search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seniority"

    • திடீரென அசைவுகள் ஏதுமின்றி பைடன் ஸ்தம்பித்து விடுவதும் வழக்கமாக உள்ளது.
    • ஜோ பைடனின் இந்த தடுமாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம்.

    அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.

    பொருளாதார பிரச்சனையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    81 வயதாகும் ஜோ பபைடன் வயது மூப்பின் காரணமாக சமீப காலங்களாக பொது நிகழ்ச்சிகளில் அவரது பேச்சிலும் நடையிலும் தடுமாற்றம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவின.

    மேலும் நிகழ்ச்சிகளில் திடீரென அசைவுகள் ஏதுமின்றி பைடன் ஸ்தம்பித்து விடுவதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில், இன்று டிரம்புடன் நடந்த விவாதத்தின்போது, கோவிட் பெருந்தொற்று குறித்து பேசுகையில், ஜோ பைடன் சற்று நேரம் அசைவின்றி ஸ்தம்பித்தார்.

    அவர் என்ன செய்கிறார் என்று டிரம்ப் உற்று நோக்கினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த மொத்த விவாதத்த்திலும் ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது. அவரது குரல் தழுதழுத்திருநத்து. சில சமயம் அவர் என்ன பேசுகிறார் என்றே புரியாத சூழல் நிலவியது.

    ஜோ பைடனின் இந்த தடுமாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.

    இந்நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக மிச்செல் ஒபாமா போட்டியிடுவார் என்று குடியரசு கட்சியின் வழங்கறிஞர் டெட் க்ரூஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டிரம்புக்கு பதிலளித்த ஜோ பைடன், My son is not a sucker.. you are a sucker, you are a loser என்று குறிப்பிட்டார்
    • ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்ட அவர்களில் கோல்ப் விளையாட்டில் யார் சிறந்தவர் என்றும் விவாதித்துக்கொண்டனர்.

    அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம்.

    அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.

     பொருளாதார பிரச்சனையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    இந்த விவாதத்தில் பொருளாதாரம், வேலையின்மை, சட்டவிரோத குடியேற்றம், வெளியுறவுக் கொள்கை, கருக்கலைப்பு உரிமைகள், இஸ்ரேல் பாலஸ்தீன போர், கொரோனா தொற்றைக் கையாண்ட விதம் உள்ளிட்ட பலவற்றைக் குறித்தும் அவர்கள் விவாதகித்தனர். பைடன் சீனாவிடம் பணம் பெற்றுக்கொண்டு அமேரிக்காவில் பற்றாக்குறையை உண்டாக்குகிறார் என்று கூறும் அளவுக்கு டிரம்ப் சென்றார். மேலும் ஜோ பைடனின் மகன் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சிக்கியுள்ளதை குறிப்பிட்ட டிரம்புக்கு, My son is not a sucker.. you are sucker, you are a loser என்று டிரம்ப் பாலியல் வழக்கில் சிக்கியுள்ளதை குறிப்பிட்டு ஜோ பைடன் பதிலளித்தார்.

    ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்ட அவர்களில் கோல்ப் விளையாட்டில் யார் சிறந்தவர் என்றும் விவாதித்துக்கொண்டனர். 81 வயதாகும் ஜோ பபைடன் வயது மூப்பின் காரணமாக சமீப காலங்களாக பொது நிகழ்ச்சிகளில் அவரது பேச்சிலும் நடையிலும் தடுமாற்றம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவின.

    மேலும் நிகழ்ச்சிகளில் திடீரென அசைவுகள் ஏதுமின்றி பைடன் ஸ்தம்பித்து விடுவதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில், இன்று டிரம்புடன் நடந்த விவாதத்தின்போது, கோவிட் பெருந்தொற்று குறித்து பேசுகையில், ஜோ பைடன் சற்று நேரம் அசைவின்றி ஸ்தம்பித்தார்.

     

    அவர் என்ன செய்கிறார் என்று டிரம்ப் உற்று நோக்கினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த மொத்த விவாதத்த்திலும் ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது. அவரது குரல் தழுதழுத்திருநத்து. சில சமயம் அவர் என்ன பேசுகிறார் என்றே புரியாத சூழல் நிலவியது.   

    • காவலர் பொதுநல இயக்கம் வலியுறுத்தல்
    • 30 வருடம் பணிமுடித்த உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவியும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை காவலர் பொதுநல இயக்க பொதுச்செயலாளர் கணேசன் புதுவை கவர்னர், உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    6-வது சம்பள கமிஷன் உத்தரவு அடிப்படையில் புதுவை காவல் துறையில் 10 வருடம் பணி முடித்த போலீசாருக்கு ஏட்டு பதவியும், 20 வருடம் பணி முடித்த ஏட்டுக்கு உதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவியும் அதுபோல் 30 வருடம் பணிமுடித்த உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவியும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    கடந்த 2014-ம் அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியும் 6-வது சம்பள கமிஷன் அடிப்படையில் புதுவை போலீசாருக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என்று புதுவை ஐ.ஜி.க்கு உத்தரவிட்டிருந்தார்.

    ஆனால், ஜனாதிபதியின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு விட்டு தற்போது புதுவை காவல் துறையில் நேரடியாக சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு செய்யபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது பணியில் இருக்கும் போலீசாருக்கு வருத்தத்தை அளித்துள்ளது. மேலும் அவர்கள் சிறப்பாக பணி செய்ய முடியாமல் மனசோர்வை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் 10 வருடம் பணிமுடித்த போலீசாருக்கு தலைமை காவலர் (ஏட்டு) பதவி உயர்வு அளித்து வருகிறது.

    அதுபோல் புதுவை காவல்துறையில் நேரடி தேர்வை ரத்து செய்து விட்டு சீனியாரிட்டி அடிப்படையில் போலீசாருக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நவீன வசதியுடன் கூடிய படுக்கை வாங்குவதற்கு ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார்.
    • முதியவருக்கு வீட்டிற்கே வந்து மருத்துவ உதவி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    நாகப்பட்டினம்:

    தமிழக அரசு கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் நூறு வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய வாழ்நாள் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி தமிழகத்தில் 100 வயதை கடந்த 50 ஓய்வூதியர்களில் 1916 -ம் ஆண்டு பிறந்த அதிக வயதுடைய 107 வயதான நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த முதியவர் கோபாலகிருஷ்ணனை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம்.

    தென்னரசு நேரில் சந்தித்தார்.

    அவருக்கு ஓய்வூதிய வாழ்நாள் சான்றை வழங்கிய அமைச்சர் சிறிது நேரம் முதியவரிடம் உரையாடி , முதியவரின் உடல் நலனுக்காக நவீன வசதியுடன் கூடிய படுக்கை வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்கினார்.

    அனைவரும் நலமாக வாழவேண்டும் எனவும், கருணாநிதி எனக்கு வேண்டப்பட்டவர் என்றும் முதிர்ந்த குரலில் உரையாடிய முதியவரின் காலில் விழுந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன் ஆகியோர் ஆசி பெற்றனர்.

    முதியவருக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிய அமைச்சர், தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின்கீழ் முதியவருக்கு வீட்டிற்கே வந்து மருத்துவ உதவி செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில்;-

    எங்கிருந்தாலும் தமிழ் மொழியை யாரும் அழிக்க கூடாது, தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது என்று கூறிய அமைச்சர், இதுபோன்று சம்பவங்கள் தமிழகத்தில் நடப்பது துருதஸ்டமானது என திருவாரூரில் தமிழ் மொழி அழிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த பரிசீலனை நடந்து வருகிறது என்று கூறினார்.

    ×