என் மலர்
நீங்கள் தேடியது "admission"
- மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் சேர்ந்துள்ளனர்.
- ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர்.
தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் 2025- 2026-ஆம் ஆண்டிற்காக மாணவச் சேர்க்கையை மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.
சேர்க்கை தொடங்கியது முதல் கடந்த ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் உட்பட ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள்.
தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல நம் அரசுப்பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமிடும்.
இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
- மானாமதுரை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை 13-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- பயிற்சியின்போது பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிந்தது.
மானாமதுரை அரசு தொழிற் பயிற்சி நிலை யத்தில் 2022-23ம் ஆண்டிற்கான பயிற்சி மாணவர்கள் நேரடி சேர்க்கை வருகிற 13-ந் தேதி வரை நீடிக்கப்பட்டு 2-ம் கட்டமாக நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.
மானாமதுரை அரசு தொழிற் பயிற்சி நிலை யத்தில் உள்ள தொழிற் பிரிவுகளான கம்மியர் மோட்டர் வாகனம், நில அளவையாளர், மின்சாரப் பணியாளர், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர் ஆகிய தொழிற் பிரிவுகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் சேரலாம்.
மாணவர்கள் 13-ந்தேதி வரை மானாமதுரை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், பாலிடெக்னிக் வளாகம், பாப்பாமடையில் நேரில் வருகை தந்து விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறு விண்ணப்பிக்க வரும்போது தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ், அசல் சாதிச் சான்றிதழ், அசல் மாற்றுச்சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பயிற்சியின்போது பயிற்சியாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச பாடப்புத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பஸ்பாஸ், உதவித்தொகை மாதம் ரூ.750 ஆகியவை வழங்கப்படும்.
பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிந்ததும் பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.
மேலும் சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு 9865554672 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் கமிட்டியினர் நடத்த அனுமதிக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
- பிற சமுதாயத்தினருக்கு மரியாதை தரவில்லை என்றும் தெரிகிறது.
மதுரை
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இரு கமிட்டியினருக்கு இடையே பிரச்சினை உருவாகி மாவட்ட நிர்வாகம் மற்றும் கோர்ட்டு வரை சென்றுள்ளது.
இந்த நிலையில் அவனி யாபுரம் அனைத்து சமு தாய கிராம கமிட்டி நிர்வாகிகள் மதுரை வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, அன்புமணி ராமதாஸ் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்சினையை ஆராய்ந்து பார்த்ததில் இங்கு 4-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது என்றும், பின்னர் ஒரே ஜல்லிக்கட்டாக நடத்த அரசு உத்தரவிட்ட பின்னர் கோர்ட்டு வழிகாட்டு தலின்படி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது என்றும் தெரியவந்தது.
இந்த ஜல்லிக்கட்டில் தென்கால் விவசாய கிராம கமிட்டியினர் இருவர் பொருளாதாரம் ஈட்டும் நோக்கத்தில் ஈடுபட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை உறுப்பினராக்கிக் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டுள்ளனர். மேலும் அவர்கள் பிற சமுதாயத்தினருக்கு மரி யாதை தரவில்லை என்றும் தெரிகிறது.
அவனியாபுரம் ஜல்லிக் கட்டு நடத்த தனி நபருக்கோ, தனி ஒரு அமைப்புக்கோ அனுமதி வழங்காமல் இந்த ஜல்லிக்கட்டை அவனியாபுரம் அனைத்து சமுதாயம் உள்ளடக்கிய பொதுமக்கள் கமிட்டியி னருக்கு போட்டியை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நாளை ெதாடங்குகிறது.
- மேலும் காலை 8.15 மணிக்கு பின்னரும், மதியம் 1.15 மணிக்குப் பின்னரும் வருகை தரும் தேவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2022-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 கணினி வழியில், நாளை (3-ந்தேதி) முதல் 8-ந் தேதி வரை முதற்கட்டமாகவும் (ேபட்ச்-1),இ 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 2-வது கட்டமாகவும் (ேபட்ச்-2), 2 கட்டங்களாக காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது.
