என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annual Festival"

    • இத்திருப்பலியில் உலக அமைதிக்காகவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழிந்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.
    • தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டு மாலை, திருப்பலிஉள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலாடு துறை மறைவட்ட அதிபர் பேரருட் தார்சிஸ் ராஜ் அடிகளார் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடைபெற்றது. உதவி பங்குத்தந்தை மைக்கில் டைசன் அடிகளார் கொடி பவனியை வழிநடத்தினார்.

    வேளாங்கண்ணி திருத்தல பேராலய அதிபர் பேரருட் இருதயராஜ் அடிகளார் கொடியை புனிதம் செய்து புனித சவேரியாரின் திருஉருவ கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, ஆலயத்தில் சிறப்புதிருப்பலி நடை பெற்றது. அறுவடை மிகுதி வேலையாட்களோ குறைவு என்ற இறைவார்த்தையை மையமாக வைத்து நடைபெற்ற முதல் நாள் திருவிழா திருப்பலியை புனித மரியாயின் மாசற்ற இருதய சபை கன்னியர்கள், புனித பவுல் தொடக்கப்பள்ளி, புனித பவுல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியினர், பங்கு மக்களோடு இணைந்து சிறப்பித்தனர்.

    இத்திருப்பலியில் உலக அமைதிக்காகவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழிந்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.

    இதில் அருட்தந்தை யர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், வின்சென்ட் தே பவுல் சபையினர், இளையோர் இயக்கத்தினர், மரியாயின் சேனையினர், அன்பிய குழுவினர், பாடகற் குழுவினர், இறைமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கொடியேற்றத்துடன் தொடங்கிய புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டு மாலை, திருப்பலிஉள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகி ன்றன.

    வருகின்ற டிசம்பர் 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது.

    டிசம்பர் 3ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறவு ள்ளது.

    விழாவிற்கான ஏற்பா டுகளை மயிலாடுதுறை மறை வட்ட அதிபர் பங்குத்தந்தை பேரருட் தார்சிஸ் அடிகளார் தலைமையில் விழாக்கு ழுவினர் மற்றும்பங்கு மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • அரசின் திருக்கல்யாண மண்டபத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது.
    • கோமள மடத்தின் ஸ்ரீ தேசிகந்திரா சுவாமிகளும், தேனாடு சீமை பார் பத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் கெங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அவ்வூர் தூனேரி ஹட்டியில் செல்வவிநாயகர் திருக்கோவில் அருகில் அரசின் திருக்கல்யாண மண்டபத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் ஊர் பொதுச் செயலர் விசுவநாதன் வரவேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் சிறப்பு அழைப்பாளராக கோமள மடத்தின் ஸ்ரீ தேசிகந்திரா சுவாமிகளும், தேனாடு சீமை பார் பத்தி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட வீர சைவ லிங்காயத்தர் சமுதாயத்தின் முன்னேற்ற சங்கத்தின் தலைவர், செயலர் மற்றும் பொருளாளர் குயின் சோலை, இட்டக்கல், அவ்வூர், ஹட்டியின் ஊர் தலைவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடி வித்யாகிரி பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • இதில் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வித்யாகிரி பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் க நடைபெற்றது. விழாவில் வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சுவாமிநாதன் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் ஆண்டறிக்கை வாசித்தார். வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணன் மற்றும் பொருளாளர் ஹாஜி முகம்மது மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மற்றும் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை மற்றும் என்.சி.சி. கமாண்டிங் ஆபீசர் ரஜ்னீஷ் பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி னர். பின்னர் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் ஆசிரிய- ஆசிரியைகள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் முதல்நாள் நடைபெற்ற கே.ஜி. மழலையர் பள்ளி மாணவர்க ளுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் காட்வின் சந்தீப், டாக்டர் குமரேசன், டாக்டர் கிரிதர்முத்து மற்றும் பொறி யாளர் கலைமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கே.ஜி. மழலையர் பள்ளி மாண வர்களுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    பின்னர் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. ஆசிரியை ஜோசபின் நன்றி கூறினார். இதில் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • நாடார் வித்தியா சாலை நடுநிலைப்பள்ளி-நாடார் மேல்நிலைப்பள்ளியில் 104-வது ஆண்டு விழா விளையாட்டு போட்டி நடந்தது.
    • முடிவில் ஆசிரியை சபிதா நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை தெற்குவாசல் நாடார் வித்தியாவிருத்தி சங்கம் உறவின் முறைக்குபாத்தியப்பட்ட நாடார் வித்தியாசாலை நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி 104-வது ஆண்டு விழா மற்றும் ஆண்டு விழா நடந்தது.

