையில் அமலா பாலுக்கு தற்போது வளைகாப்பு நடந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த நிகழ்ச்சியில் வடமாநில பாரம்பரிய முறையில் உடை அணிந்து இருக்கும் அமலா பாலுக்கு அவரது குடும்பத்தினர் வளைகாப்பு சடங்குகளை சம்பிரதாய முறைப்படி நடத்தினர்.

    இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். தாய்மை பூரிப்பில் கணவரோடு மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களை அமலாபால் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'சார்பட்டா பரம்பரை' படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன்
    • இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீயான் 62' எனும் திரைப்படத்தில் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.

    'சார்பட்டா பரம்பரை' படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் 'ராயன்' , 'வேட்டையன்' ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் தற்போது 'சீயான்' விக்ரம் நடிப்பில் தயாராகும் 'சீயான் 62' படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீயான் 62' எனும் திரைப்படத்தில் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் லேட்டஸ்டாக நடிகை துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் திறமையான முன்னணி கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதால் 'சீயான் 62' படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

    இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிதம்பரம் தற்பொழுது மலையாளத்தில் படத்தை இயக்கவுள்ளார்.
    • சித்தா இயக்குனர் இயக்கும் சியான் 62 படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார்.

    கடந்த மாதம் சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகிய படம் மஞ்சும்மல் பாய்ஸ். ஒரு மாதம் முழுவதும் எங்கு திரும்பினாலும் மஞ்சும்மல் பாய்ஸ் , மஞ்சும்மல் பாய்ஸ் என்ற பெயர் ஒலித்துக் கொண்டே இருந்தது.

    சமூக வலைத்தளங்களில் 'கண்மணி அன்போடு காதலன்' பாட்டு மிகவும் வைரலாகியது.

    படத்தை பார்த்து பல தமிழ் பிரபலங்களான கமல், ரஜினிகாந்த, விக்ரம் , சித்தார்த் என பலர் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினர். மஞ்சும்மல் பாய்ஸ் படம் இதுவரை 220 கோடி ரூபாய் வசூலித்துல்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    இந்நிலையில் நடிகர் விக்ரம் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குனரான சிதம்பரம் இயக்கத்தில் அடுத்தப்படம் நடிக்கவுள்ளார். சிதம்பரம் தற்பொழுது மலையாளத்தில் படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தை இயக்கி முடித்தப் பின் விக்ரம் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். சியான் 2024 ஆம் ஆண்டு வரிசையாக மிக சுவாரசியமான படங்களில் நடித்து வருகிறார்.

    தங்கலான்,கரிகாலன், கர்ணன், கருடா, என பெரும் படங்களில் நடித்து வருகிறார். சித்தா இயக்குனர் இயக்கும் சியான் 62 படத்தில் தற்பொழுது  நடித்து வருகிறார். 

    சியான் 62 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சிதம்பரம் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புளூ ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்
    • மக்களிடையே நம்பிக்கை நாயகனாக இருக்கிறார் அசோக் செல்வன்

    அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகர்களில் முக்கியமான நபர். 2013 ஆம் ஆண்டு வெளியான சூதுகவ்வும் படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

    2014 ஆம் ஆண்டு வெளியான தெகிடி படத்தில் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். தெகிடி படம் மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. இதற்கு பிறகு ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம், போர் தொழில், போன்ற படங்களில் நடித்தார். போர் தொழில் படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

    அடுத்தடுத்து நல்ல படங்களை தேடி தேர்வு செய்து நடிப்பதால் மக்களிடையே நம்பிக்கை நாயகனாக இருக்கிறார் அசோக் செல்வன். பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜனவரி மாதம் வெளிவந்த படம் புளூ ஸ்டார். அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இப்படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களை கவர்ந்தது.

    புளூ ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். 'எமக்கு தொழில் ரொமேன்ஸ்' என படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர்.

     

    அவந்திகா இப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். பாலாஜி கேசவன் படத்தை இயக்கவுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க டி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி போன்ற பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.

    • ரீ-ரிலீஸ் படங்கள் ரசிகர்களுக்கு வரப் பிரசாதமாக அமைகிறது.
    • ஃப்லிக்ஸ் (iFLICKS) என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது தினத்தந்தி.

    படங்களை திரையரங்குகளில் பார்ப்பதே ஒரு சுகம். மனிதன் எத்தகைய சூழ்நிலையில் இருந்தாலும் அவனை மூன்று மணி நேரம் கவலைகளை மறக்கச் செய்து , அவன் மீண்டும் இயங்குவதற்கான உத்வேகத்தை சினிமா தருகிறது எனலாம். ஒருவன் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்றாலும், நண்பர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்றாலும், தன் காதலியுடன் நேரம் செலவிட வேண்டும் என்றாலும் அவன் திரையரங்கத்திற்கே செல்கிறான். காதல், குடும்பம், நட்பு என மூன்றிலும் பொதுவாக இருக்கும் ஒன்று சினிமா. அதிலும் திரையரங்கம்.