திருமாஞ்சோலை பாண்டியன் சரஸ்வதி யாதவா பொறியியல் கல்லூரி, காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா செட்டியர் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு நடைபெறும் நாளில் காலையில் தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு 7.30 மணிக்கும், மதியம் தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு 12.30 மணிக்கும் வருகை தர வேண்டும். மேலும் காலை 8.15 மணிக்கு பின்னரும், மதியம் 1.15 மணிக்குப் பின்னரும் வருகை தரும் தேவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நடப்பு கல்வியாண்டு 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- நடப்பு கல்வியாண்டு 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கோவை,
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளில் நடப்பாண்டில் இளங்கலையில் காலியாக உள்ள 1,400 இடங்களை நிரப்ப உடனடி மாணவர் சேர்க்கை வருகிற 20-ந் தேதி நடக்கிறது.
இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:-
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதில், 18 உறுப்பு கல்லூரிகளில் 2 ஆயிரத்து 567 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 4 ஆயிரத்து 413 இடங்களும் உள்ளன.இதற்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 20-ந் தேதி வரை பெறப்பட்டது. மொத்தம் 39 ஆயிரத்து 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனை தொடர்ந்து கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடந்தது.
இதில், பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் 1,400 இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களை உடனடிமாணவர் சேர்க்கையின் (ஸ்பாட் அட்மிஷன்) மூலம் வரும் 20-ந் தேதி நிரப்ப பல்கலைக்கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உடனடி கலந்தாய்வில், பொதுகலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று அதனை தவறவிட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் மற்றும் புதிதாக கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்கள் பங்கேற்கலாம். மாணவர்களின் தரவரிசையின் அடிப்படையில் கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.
மேலும், மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக் கீடு, கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், காலியிடங் களுக்கான அட்டவணை ஆகியவை பல்கலைக்கழகத்தின் www.tnau.ucanapply. com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைமுறையில் காலதாமதம் இருக்காது. ஜூலை 15-ந் தேதி முதல் 30-ந் தேதிக்குள் வகுப்புகள் திறக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அப்ரண்டிஸ் சேர்க்கை முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5மணி வரையில் நடைபெற உள்ளது.
- அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.
திருப்பூர் :
தொழில் பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மத்திய அரசின் பொது பயிற்சி இயக்ககம் சார்பில் கோயம்புத்தூர் மண்டல அளவிலான தொழில் பழகுநர்களுக்கான அப்ரண்டிஸ் சேர்க்கை முகாம் தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 24ந்தேதி காலை 9.30 மணி முதல் மாலை 5மணி வரையில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப உள்ளனர்.
இதில் பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் (என்.எ.சி) வழங்கப்படும். தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் என்.ஏ.சி., பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது.
தொழில் பழகுநர்களுக்கான உதவித்தொகை தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப கிடைக்கும். அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்.சி.வி.டி. எஸ்.சி.வி.டி திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அடிப்படை பயிற்சியுடன் பி.டி.பி வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ள 8, 10,11 மற்றும் 12 -ம் வகுப்பு முடித்த தகுதி வாய்ந்தவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.
மேலும் விபரங்கள் அறியும் பொருட்டு பயிற்சியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் மாவட்ட உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் எண்:115-2வது தளம், காமாட்சியம்மன் கோவில் வீதி பழைய பேருந்து நிலையம் பின்புறம், திருப்பூர் என்ற முகவரிக்கு சென்று நேரிலும் இயலாதவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரத்தை அறிந்து கொள்ளலாம் திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை அலுவலக தொலைபேசி எண்கள் 9499055695, 04212230500, 9944739810, 9894783226, 9499055700, 9499055696 . இத்தகவலை மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- தாக்கப்பட்டதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்ல வேண்டும்.
- ஏப்ரல் முதல் வாரத்தில் உறுப்பினர் சேர்க்கை நடத்துவது.
நீடாமங்கலம்:
வலங்கைமானில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் வட்டாரத் தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. வட்டார செயலாளர் இளங்கோவன் கூட்டத்தின் பொருள் குறித்து விளக்கி பேசினார்.
மாவட்டத் தலைவர் மணி, மாவட்ட மகளிர் அணி சத்தியபாமா, வட்டார மகளிர் அணி செயலாளர் சத்தியசீலா, மாவட்டத் துணைத் தலைவர் தர்மபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் வட்டார பொருளாளர்கள் கணேசன், சங்கராஜ், மாவட்ட பிரதிநிதி தண்டபாணி, கண்ணன், மைய செயலாளர்கள் இரவிசங்கர், லூர்து சேவியர், செந்தில் குமார், கல்வி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இந்த கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் கீழநம்பிபுரம் இந்து அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கடுமையான முறையில் தாக்கப்பட்டதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்ல வேண்டும்.
ஐபெட்டோ அண்ணாமலை கோரிக்கைப்படி தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
ஏப்ரல் முதல் வாரத்தில் உறுப்பினர் சேர்க்கை நடத்துவது ஆகிய தீர்மானங்கள் இயற்றப்பட்டன.முடிவில் வட்டாரப் பொருளாளர் சுந்தரவடிவேலு நன்றி கூறினார்.
இந்த தீர்மானங்களில் படி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்றனர்.
- கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாணவா் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
- பி.டெக், என்ஜினீயரிங், அக்ரிகல்சா், ஆர்க்கிடெக்சா், பி.எஸ்சி, பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., கேட்டரிங், பாரன்சிக் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
ஸ்ரீவில்விபுத்தூர்
ஸ்ரீவில்விபுத்தூர் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் ெதாடக்க விழா பல்கலை வேந்தர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நிறுவனா் கலசலிங்கம் மணிமண்டபத்தில் நடந்தது. பி.டெக், என்ஜினீயரிங், அக்ரிகல்சா், ஆர்க்கிடெக்சா், பி.எஸ்சி, பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., கேட்டரிங், பாரன்சிக் போன்ற படிப்பிற்கான விண்ணப்பங்களை மாணவா்களுக்கு பல்கலை துணைத்தலைவா் எஸ்.சசிஆனந்த் வழங்கினார்.
இணைவேந்தர் டாக்டா் அறிவழகி ஸ்ரீதரன், துணைத் தலைவா் எஸ்.சசிஆனந்த், சுபா ஆனந்த், துணைத் தலைவா் எஸ்.அா்ஜூன் கலசலிங்கம், ஷில்பா அா்ஜூன், ஆலோசகா் ஞானசேகா், துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளா் வாசுதேவன், மாணவா் சோ்க்கை இயக்குநா் லிங்குசாமி, நிதி நிர்வாக அதிகாரி தா்மராஜ் மற்றும் டீன்கள், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், பெற்றோர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.
- சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்ப ழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
- இப்பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் மத்திய அரசால் வழங்கப்படுகின்றது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனி யார் தொழிற்நிறுவனங்க ளில் காலியாக உள்ள தொழிற்பழகுனர் இடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்ப ழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
முகாமில் ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த மாணவர்ள் தங்க ளுக்கு உரிய தொழிற்பழ குனர் இடங்களை தேர்வு செய்து உதவித்தொகை யுடன் தொழிற்பழகுநர் பயிற்சி பெற அழைக்கப்படுகிறார்கள். இப்பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் மத்திய அரசால் வழங்கப்படுகின்றது.
ஏனவே இதுநாள் வரை தொழிற்பழகுனர் பயிற்சி முடிக்காத ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த மாண வர்கள் அனைவரும் தங்க ளது அனைத்து உண்மை சான்றுகள் மற்றும் சுய விவரத்துடன் (பயோ டேட்டாவுடன்) தொழிற்பழ குநர் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் கார்மேகம் கேட்டுகொண்டுள்ளார்.
- வாழப்பாடி யிலுள்ள மருத்துவர் செல்வம்பாள் மருத்துவ மனைக்கு வியாழக்கிழமை இரவு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.
- மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான 22 வயது இளைஞர் ஒருவருடன் நெருங்கி பழகி யதில் கர்ப்பமானார். இது பெற்றோருக்கு தெரிய வந்ததால், வாழப்பாடி யிலுள்ள மருத்துவர் செல்வம்பாள் மருத்துவ மனைக்கு வியாழக்கிழமை இரவு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.
சிறுமியின் வயிற்றில் 7 மாதத்திற்கு மேல் கரு வளர்ந்து விட்டதால், அந்த குறை மாத குழந்தையை, மருத்துவர் செல்வாம்பாள் பிரசவிக்க செய்ததாக கூறப்படுகிறது. குழந்தையை பிரசவித்த பிறகு சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட தால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, வாழப்பாடி அரசு தலைமை மருத்துவர் ஜெய செல்வி, பேளூர் வட்டார மருத்துவ அலுவ லர் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர், மருத்துவர் செல்வாம்பா ளிடம் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, திருமண மாகாத சிறுமிக்கு பிரசவ சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் செல்வம்பாள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வாழப்பாடி அரசு தலைமை மருத்துவர் ஜெயசெல்வி வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.
இவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீஸார், சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர் செல்வாம்பாளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவு செய்தனர்.
இதுகுறித்து தகவல் தெரியவந்ததால் சோர்ந்து காணப்பட்ட மருத்துவர் செல்வாம்பாள், நேற்றிரவு வாழப்பாடியிலுள்ள அவரது மருத்துவமனை யிலேயே மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக இவர் அரசு மருத்துமனையில் அனும திக்கப்பட்டுள்ளதால், போலீசார் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.வாழப்பாடியில் சிறுமி உயிரிழந்த வழக்கு விசாரணை:
மயங்கி விழுந்த பெண் மருத்துவர் மருத்துமனையில் அனுமதி
- நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
- நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொ ழிதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நடப்பு 2023-24-ம் கல்வி ஆண்டில், இந்த கல்லூரியில் மருத்து வம் சாராத பட்டப்ப டிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த கல்வியாண்டில், 3 ஆண்டு பி.எஸ்சி பட்டப்படிப்புகளான, கதிரியக்கம் மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம் (ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி), சுவாச சிகிச்சை (ரெஸ்பி ரேசன் தெராபி), அறுவை அரங்கம் மற்றும் மயக்க மருந்து தொழில்நுட்பம் (ஆபரேசன் தியேட்டர் மற்றும் அனெஸ்தீசியா டெக்னாலஜி), மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் (மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி), சிக்கலான பராமரிப்பு தொழில் நுட்பம் (கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி) ஆகிய 5 இளநிலை பட்டப்படிப்பு களுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.
2 ஆண்டுகள் படிக்கும் டிப்ளமோ பிரிவில், டிப்ளமோ இன் ரேடியோ டயாக்னோசிஸ் டெக்னா லஜி, டிப்ளமோ இன் மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.
மேலும், 1 ஆண்டு படிக்கும், அவசர சிகிச்சை தொழில்நுட்பவியலாளர் (எமர்ஜென்சி கேர் டெக்னீசியன்), மயக்க மருந்து தொழில்நுட்ப வியலாளர் (அனெஸ்தீ சியா டெக்னீசியன்), ஆப ரேசன் தியேட்டர் தொழில்நுட்பவியலாளர் (ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியசன்), எலும்பி யல் தொழில்நுட்பவிய லளர் (ஆர்த்தோபோடிக் டெக்னீசியன்), பல்நோக்கு மருத்துவ பணியாளர் (மல்டி பர்ப்பஸ் ஆஸ்பிட்டல் ஒர்க்கர்) ஆகிய 5 சான்றிதழ் படிப்புகளுக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த பாடங்கள் சேர்க்கை சம்மந்தமான விபரங்களை https://tnmedicalselection.net என்ற வெப்சைட்டில் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க லாம் அல்லது நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாராத 16 படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை
- சிவகங்கை தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
- rte.tnschool.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ள தாவது:-
2023-24-ம் கல்வியாண்டிற்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 சட்டத்தின்படி 2023-24-ம் கல்வியாண்டிற்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பிலும், 1-ம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் 1-ம் வகுப்பிலும் சேர்க்கைக்கு வருகிற 20-ந்தேதி முதல் மே 18-ந்தேதி வரை rte.tnschool.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பலகையிலும் மே 21-ந்தேதி அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.இத்திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி. வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2019 முதல் 31.7.2020-க்குள்ளாகவும், 1-ம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2017 முதல் 31.7.2018-க்குள்ளாகவும் பிறந்திருக்க வேண்டும். பெற்றோர், விண்ணப்பதாரர்கள் பிறப்புச்சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்க சாதிச்சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ், நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் கீழ் உள்ள வருமான சான்றிதழ், இருப்பிடச்சான்று ஆகியவைகளை உரிய அலுவலரிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், முதன்மை கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை), மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை), வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 12 வட்டார வள மைய அலுவலங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளியில் 23.5.2023 அன்று குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தெரிவு செய்யப்படுவர். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் 24.5.2023 அன்று இணைய தளத்திலும் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். சோ்க்கைக்குத் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை 29.05.2023-க்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சோ்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.