    53-வது வார்டு உறுப்பினர் அருண்குமார், உதவி பொறியாளர் ராம்சுப்பு ஆகியோர் தொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். பள்ளி செயலாளர் குணசேகரன், உறவின் முறை தலைவர் கணபதி ஆகியோர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

    பேரணி காமராஜர் விளையாட்டு திடலில் தொடங்கி மதுரை கல்லூரி விளையாட்டு மைதானம் வரை நடந்தது. அப்போது மாணவர்கள் அனைவருக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முழக்கங்களை எழுப்பினர். நாடார் வித்தியாசாலை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காந்திபாய் சுவாமியடியாள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையர் (சட்டம், ஒழுங்கு) ஜெகநாதன் தேசிய கொடியை ஏற்றினார்.வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் ஒலிம்பிக் கொடியை ஏற்றினார். பள்ளி கொடியை பள்ளி செயலாளர் குணசேகரன் ஏற்றினார். சந்திரசேகரன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.

    வண்ண பலூன்கள் மற்றும் புறாக்களை பறக்கவிட்டும், பாரம்பரிய ஒயிலாட்டத்துடன் விளையாட்டு போட்டிகள் தொடங்கின. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பின்னர் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி செயலாளர் குணசேகரன் வரவேற்று பேசினார்.

    உறவின் முறை தலைவர் கணபதி, பொருளாளர் ராஜன், செயலாளர் மயில்ராஜன், துணைத்தலைவர் ரமேஷ்பாபு, துணை செயலாளர் அருஞ்சுனை ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக்குழு தலைவர் பார்த்திபன் தலைமையுரை ஆற்றினார். வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் வாழ்த்தி பேசினார்.

    நாடார் வித்தியா சாலை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் நல்லாசிரியர் காந்திபாய் சுவாடியடியாள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் நாகநாதன் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் ஆசிரியை சபிதா நன்றி கூறினார்.

    • அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • ஆசிரியை புஷ்பா நன்றி கூறினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியின் 85-வது ஆண்டு விழா வட்டாரக் கல்வி அலுவலர் புல்லாணி தலைமையில் நடந்தது. யூனியன் சேர்மன் முகமது முக்தார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக், பேரூராட்சி சேர்மன் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மஹ்ஜபின் சல்மா, சமீமா பானு, கவுன்சிலர்கள் தாஸ், பெரியசாமி, ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா, இந்து பரிபாலன சபை தலைவர் ராஜசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியை சுபஸ்ரீ வரவேற்றார்.

    தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பாடல், பட்டிமன்றம், கரகாட்டம், எண்ணும், எழுத்தும் உள்பட பல நிகழ்ச்சிகள் நடந்தன. பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஜெயந்தன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை புஷ்பா நன்றி கூறினார்.

    • பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
    • தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    பாவூர்சத்திரம்:

    பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. கீழப்பாவூர் தமிழ் இலக்கிய மன்ற தலைவர் செல்வன் தலைமை தாங்கினார். வக்கீல் அருள், பால்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் முப்புடாதிதேவி வரவேற்றார். ஆசிரியை பேச்சியம்மாள் ஆண்டறிக்கை வாசித்தார். கவுரவ விருந்தினராக பொன்கணேசன் பங்கேற்றார்.

    சிறப்பு விருந்தினராக பழனிநாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கி பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருக்குறள், பழமொழிகள், ஆத்திச்சூடி ஆகியனவற்றை மழலை குழந்தைகள் ஒப்புவித்தனர்.யோகா நிகழ்ச்சிகள் ஆசிரியர் குமார் முன்னிலையில் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆசிரியைகள் சந்தியா, தேவி, பொன்மலர், மகாலட்சுமி, மாரிச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார்

    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • 3 நாட்கள் நடைபெற்ற ஆண்டு விழாவில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மண்வயல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமாதேஸ்வர் கோவிலில் ஆண்டு திருவிழா வெகு கோலகலமாக நடைபெற்றது

    சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆண்டு விழா மகா கணபதி யாகத்துடன் தொடங்கியது. வாத்திய முழக்கங்களுடன் கோழிகண்டியில் தொடங்கி மாதேஸ்வரர் கோவிலில் முடிவடைந்தது.

    3 நாட்கள் நடைபெற்ற ஆண்டு விழாவில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா குழு தலைவர் கே.கே.கங்காதரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழாவில் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்

    • தொண்டி அருகே பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • பெற்றோர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள சித்தூர் வாடி ஆர்.சி. தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வின்சென்ட் அன்பரசு தலைமையில் நடந்தது.

    தலைமை ஆசிரியர் சுசைராஜ் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். தாளாளர் கிளமெண்ட் ராசா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுரேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர், அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

    மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியை பைலோன் மேரி நன்றி கூறினார்.பெற்றோர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.

    • கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
    • ஆசிரியை ராமஜோதி ஆவுடையம்மாள் நன்றி கூறினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லபுத்தூர் அருகேயுள்ள கொங்கலா புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா தலைமை ஆசிரியை மேரி தலைமை யில் நடைபெற்றது.

    டி.மானகசேரி ஊராட்சி மன்றத்தலைவி சுபிதா மாயக்கண்ணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணித பட்டதாரி ஆசிரியர் கார்த்தி கேயன் வரவேற்றார். ஆசிரியை ஆனந்தவல்லி ஆண்டறிக்கை வாசித்தார்.

    மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. மேலும் மாநில தலைமை கராத்தே பயிற்சி யாளர் சென்சாய் செபஸ்தி யான் தலைமையி்ல் மாணவிகள் கராத்தே சாகச நிகழ்ச்சி நடத்திக்காட்டினர்.

    கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.

    விழாவில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ், தன்னார்வலர்கள் வளர்மதி, வேல்துரைச்சி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்ட னர். ஆசிரியை ராமஜோதி ஆவுடையம்மாள் நன்றி கூறினார்.

    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • ஆண்டு விழா மகா கணபதி யாகத்துடன் தொடங்கியது..

     ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மண்வயல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமாதேஸ்வர் கோவிலில் ஆண்டு திருவிழா வெகு கோலகலமாக நடைபெற்றது.

    சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆண்டு விழா மகா கணபதி யாகத்துடன் தொடங்கியது. வாத்திய முழக்கங்களுடன் கோழிகண்டியில் தொடங்கி மாதேஸ்வரர் கோவிலில் முடிவடைந்தது.

    3 நாட்கள் நடைபெற்ற ஆண்டு விழாவில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா குழு தலைவர் கே.கே.கங்காதரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழாவில் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டியில் உள்ள காந்திஜி அரசு பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சமூக ஆர்வலர் ஸ்ரீதர் ரங்கராஜன் பரிசு வழங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூராட்சி பொட்டுலுப்பட்டி அரசு உதவி பெறும் காந்திஜி ஆரம்பப்பள்ளியின் 70-வது ஆண்டு விழா நடந்தது. செயலாளர் நாகேசுவரன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ஷாஜகான், வட்டார வளமைய (பொறுப்பு) மேற்பார்வை யாளர் தமிழ்செல்வி, பேரூராட்சி கவுன்சிலர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வி குழு தலைவர் தனபால் வரவேற்றார். தலைமை ஆசிரியர் வேங்கடலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். தேர்வு மற்றும் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சமூக ஆர்வலர் ஸ்ரீதர் ரங்கராஜன் பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் ஆசிர்வாதம் பீட்டர், எஸ்தர்டார்த்தி மற்றும் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆனந்தி நன்றி கூறினார்.

    • காரைக்குடி சரஸ்வதி ஆரம்ப பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • ஆசிரியைகள் தமிழ்செல்வி, ஹேமலதா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    காரைக்குடி

    காரைக்குடி முத்துப் பட்டினம் சரஸ்வதி ஆரம்பப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஆசிரியை ஜானகி தேவி வரவேற்றார். தலைமை ஆசிரியை மீனாள் தலைமை தாங்கினார்.

    பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் பிரீத்தா, துணை தலைவர் அஜீஸா முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட அளவிலான ரீடிங் மராத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற இந்த பள்ளியின் முன்னாள் மாணவி மதிசாய்ஸ்ரீ பங்கேற்று பேசினார். இவர் மத்திய அரசின் என்.எம்.எம்.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று கல்வி ஊக்கத்தொகை ரூ.48ஆயிரம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவில் மாணவ மாணவிகளின் நடனம், மாறுவேடப் போட்டி உள்பட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியைகள் தமிழ்செல்வி, ஹேமலதா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×