    தற்போது வெளியாகும் படங்கள் எல்லாம் ஒரு மாத இடைவெளிக்கு பின் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதனால் மக்கள் சிலரிடம் படங்களை திரையரங்குகளில் சென்று பார்க்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. முன்னணி நடிகர்களின் படத்திற்கு மட்டும் திரையரங்களில் பார்க்கும் பழக்கம் சமீபத்தில் உருவாகியுள்ளது. இதனால் சாதாரண படங்களும், குறைந்த பட்ஜட் படங்களும் மக்கள் பார்வைக்கு வருவதற்கு முன்னரே காணாமல் போய்விடுகிறது.

    என்னதான் படங்கள் ஓடிடியில் வெளியானாலும் அதனை திரையரங்கில் மக்களுடன் மக்களாக அமர்ந்து பார்க்கும் அனுபவத்தை தருவதில்லை. சமீபத்தில் பல தமிழ்ப் படங்கள் ரீ - ரிலீஸ் செய்யப்படுகிறது. தனுஷ் நடிப்பில் வெளியான 3 , மயக்கம் என்ன, யாரடி நீ மோகினி. கமல் நடித்த வேட்டையாடு விளையாடு, விருமாண்டி. விக்ரம் நடித்த அந்நியன், சாமி. ஜீவா நடிப்பில் வெளிவந்த சிவா மனசுல சக்தி. சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டபோது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைபடம் எல்லாம் 10 - 15 வருடங்களுக்கு முன்னால் வந்த திரைபடமாக் இருந்தாலும், ஓடிடி தளங்களில் இருந்தாலும் கூட மக்கள் திரையரங்குகளில் வந்து பார்க்க விரும்புகின்றனர்.

    படங்கள் வெளியான போது திரையரங்கிற்கு சென்று பார்க்க முடியாமல் போனதால், அப்பொழுது சிறு வயதில் இருந்த காரணத்தினாலும், இம்மாதிரி ரீ-ரிலீஸ் படங்கள் ரசிகர்களுக்கு வரப் பிரசாதமாக அமைகிறது.

    அதனை ஊக்குவிக்கும் வகையில் ஐஃப்லிக்ஸ் (iFLICKS) என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது தினத்தந்தி. இத்தளத்தில் உங்கள் ஊரில் உள்ள திரையரங்குகளைப் பற்றியும், அத்திரையரங்குகளில் என்ன படங்கள் வெளியாகியுள்ளது என்பது பற்றிய தகவல்கள் இருக்கும்.

    மேலும், சமீபத்தில் வெளியான படங்களைப் பற்றியும் அதன் நடிகர்கள், படக்குழுவினர் பற்றிய தகவல்களும், படத்தின் விமர்சனங்களையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

    இப்பொழுது நாம் பட டிக்கெட்டுகளை பெறுவதற்கு கார்ப்பரேட் தளங்களை உபயோகித்து வருகிறோம். அதில் பெரும்பான்மையாக மாலில் உள்ள தியேட்டர்களும், பிரபலமான தியேட்டர்களும் மட்டும் தான் காண்பிக்கப்படுகிறது.

    ஆனால், ஐபில்க்ஸ் தளத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் என்ன படம், எத்தனை மணிக்கு திரையிடப்படும் என்ற தகவல்களை அறிந்துகொள்ள முடியும். பெரிய திரையரங்குகள் முதல், சாதாரண திரையரங்குகள் வரை இதில் பட்டியலிடப்படும். விரைவில் சினிமா டிக்கெட்டுகளை புக்-செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    • 18-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 வரை கணபதி ஹோமம், அபிஷேகம் நடைப்பெற்று ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்துப்படி நடைப்பெற உள்ளது.
    • இரவு 8 மணியளவில் தினமும் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி புறப்பாடு நடைப்பெறும்.

    சேலம்:

    சேலம் ராஜகணபதி கோவிலில் வருகிற 18-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. 18-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 வரை கணபதி ஹோமம், அபிஷேகம் நடைப்பெற்று ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்துப்படி நடைப்பெற உள்ளது.

    இந்த விழாவை முன்னிட்டு 18-ந் தேதி முதல் 12 நாட்களுக்கு காலை, மாலையில் மூலமந்திர ஹோமம், லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 12 மணி வரை மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற உள்ளது.

    இரவு 8 மணியளவில் தினமும் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி புறப்பாடு நடைப்பெறும். மேலும் மாலை வேலையில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளது.

    12-ம் நாள் காலை 7 மணி முதல் 10 மணி வரை மஞ்சள் நீராட்டு, வசந்த உற்சவமும், காலை 10 மணி முதல் 12.30 மணி வரை உற்சவ ஆஸ்தான பூஜைகள், 1008 லிட்டர் பால் அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து புஷ்பாஞ்சலி மற்றும் அன்னதானம் நடைப்பெற உள்ளது.

    எனவே அனைத்து பக்கதர்கள், பொதுமக்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்று இறைவன் அருள் பெற வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா, அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ×